லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனும் லயன் காமிக்ஸும்

லண்டனும் லயன் காமிக்ஸும்

Memories (2013) - Malayalam Movie Review

Memories (2013) - Malayalam Movie Review

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

Thursday, October 25, 2012

காமிக்ஸ் புதையல் XVIII - Diamond Comics Collection (English)


வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில் நாம் பல இந்திய மொழிகளில் (ஆங்கிலம் இந்திய மொழி அல்ல) வந்த இந்திய தயாரிப்பான டைமண்ட் காமிக்ஸ் பற்றி பார்க்க போகிறோம்.

என்னிடம் இருக்கும் பெரும்பாலான புத்தகங்கள் தாராபுரத்தில் இருக்கும் ஒரு லென்டிங் லைப்ரரியில் இருந்து வாங்கியவை.

நான் படித்தது முழுவதும் ஆங்கில பள்ளி கூடங்களில் தான்.ஆகையால் கண்டிப்பாக ஆங்கில காமிக்ஸ்கள் வாங்கி படித்து வீட்டில் உள்ளவர்களை சந்தோசபடுத்த வாங்கி பின்பு மிகவும் பிடித்து போன காமிக்ஸ்களில் ஒன்றாகியது.அனைத்தும் மிகவும் எளிய ஆங்கிலத்தில் இருக்கும்.புரிந்து கொள்ள ஏதுவாகவும் இருக்கும்.

பலதரப்பட்ட நாயகர்களை அவர்கள் உருவாகினார்கள் 

முதலில் மற்றவர்கள் போல வெளிநாட்டு தயாரிப்புகளான 

ஜேம்ஸ் பான்ட்
பேண்டம்
மாண்ட்ரேக் 
ஆகியோர்களை முறைப்படி லைசென்ஸ் வாங்கி வெளியிட்டனர்.

பின்பு இங்கேயே பல கதாபத்திரங்களை உருவாகினார்கள்.
அவர்கள் 

Faulad Singh - இவர் ஒரு விண்வெளி சாகச வீரர்,இவருடன் ஒரு குள்ளன் வேறு இருப்பான்.இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் சாகசங்களே கதைகள்.எனக்கு இவருடைய கதை அவ்வளவாக பிடிக்காது.

அக்னிபுத்ரா - அபே - இவர்கள் இருவரில் அக்னிபுத்ரர் வெளி கிரகத்தில் இருந்து வந்தவர்.அபே இங்கு இருப்பவர்.இருவரும் சேர்ந்து தீமையை எதிர்த்து போராடுவார்கள்.இவர்களுடைய கதைகளை ராணி காமிக்ஸ் நிறுவத்தினர் கூட கடைசி காலகட்டங்களில் வெளியிட்டனர்.

டைனமைட் - இவர் ஒரு ஆக்சன் ஹீரோ.

மகாபலி சாகா - இவர் டார்சான் மற்றும் நம்ம மன்னர் பீமா போல.காட்டில் வாழ்கிறார்.அங்கு வரும் கொள்ளையர்கள் மற்றும் அங்கு இருக்கும்  சில கெட்ட காட்டுவாசிகளை எதிர்த்து போராடுவார்.

Tauji & சாச்சா  படீஜா - இவர்கள் இருவருமே தாத்தாக்கள்.இவர்களுடை பெரும்பாலான கதைகள் பில்லி சூனியம் மற்றும் ஆவிகளை எதிர்த்து இருக்கும் 

லம்பு - மோட்டு - இந்த சகோதரர்கள் நமது இரட்டை வேட்டையர்கள் போல.எனக்கு இவர்களுடைய கதைகள் மிகவும் பிடிக்கும்.

இவை தவிர பிரபல pran's என அழைக்கப்படும் பிரான் குமார் ஷர்மா அவர்களால் உருவாக்கப்பட்ட காமிக்ஸ் தயாரிப்புகளை வெளியிட்டார்கள்.

அவரை பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.

மற்றும் டைமண்ட் காமிக்ஸ் பற்றிய தளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

அவைகள் அனைத்துமே நகைச்சுவை நிறைந்தவைகளாக இருக்கும்.

