லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனும் லயன் காமிக்ஸும்

லண்டனும் லயன் காமிக்ஸும்

Memories (2013) - Malayalam Movie Review

Memories (2013) - Malayalam Movie Review

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

Tuesday, January 26, 2016

லண்டனும் லயன் காமிக்ஸும்...

வணக்கம் நண்பர்களே,

எனது ப்ளாக்கின் மீள்வரவின் முதல் காமிக்ஸ் சார்ந்த பதிவு.

போனவருடம் ஆகஸ்ட் மாதம் பணி நிமித்தமாக இங்கிலாந்து செல்ல வாய்ப்பு கிடைத்த பொழுது, மனதில் எழுந்த முதல் எண்ணம் அங்கு சென்று பழைய புத்தக கடைகளை கண்டு பிடித்து மாயாவி மற்றும் ப்ளீட்வே புத்தகங்கள் சில வாங்க முயற்சி செய்ய வேண்டும் என்பதே.

பின் இங்கிலாந்து லண்டன் மாநகரம் வந்திறங்கிய பொழுது நாம் படித்த காமிக்ஸ் ஹீரோக்கள் வாழ்ந்த ஊர் தெரிந்தது. முக்கியமாக கதைகளில் வரும் இரண்டடுக்கு பேருந்துகள் லண்டனிற்கே உரிய ஒன்று. சிவப்பு கலரில் ப்ரமிப்பாக இருந்தது.

இங்கு வந்து செட்டில் ஆகி பணி பளு சற்று குறைந்தபொழுது, கூகிளில் பழைய புத்தக கடைகள் என்று தேடிய பொழுது ஒன்றும் கிடைக்கவில்லை. பின் ப்ளீட்வே புத்தகங்கள் என்று தேடிய பொழுது ஈபே லிங்குகள் கிடைத்தன. ஒரு சில பாரகுடா (லாரன்ஸ்) கதைகள் 10 பவுன்டுகளுக்கு இருந்தது.

சற்றே விலை அதிகம் என்று தோன்றியது. அப்பொழுதுதான் லயன் வருடாந்திர புத்தகங்கள் கண்ணில் பட்டன. விலையும் பாதியாக இருந்தது.
மேலும் பலகதைகள் நிறைந்துள்ளது தெரிந்தது. சரி என ஆர்டர் செய்தேன்.

இரண்டு மூன்று நாட்களில் வந்து சேர்ந்தது. அதனை பார்த்த பொழுது தான் நமது லயன் குண்டு புத்தகங்களுக்கு அது ஒரு ஆரம்பமாக இருந்திருக்கும் என்று. புத்தகத்தை கையில் ஏந்தும் பொழுதே மனதில் ஒருவித சந்தோசமாக இருந்தது.

ஹார்ட் பவுண்ட் அட்டை, பழுப்பு நிற தரமான தாள் என அட்டகாசமாக இருந்தது. அந்த தாளில் கருப்பு வெள்ளை சித்திரங்கள் அருமையாக இருந்தது. பெரும்பாலும் சிறு சித்திரக்கதைகள், மற்றும் ஒரு சில சிறு கதைகள் என கதை கதம்பமாக இருந்தது.

ஆனால் நமது லயன் குண்டு புத்தகங்களின் சிறப்பு, அது பல முழு நீள கதைகள் நிறைந்தாக இருப்பதே. பின் நமது லயனிற்கே உரிய பாக்கெட் சைஸ். ஆனால் லயன் ஆனுவலின் A4 சைஸில் படிக்க அதுவும் ஒரு தனி அனுபவமாக இருந்தது.

ஆர்வத்தில் பார்த்த புத்தகங்கள் எல்லாம் ஆர்டர் செய்தேன். ஆறு புத்தகங்கள் வாங்கியபின் பார்த்தால் ஒரு பெட்டி நிரம்பிவிட்டது. விமானத்தில் 4 பெட்டிகள் தான் கொண்டுவர முடியும், அனுமதிக்கப்பட்ட எடை 80கிலோ தான். வரும்பொழுதே கிட்சென் சாமான்கள் சேர்த்து கஷ்டப்பட்டு தான் கொண்டு வந்தோம்

இதில் போகும்பொழுது உறவினர்களுக்கு வேறு எதாவது வாங்கி செல்லவேண்டும். எப்படி அதை செய்ய போகிறோம் எனபது தான் எனது மனைவியின் இப்பொழுதைய கேள்வி :). அதனால் இனி வேறு புத்தகங்கள் எதுவும் வாங்க முடியாது என்பதே எனது கவலை :(.