பில்லூ - இவர் ஒரு வாலிபர்.இவர் மேலை நாடுகளில் பிரபலமான ஆர்ச்சியை போல இருப்பார்.பெண்களுக்கு இவரை மிகவும் பிடிக்கும்.

ராமன் - இவர் ஒரு திருமணமானவர்.ஒரு கணவன் மனைவி இடையில் நடக்கும் நிகழ்சிகளை நகைச்சுவையோடு கூறியிருப்பார்.

சாச்சா சௌதரி - இவர் மிகவும் பிரபலமானவர்.இவரது மூளை கணினியை விட வேகமாக இயங்கக்கூடியது எனபது பழமொழி.இவருடன் வெளிகிரகத்தை சேர்ந்த சாபு என்னும் கடோதகஜன் ஒருவனும் இருப்பான்.இவர்களுடைய முதல் எதிரி ராக்கா எனப்படும் ஒரு கொள்ளைக்காரன் தான்,
.
தாபு - இவரும் ஒரு வாலிபர்தான்.

பிங்கி - இவள் நம்ம சமத்து சாறு போல.குறும்புத்தனம் நிறைந்தவள் 

ஸ்ரீமதி - திருமணமான ஒரு மேல் வர்கத்து பெண்மணி.அவர் செய்யும் பகடுகளை நகைசுவையோடு கூறியிருப்பார்.





















இக்கதைகளை நீங்களும் படித்திருந்தால் உங்களுக்கு பிடித்த கதாபத்திரம் எது என பினனுட்டம் மூலம் கூறுங்கள்.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .

கிருஷ்ணா வ வெ.

Tuesday, October 9, 2012

பவளச்சிலை மர்மம் - A Tex Willer Action Thriller



வணக்கம் நண்பர்களே,

இப்பதிவில் நமது ஓட்டெடுப்பில் அதிக ஓட்டுக்களை பெற்று முதல் இடம் வந்த பவளச்சிலை மர்மம் கதையினை பார்க்கப்போகிறோம்.

இக்கதை லயனின் மூன்றாவது ஆண்டு மலராக வந்தது.

ஒரு சிறு எச்சரிக்கை இது மிகவும் ஒரு நீ ......... ளமான பதிவாக அமைந்துவிட்டது.ஆகையால் பொறுமை மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் மேலே செல்லவும்.மற்றவர்கள் எனது அடுத்தபதிவிர்க்கு மீண்டும் வாருங்கள்.

இக்கதை ஒரு Expendables திரைப்படம் போல.ஒரே சண்டை தான்.அதுவும் கதையின் பாதிபக்கதிலேயே கிளைமாக்ஸ் ஆரம்பித்துவிடுகிறது.அதற்கு பின்    ஒரு ஐம்பது பக்கங்களுக்கு ஒரே ஆக்சன் தான்.மிகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது.கண்டிப்பாக நிறைய நண்பர்கள் ஏற்கனவே படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.


Hotline

கதை:

எலும்புக்கூடு பள்ளத்தாக்கு.ஒரு மாலை பொழுது.மந்திரவாதி ஹடானின் இருப்பிடம் இருக்கும் மலைக்குன்று.










திடீரென அவனது பாதுகாவலர்கள் (புலிகள்) மிரளுகின்றன.உடனே அவனது மற்றொரு வளர்ப்பு பறவையான காகத்தை சென்று பார்க்க சொல்கிறான்.

ஹுவால்பை இனத்தினர் கையில் ஆயுதங்களோடு தாக்க வருகின்றனர்.
எதிர்த்த புலிகளை கொன்றுவிடுகின்றனர்.காகத்தின் மீதும் அம்பு எய்துவிடுகின்றனர்.

ஹடானையும் அடித்து வீழ்த்திவிட்டு அவனது இருப்பிடம் முழுவதையும் எதையோ தேடுகின்றனர்.திடீரென்று ஒருவன் தரையின் கீழே இருக்கும் நிலவறையை கண்டுபிடிகின்றான்.உடனே அனைவரும் கீழே சென்று காசினா எனப்படும் ஒரு பெரிய சிலையின் உள்ளே இருக்கும் சக்தி நிறைந்த சிறிய "பவளச் சிலையை" கண்டுபிடிகின்றனர்.அந்த காசினாவை அப்படியே எடுத்துக்கொண்டு, அந்த இருப்பிடத்தையும் தீயிலிட்டு விட்டு விரைந்து தப்பி செல்கின்றனர்.



அம்புக்காயம் பட்ட காகம் பறந்து சென்று நவோஜோக்களின் இருப்பிடத்தில சென்று விழுகிறது.அப்பொழுது ஒரு ஆலோசனையில் இருக்கும் நமது ஹீரோ டெக்ஸ் வில்லர் அக்காகத்தை கண்டு பக்கத்தில் சென்று ஆராய்கிறார்.அதன் மூக்கில் இருக்கும் உதய சூரியன் சின்னத்தை வைத்து அது ஹடானிர்க்கு சொந்தமானது என்றும் அதன் மேல் இருந்த அம்பை வைத்து அது ஹுவால்பை இனத்தினர் செய்த காரியம் என்றும் கண்டுபிடிக்கிறார்.



உடனே நமது நால்வர் கூட்டணி தேவையான ஆயுதங்களோடு ஹடானின் குன்றிற்கு செல்கின்றனர்.அங்கு மிகவும் மோசமான நிலைமையில் இருந்த ஹடானை காப்பாற்றி மது அளித்து சிலை திருட்டுப்போன விவரங்கள் அறிந்து கொள்கிறார்.புகை மூலம் நவோஜோக்களுக்கு செய்தி அனுப்பிவிட்டு நால்வரும் தப்பிசென்றவர்களை துரத்தி செல்கின்றனர்.




இதற்கிடையில் முன்னால் தப்பி செல்லும் ஷா யான் மற்றும் அவனது கூட்டத்தினர் ஒரு மலை கனவாயை கடக்கின்றனர்.இரவு நேரம் வந்துவிட்டதால் ஒரு இடத்தில பொழுதை கழித்து விட்டு காலையில் செல்லலாம் என கூறுகிறான்.

நள்ளிரவு ஆனது.ஒருவர் மாறி ஒருவர் காவல் புரிந்து வந்தனர்.அப்பொழுது மா கெளர் என்பவனின் முறை வந்தது.அவன் அவர்கள் கிராமத்து மந்திரவாதியான தல்சாரின் மருமகன் ஆவான்.காவல் புரிந்து கொண்டிருந்த மா கெளர் இன் மனது அவனை அந்த சிலையை எடுத்து பார்க்க சொல்லியது.
அவன் காசினா எனப்படும் பெரிய சிலையில் இருந்தது அந்த பளிங்கு சிலையை வெளியில் எடுத்தான் அது நிலா வெளிச்சத்தில் பளீர் என்று அதில் இருந்து ஒரு ஒளிப்பிழம்பு கிளம்பியது.

அதனை கையில் எடுத்த மா கௌர் ஷா யானின் மரணத்திற்கு பிறகு தான் ஹுவால்பைகளின் தலைவன் ஆக வேண்டும் என்று வரம் கேட்டான்.பின் அச்சிலையை மீண்டும் காசினாவில் வைத்து பாறையின் மேல் அதனை வைத்தான்.உடனே அவனது உடல் நடுங்க தொடங்கியது.அப்படியே வெட்டுண்ட மரம் போல வீழ்ந்தான்.



விழும் சத்தம் கேட்டு மற்றவர்கள் எழுந்து பார்த்தனர்.அதற்குள் அவன் இறந்து இருந்தான்.காசினா பாதி திறந்த நிலையில் இருந்ததை வைத்து நடந்ததை அறிந்து கொண்டனர்.இறந்த மா கௌர் உடலை பாறைகள் கொண்டு மூடி சமாதி செய்து விட்டு  அங்கிருந்து விரைந்து கிளம்பினர்

கிளம்பிய அவர்கள் சற்று தூரத்தில் இருந்த வானவில் பாலத்தை அடைந்தனர்.
அது மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் அந்த கயிறு பாலத்தை ஒவ்வொருவராக கடந்து சென்றனர்.