நான் வாங்கிய புத்தகங்கள் லயன் Annual  1961(அட்டை கிழிந்த நிலையில்), 1968, 1970, 1972, 1973 மற்றும் 1975. அனைத்து புத்தகங்களிலும் இருந்தது நமது இரும்பு மனிதன் ஆர்ச்சியின் கதை தான். அடுத்து துப்பறியும் ஜிப் நோலனின் இரண்டு பக்க கதைகள். பின் ஒருசில புத்தகங்களில் சிலந்தி மனிதன் ஸ்பைடர் கதைகள் இருந்தது.

ஒரு சில கதைகள் கலரில் ஆர்ட் பேப்பரில் இருந்தது.

புத்தகங்களின் அட்டை மற்றும் ஒருசில உள்ளபக்கங்களின் புகைப்படங்கள் உங்களுக்காக கீழே.








 





மேலும் சில உட்பக்கங்கள் நாளை பகல் வேலையில் அப்லோட் செய்கிறேன்.

சரி இனி குண்டு புத்தகங்கள் வேண்டாம் எதாவது சிறிய புத்தகங்கள் வாங்கலாம் என்று யோசித்தபொழுது நண்பர் மகேஷ் John Havoc புத்தகங்கள் வாங்கி வர முடியுமா என்று கேட்டார். ஆனால் நான் மேலே கூறிய எடை விஷயம் பற்றி நண்பரிடம் கூறி முயற்சி செய்கிறேன் என்று கூறினேன்.

பின்னர் சரி வாங்கி பார்க்கலாம் என்று நண்பர்குக்கு ஒரு புத்தகம் ஆர்டர் செய்தேன், புத்தகத்தை நேரில் பார்த்த பெழுது சிறிய அளவில் எடை குறைவாக இருந்தது மகிழ்ச்சி அளித்தது.

உடனே நண்பருக்காக மீண்டும் ஒரு புத்தகமும் எனக்கு இரண்டு புத்தங்களும் வாங்கிக்கொண்டேன். அதன் அட்டை படங்கள் உங்களுக்காக.







புத்தகங்களை படித்துவிட்டு ஒரு சில கதைகளின் பதிவுகள் இட முயற்சி செய்கிறேன்.

அவ்வளவுதான் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வே










Monday, January 18, 2016

Samsung and Micromax Mobiles : MY Thoughts

வணக்கம் நண்பர்களே,

மிக நீண்ட உறக்கத்திலிருந்து மீண்டும் வந்திருக்கும் எனது ப்ளாக்.
பல காரணங்கள் இருந்தாலும் அதில் முதல் காரணம் எனது சோம்பேறித்தனம் தான்.

அதனால் எனது Domain renew செய்வதற்கு மறந்துவிட்டேன். மீண்டும் வாங்க பணம் அதிகம் கேட்டார்கள் புது Domain வாங்கிவிட்டேன்.

சரி புது Domain னுடன் சேர்த்து புதிதாக என்ன சேர்ப்பது என்று யோசித்தேன்.
காமிக்ஸ் மற்றும் சினிமா போல எனது மற்றொரு பையித்தியம் கேட்ஜட்டுகள் மீதே.

தினம் அவ்வகையில் என்ன என்ன புதிய நடப்புகள் புதிய கருவிகள் வந்துள்ளது என்று பார்பதில் தான் எனது காலை ஆரம்பமே.

ஆகையால் இனி அதனை பற்றியும் எனது தளத்தில் எழுதலாம் என முடிவு செய்துள்ளேன்.

இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன்கள் இல்லாத நபர்களே இல்லை. அனைவருமே சோசியல் மீடியாவில் இருக்கிறார்கள் தங்களது கருத்துகளை எவ்வித பயமும் இல்லாமல் கோவமாகவோ கிண்டலாகவோ கூறலாம்.