இதற்கிடையில் பொழுது விடிந்தது நமது நான்கு நண்பர்களும் அந்த மலை குன்றை அடைந்தனர்.அங்கிருந்த சாம்பலில் இருந்து தப்பியவர்கள் அங்குதான் இரவில் தங்கி உள்ளனர்.என்பதை கண்டு கொண்டனர்.விரைந்து சென்றால் அவர்களை மாலைக்குள் பிடித்துவிடலாம் என முடிவு செய்து கிளம்பினர்.தாங்கள் பின்தொடர்வது அவர்களுக்கு தெரியாததால் அவர்கள் தடங்களை அழிக்காமல் சென்றிருந்தனர்.ஆகையால் அதனை பின்தொடர்வது சுலபமாக இருந்தது.

மறுநாள் விடியகாலை நண்பர்கள் வானவில் பாலத்தை அடைந்தனர்.பாலத்தின் நிலையை கண்டு கால்நடையாக செல்வது தான் நல்லது என முடிவு செய்கின்றனர்.அதன்படி குதிரைகளை பாலத்தின் இந்த பக்கம் விட்டுவிட்டு ஆயுதங்களை மட்டும் எடுத்துக்கொண்டு கால்நடையாக பாலத்தை கடந்தனர்.


அதே நேரத்தில் ஷா யானும் அவனது கூட்டத்தினரும் தங்களது கிராமத்தை அடைந்தனர்.அங்கிருந்த தல்சாரிடம் காசினாவை ஒப்படைத்து விட்டு மா கௌர் ரிர்க்கு ஏற்பட்ட முடிவை எடுத்துக்கூறுகிறான்.அதனை கேட்ட தல்சார் ஒரிகட்டிர்க்கு பலி கொடுத்து அதன் பாதுகாப்பை பெறவேண்டும் என கூறுகிறான்.அதன் படிஇளம்பெண்கள் அனைவரையும் வரிசைபடுத்தி நிற்க வைக்க சொல்கிறான்.மற்றும் பக்கத்தில் இருக்கும் மற்ற இனத்தவருக்கும் மாலையில் பலி கொடுக்க இருக்கு செய்தியை முரசறைந்து கூற சொல்கிறான்.உடனே ஷா யானும் அதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி செல்கிறான்.

பாலத்தின் மறுபக்கத்தை அடைந்த நண்பர்கள் கால்தடங்கள் வைத்து திருடர்கள் ஆப்ரே சமவெளியில் வாழும் ஹுவால்பை இனத்தவர்தான் என அறிந்து கொள்கின்றனர்.அதனை உறுதிபடுத்தும் வகையில் அருகில் பலமாக முரசு சத்தம் கேட்டது.அதில் இருந்து பலி கொடுக்க போவதை அறிந்து கொண்டு காப்பாற்றுவதற்காக விரைந்தனர்.

இதற்கிடையே கிராமத்தில் இளம்பெண்கள் வரிசையாக நிற்க வைக்கபட்டனர்.தல்சார் ஒன்பது வெள்ளை கற்களையும் ஒரு கருப்பு கல்லையும் ஒரு குடத்தில் போட்டான்.அதனை எடுத்து வந்து நின்று கொண்டிருந்த பெண்கள் ஒவ்வொருவரையும் குடத்தில் இருந்து ஒரு கல்லை எடுக்க சொன்னான்.அனைவரும் எடுத்த பின் எல்லோர் கைகளையும் விரித்து காட்டசொன்னான்.ஒரு பெண்ணின் கைகளில் கருப்பு கல் இருந்தது.அவளை பிடித்து பலிக் கம்பத்தில் கட்டசொன்னான்.

மாலை நெருங்கிக்கொண்டிருந்தது அந்த பெண் பலிக்கம்பத்தில் கட்டப்பட்டாள்.வில் வித்தையில் சிறந்த ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.முரசுகள் ஒலிக்க  ஆரம்பித்தன தல்சார் காசினாவை கொண்டு வந்து ஒரு பாறையின் மேல்வைத்தான்.ஆகட்டும் என குரல் கொடுத்தான்.வில் வீரர்கள் அம்பு தொடுக்க தயாரானார்கள். திக் திக் திக்.