அந்த ஸ்மார்ட்போன்களில் இந்தியாவில் மிக அதிகமாக விற்பனை ஆவது சாம்சங் மற்றும் மைக்ரோமெக்ஸ் ஆகிய இரண்டு கம்பனிகளின் போன்களே.



ஆனால் அவை இரண்டு கம்பனிகளையுமே எனக்கு பிடிக்கவில்லை. அவை இரண்டுமே மக்களை  ஏமாற்றுகிறார்கள் எனபது எனது கருத்து.

காரணம் வாங்கும் காசிற்கு ஏற்ப போன்களில் விஷயம் இருப்பதில்லை.
போன்களில் முக்கியமானவை

1. Processor & Gpu
போனின் மிகமுக்கியமான பாகங்கள், போனின் பலம் இவைகளை  பொறுத்தே இருக்கும்.என்னதான் நல்ல கேமரா டிஸ்ப்ளே என இருந்தாலும் அனைத்தையும் இயக்குவது இவைகளே.

Processor தயாரிபவர்களில் முதன்மையானவர்கள் Qualcomm கம்பெனியே அவர்களது Snapdragon processor கள் பலம் வாய்ந்தவை. இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான போன்களில் இவர்களுடைய தயாரிப்புகளே இருக்கின்றன.

அடுத்து வருவது சீன தயாரிப்பான Mediatek கம்பெனியின் processor கள்.
அவர்களது தயாரிப்புகள் பெரும்பாலும் சீனாவில் தயாராகும் விலை குறைவான போன்களில் பயன்படுத்தபடுகின்றன.

அடுத்து சாம்சங் சொந்த தயாரிப்பான Exynos processor கள். அவர்களது போன்களில் மட்டுமே பயன்படுதபடிகின்றன (சமீபமாக Meizu நிறுவனம் தனது தயாரிப்புகளில் பயன்படுத்த ஆரம்பிதுள்ளர்கள்.)

சாம்சங் அவர்களது சொந்த தயாரிப்பான Exynos 1.2 Ghz Quadcore Processor களையே 8இல் இருந்து 25 ஆயிரம் வரையிலான போன்களில் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.

 மைக்ரோமெக்ஸ் நிறுவனம் Mediatek நிறுவனத்தின் 1.4 Ghz Quadcore Processor களை 8 முதல் 12 ஆயிரம் வரையிலான போன்களுக்கும் 2Ghz Octocore processor களை சற்றே விலை அதிகமான போன்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.

விளம்பரத்தில் மட்டும் Quadcore மற்றும் Octocore Processor என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். இவை Snapdragon processor கள் போல பலம் வாய்ந்தவைகள் கிடையாது.

சாம்சங் அவர்களது விலை உயர்ந்த Galaxy S மற்றும் Note Series போன்களை அமெரிக்காவில் விற்கும் பொழுது Snapdragon Processor 800 Series பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதே போன்கள் இந்தியாவில் விற்கும் பொழுது அவர்களது சொந்த தயாரிப்பை பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் அங்கே விற்பதை விட இங்கே விலை அதிகம்.( அதற்கு Tax ஒரு வகையில் காரணமாக இருந்தாலும் விலை அதிகமே)  

2. Ram
எவ்வளவு அதிகமான Ram இருக்கிறதோ அதனை பொறுத்து பெரிய கேம்கள் விளையாடுவது மற்றும் பல Apps ஒரே நேரத்தில் open செய்து வைப்பதற்கு பயன்படும்.

சாம்சங் அவர்களது 25 ஆயிரம் வரையிலான போன்களில் அதிகபட்சம் அளிப்பது 1.5GB மட்டுமே, இவை இன்று ஆரம்ப விலையிலான போன்களில் கூட 2GB RAM இருக்கிறது.


3. Display
இப்பொழுது பெரும்பாலும் போன்கள் HD(720p), Full HD(1080p) மற்றும் Quad HD(2440p) ரெசல்யுசனுடன் வருகிறது.

அதிகமான ரெசல்யுசன் என்றால் திரையில் எழுத்துக்கள் தெளிவாக இருக்கும். படங்கள் பார்க்க நன்றாக இருக்கும்.