சரியான சமயத்தில் முன்னால் வந்த டைகரும் கிட் வில்லரும் ஒரு குன்றின் மேல் இருந்து நடக்கும் அக்கிரமத்தை பார்கின்றனர்.உடனே மேலே வந்துகொண்டிருந்த வில்லரையும் கார்சனையும் சீக்கிரம் வர சைகை செய்தனர்

வேளை நெருங்கியது வீரர்கள் வில்லில் அம்பை பூட்டினர்.நமது நண்பர்கள் செயலில் இறங்கினர்.கீழே உள்ளவர்களை நோக்கி சுட ஆரம்பித்தனர்.மேலே இருந்து கிட் பாதுகாப்பு கொடுக்க மற்ற மூவரும் கீழே வந்து எதிர்தவரை எல்லாம் சுட்டு வீழ்த்தினர்.டைகர் தல்சாரை சுட்டு கொன்று அந்த சிலை இருக்கும் காசினாவை எடுத்துக்கொள்கிறார்.வில்லர் அந்த பெண்ணை காப்பாற்றினார் கட்டை அவிழ்த்த உடன் அந்த பெண் மயங்கி வில்லர் மேல் விழுந்தாள்.



ஹுவால்பைகள் சுற்றி வளைத்து வீழ்த்த நினைத்தனர்.அவர்களது துரதிர்ஷ்டம் அவர்களிடம் வில்லும் அம்பும் மட்டுமே இருந்தது.ஆகையால் சுற்றி வளைத்து அம்புகளை எய்தனர்.அந்த பெண்ணை தோளில் போட்டுகொண்டு சென்ற டெக்ஸ் தோள் மீது ஒரு அம்பு பாய்ந்துவிடுகிறது.
உடனே மற்ற இருவரும் தோட்டா மழை பொழிய செய்தனர்.அப்படியே மூவரும் அந்த பெண்ணுடன் கிட் இருந்த குன்றிற்கு வருகின்றனர்






பின் அங்கிருந்து விரைந்து பாலத்தை நோக்கி செல்கின்றனர்.ஆனால் எதிரிகள் மற்றொரு குறுக்கு வழியில் இவர்களுக்கு முன் பாலத்தை அடைந்து காத்திருகின்றனர்.இதற்கிடையில் மற்றொரு இனத்தவர் அந்த சிலையை பறிக்கும் பொருட்டு பாலத்திற்கு வருகின்றனர்.





இவ்வாறாக பாலத்தின் ஒரு பக்கம் ஒரு பெரிய யுத்தமே நடக்கிறது.இறுதியில் அவர்களை காப்பாற்ற வரும் நவோஜோக்களின் உதவியுடன் இரு கூட்டதினரையும் முறியடித்து விட்டு பாலத்தையும் வெட்டிவிட்டு தப்பி செல்கின்றனர்.





நண்பர்களே நமது நண்பர் சிபி அவர்கள் நமக்காக இதன் ஒரிஜினல் காமிக்ஸின் கலர் ஸ்கேன்கள்  அனுபியுள்ளார்.அதனை மேலே சேர்த்துள்ளேன் கண்டு களியுங்கள்.

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ .

Tuesday, October 2, 2012

காமிக்ஸ் புதையல் XVII - Rani Comics Collection - Part 2


வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது 
பகுதியை பார்க்க போகிறீர்கள்.

முதல் பாதியில் பெரும்பாலும் ஜேம்ஸ் பான்டையே  நம்பி உள்ளார்கள்.

இடையில் நமது ஜார்ஜ் ஜானியாக பத்தாவது இரவில் வெளிவந்துள்ளார்.

மேலும் தில்லானின் வேட்டை நாய்,ராயனின் கொலைகார 
கேப்டன்,பக் ஜோன்சின் துப்பாக்கி மங்கை,லேடி ஜேம்ஸ் பாண்ட் 
தோன்றும் நிழல் மனிதன்,தியோவின் சூப்பர் கார்,மன்னர் 
பீமாவின் மண்டை ஓட்டு மர்மம் ஆகிய கதைகள் வந்துள்ளன.

இரண்டாவது பாதியில் அதாவது 200 புத்தகங்களை தாண்டிய பிறகு மாடஸ்டி,ரிப் கிர்பி,மாயாவி,ப்ளாஷ் கார்டன்,மாண்ட்ரேக் ஆகியோரை அறிமுகபடுத்தி உள்ளனர் 

இவர்கள் அந்தகால கட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.

இடைஇடையில் வந்த வெஸ்டேர்ன் காமிக்ஸ் கதைகள் அனைத்துமே நன்றாக இருக்கும்.(கில்லாடிக்கு கில்லாடி,கொலைகார நகரம்)













எனக்கு நினைவில் இருக்கும் சில கதைகளை பற்றி இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

தில்லானின் வேட்டை நாய் ஒரு வித்தியாசமான கதை.
தில்லானின் நண்பன் விளம்பரத்தை பார்த்து ஒரு தாய் மற்றும் அவரது குழந்தைகளுக்கு வாழ்கை தருவதாக கடிதம் அனுப்ப அதனை நம்பி அந்த குண்டு அம்மையார் தனது குழந்தைகள் மற்றும் அவரது நாய் சகிதம் அந்த ஊருக்கு வருகிறார்.

அந்த அம்மையாரை நேரில் பார்த்ததும் அந்த ஆள் ஜகா வாங்குகிறார்.
தனது பெயரையே மாற்றி சொல்கிறார்.வேறு வலி இல்லாமல் அவர்கள் ஊருக்கு வெளியில் இருக்கும் ஒரு வீட்டில் தங்குகிறார்கள்

இதற்கிடையில் சில கொள்ளைகாரர்கள் அந்த வீட்டில் தங்கி அவர்களை ப்ளாக்மெயில் செய்வார்கள்.

இதில் இருந்து அவர்களை எப்படி தில்லான் காப்பாற்றுகிறார் என்பதே மீதிக்கதை.இறுதியில் அந்த அம்மையார் தனது கணவருடன் சேர்ந்துவிடுவார்.

லேடி ஜேம்ஸ் பாண்ட் தோன்றும் நிழல் மனிதன் ஒரு சிலை கடத்தல் கும்பலை பற்றிய கதை.

நம்ம சார்லி சுனிலாக அறிமுகம் ஆனா நான் யார்.

ஒரு முரட்டுக்காளை கடதுபவர்களிடம் இருந்து பில்லி எப்படி காப்பாற்றுகிறார் என்பதை முரட்டுக்காளை கதையில் பார்க்கலாம்.

தியோவின் சூப்பர் காரின் அறிமுக கதை.

மாடஸ்டியின் மர்ம கோட்டை நமது முத்துவில் வந்துள்ள மரண கோட்டை தான் என நினைக்கிறன்.

டிஸ்கோவின் அழகி வேட்டை மற்றும் பணப்பெட்டி மறைந்த மாயம் இரண்டும் நல்ல கதைகள்.அழகி வேட்டை தான் ஒற்றை கண்ணாடி யாக மாலைமதி யில் வந்துள்ளது.

மன்னர் பீமாவின் மண்டை ஓட்டு  மர்மம் ஒரு மந்திரவாதியின் காலத்தில்  பயணம் செய்ய கூடிய மண்டை ஓட்டினால் ஏற்படும் பிரச்சனைகளை பீமா எப்படி முறி அடிக்கிறார் என்பதே.

மண்டை ஓட்டு மாளிகைக்கு திருட வரும் கொள்ளையர்களை எப்படி மாயாவி முறியடித்தார் என்பதை கதை.


கொள்ளையர்கள் நிறைந்த முதலை தீவை எப்படி மாயாவி நிர்மூலமாகுகிறார் என்பதை முதலை தீவு கதையில் பார்க்கலாம்

ஒரு மாய முரசின் மூலம் அனைவரையும் மயக்கி ஆட்டுவிக்கும் ஒரு மோச காரனை முறியடிக்கும் கதை மாய முரசு.அக்கதை மாயாவி ஆடும் நடனம் தான் ஹைலைட்.

ஒரு மயக்கும் மோகினியின் அக்ரமத்தை எப்படி மாண்ட்ரேக்கும் லோதரும் சேர்ந்து  முறியடிக்கிறார்கள் என்பதே மயக்கும் மோகினியின் கதை.

நடுகடலில் ஒரு அயோகியனிடம் ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் டயானாவை மாயாவி எப்படி காப்பாற்றுகிறார் என்பதே அதிரடி பெண்ணின் கதை.

அநியாயம் புரியும் ஒரு காட்டுவாசி இனத்தினரை எப்படி மாயாவி வழிக்கு கொண்டு வருகிறார் என்பதே சிலந்திவலை.

நண்பர்களே இந்த புத்தகங்களை  பற்றிய உங்களது நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .
கிருஷ்ணா வ வெ .