இன்னும் சாம்சங் மற்றும் மைக்ரோமெக்ஸ் நிறுவன போன்கள் qHD ரெசல்யுசனுடன் விலை 10ஆயிரம - 12ஆயிரம் விலையில் வருகின்றன.

4. Camera
பெரும்பாலும் சோனி தயாரிப்புகளே போன்களில் பயன்படுத்த படுகின்றன.
அவை தான் நல்ல தரத்துடன் இருக்கின்றன. போட்டோ தெளிவாக இருக்க கேமரா மட்டுமே போதாது கேமரா App உம் முக்கியம்.

அவ்வகையில் சாம்சங் போன் கேமரா நன்றாக இருக்கும்.
ஆனால் மைக்ரோமெக்ஸ் நிறுவனம் மட்டமானது.

5. Rom
குறைந்த பட்சம் 16GB தேவை படும் மற்றும் SD போட வசதி.
சாம்சங் 10 ஆயிரம் விலையிலான போனில் இருக்கும் Rom 8GB .

சாம்சங் மற்றும் மைக்ரோமெக்ஸ் இரண்டுமே SD வசதி கொடுத்து தப்பித்துக் கொள்கின்றன.

6. Software
என்னை பொருத்தவரை போன்கள் நன்றாக இயங்க மிக முக்கியமான தேவை அதனை இயக்கம் Software தான்.

பெரும்பான்மையான கம்பெனிகள் Android Open Source Project யினை ஆதாரமாக வைத்து அதன் மீது மாற்றம் செய்து அவர்கள் போன்களில் பயன்படுத்துகிறார்கள்.

சாம்சங் மற்றும் மைக்ரோமெக்ஸ் போன்கள் மிகவும் பின் தங்கி உள்ளது இந்த விசயத்தில் தான்.

கூகிள் நிறுவனம் Phone,Message,Mail என அனைத்து தேவைகளுக்கும் App அளித்துள்ளது ஆனால் அவை அனைத்துக்குமே மற்றொரு App செய்து அதனை அவர்களது போன்களில் சேர்த்துள்ளனர். அவைகளை நாம் பயன்படுத்த போவதில்லை ஆனாலும் அதனை நீக்கவும் முடியாது.

வெறும் இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கும் இதனால் அதன் செயல்திறனும் பாதிக்கப்படும்.

அடுத்து Software Update கூகிள் ஒவ்வொரு வருடமும் புது Android Version வெளியிடுகிறார்கள். அதில் பல புதிய செயல்பாடுகள் இருக்கும்.

ஆனால் சாம்சங் அதன் மிக விலை உயர்ந்த போன்களுக்கு மட்டுமே  Software Update கொடுக்கும் அதுவும் பல மாதங்களிற்கு பிறகே. 10 முதல் 25 ஆயிரம் விலையிலான போன்கள் வாங்கும் பொழுது என்ன Version இருந்ததோ அவ்வளவுதான் அதன் பின்பு எதுவும் எதிர்பார்க்க கூடாது.

மைக்ரோமெக்ஸ் இன்னும் மோசம் Software Update என்றால் என்ன என்று கேட்பார்கள்.

இவை இரண்டின் பெரும் பலமே கடைகள் மற்றும் ஷோரூம்களில் கிடைப்பது தான். விவரம் தெரியாத மக்கள் சென்று ஏமாந்து விடுகிறார்கள்.

 இப்பொழுது நிலை சற்றே மாறி உள்ளது பல சீன நிறுவனகளின் கண்கள் இந்தியா மேல் விழுந்துள்ளது. அவர்கள் தங்களது நேரடி விற்பனைகளை  Online Retailer களான Flipkart, Amazon, Snapdeal ஆகியோருடன்  கூட்டு சேர்ந்து விற்கிறார்கள்.

இந்த பதிவு உங்களுக்கு சற்றே உபயோகமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன், இதுபோல அவ்வபொழுது புதிய நிகழ்வுகள் மற்றும் புதிய போன்கள் பற்றிய பதிவுகள் இட முயற்சி செய்கிறேன்.


அவ்வளவுதான் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வே.