லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனும் லயன் காமிக்ஸும்

லண்டனும் லயன் காமிக்ஸும்

Memories (2013) - Malayalam Movie Review

Memories (2013) - Malayalam Movie Review

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

Showing posts with label Cinema. Show all posts
Showing posts with label Cinema. Show all posts

Saturday, December 15, 2012

கும்கி - ஒரு பச்சை பசேல் யானை.




வணக்கம் நண்பர்களே,

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திரைப்பட விமர்சனத்தோடு உங்களை சந்திக்கிறேன்.

இன்று மதியம் கும்கி திரைப்படம் பார்த்தேன்.பில்லா 2 அப்புறம் ஒரு திரைப்படம் முதல் நாள் பார்ப்பது இதுதான்.

படம் நன்றாகவே இருந்தது கடைசி 5 நிமிடம் தவிர.

ஒரு பிரபு சாலமன் கதை (கும்கி கதை அல்ல):

3 நிமிட குறும்படம்:

ஒரு விடலை பையன் காலையில் விழித்தெழுந்து தினசரியை பார்கிறான்.அன்று Feb 14 சந்தோசத்துடன் எழுந்து குளித்து ஒரு மோதிர பரிசுடன் கிளம்புகிறான்.

கட்:

அதே நேரம் அதே போல ஒரு விடலை பெண் எழுந்து அதே சந்தோசத்துடன் ஒரு பூ பரிசுடன் கிளம்புகிறாள்.

இருவரும் குறுஞ்செய்தி அனுப்பி உறுதி செய்து கொண்டு கிளம்புகிறார்கள்.

ஒரு காபி விடுதியில் சந்தோசத்துடன் கையில் பூவுடன் உள்ளே நுழைகிறாள் அந்த பெண் உள்ளே எதையோ பார்த்து அதிர்ச்சி அடைந்து பூவை கீழே தவறவிடுகிறாள்.

அவள் பார்த்த இடத்தில் அந்த பையன் வேறு ஒரு பையனின் கையில் மோதிரம் மாட்டிகொண்டு இருக்கிறான்.

அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கீழே விழுந்த பூவை எடுக்க குனியும் பொழுது வேறு ஒரு ஆண் உதவ குனிய இருவர் தலையும் முட்டிக்கொள்ள காதல் வருகிறது.அத்துடன் அந்த திரைப்படம் முடிகிறது.

இது நாளைய இயக்குநருக்காக எடுத்த ஒரு படம் இதற்கு நடுவர்கள் பிரபு சாலமன் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா.இந்த படத்திற்கு பிரபு சாலமன் கொடுத்த கமெண்ட்.

"என்ன சொல்லவரீங்க எனக்கு ஒன்னும் புரியல.ரெண்டு பேர் sms அனுப்பிவிட்டு வராங்க இங்க அந்த பையன பார்கிறார்கள் அப்புறம் இன்னொருத்தன பார்த்ததும் காதல்.இப்படி பார்த்ததும் காதல் வருமா/இன்னும் கொஞ்சம் எலபோரடே பண்ணனும்."

இந்த கமெண்ட் நோட் பண்ணிக்குங்க நண்பர்களே.

இனி கும்கி கதை.

ஆதிகாடு 200 வருட பாரம்பரியம் மிக்கது.விவசாயம் பார்கிறார்கள்.
அவர்களுக்கு கொம்பன் எனப்படும் ஒரு ஒத்தை யானையால் தொல்லை.சாதாரண தொல்லை இல்லை அதனால் 3 பெண்கள் இறந்துள்ளனர்.
மேலும் அதன் பிடியில் இருந்து அந்த கிராமத்தின் தலைவர் மாத்தையன்  பெண் அல்லி மயிரிழையில் உயிர் தப்பி உள்ளால்.

இதற்கு அரசாங்க அதிகாரிகள் அவர்களை அந்த காட்டை காலிசெய்து வேறு இடம் செல்ல சொல்கிறார்கள்.இதற்கு மறுக்கும் அவர்கள் உங்கள் உதவி தேவை இல்லை எங்களை நாங்களே காப்பாற்றிக்கொள்கிறோம்  என சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.

இந்த நிலையில் அவர்கள் ஒரு கும்கி யானையை துணைக்கு வைத்துகொண்டு இந்த வருடம் அறுவடை செய்ய முடிவு செய்கிறார்கள்.அதற்காக ஊர்மக்கள் அனைவரும் தங்களது நகைகள் மற்றும் சேகரிப்பை கொடுத்து ஒரு யானை தரகர் மூலம் கும்கி யானை கேட்கிறார்கள்.

இப்படி இருக்க நம்ம ஹீரோ பொம்மன்,அவனது தாய்மாமன் கொத்தள்ளி,அவனது கைத்தடி உண்டியல் மூவரும் அவனது யானை மாணிக்கத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.அந்த யானையை தனது உடன் பிறவா சகோதரனாக நினைக்கிறான் ஹீரோ.சிறுவயது முதலே இருவரும் ஒன்றாக வளர்ந்தவர்கள்.flashback ல வருங்கின்ற குட்டியானை செம அழகாக இருக்கிறது.அந்த யானை ஒரு தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டாலே நடுங்குகிறது.பொம்மனின் நண்பர் அந்த யானை தரகர்.
அவர் மூலம் யானையை கோவில் திருவிழாக்கள்,திரைப்படங்கள் இப்படி விட்டு பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

உண்மையான கும்கியானையின் பாகனின் பெண் விஷம் குடித்துவிட அவர்க்கு பதில் தனது நண்பருக்காக பொம்மன் மாணிக்கத்துடன் கும்கி யானை என பொய் சொல்லி ஆதிக்காட்டிர்க்கு போகிறான்.அங்கு அல்லியை கண்ட உடன் காதல் வயப்படுகிறான்.(நோட் பண்ணுங்க).முதலில் யானையை கண்டு பயப்படும் அல்லி பின் மாணிக்கத்தின் மேல் பாசம் கொள்கிறாள்(ஏன்? காரணம் பின்னர் கூறப்படும்) .இப்படியே முதல் பாதி சென்று விடுகிறது.




அடுத்து தனது காதலை அவளிடம் சொல்கிறான்.ஒரு கட்டத்தில் அவளும் சம்மதிக்க காதல் நன்றாக ஒரு பாடல் முடியும் வரை செல்கிறது.பின்னர் அந்த கிராமத்தின் தலைவரும் அந்த ஊர் மக்களும் தன மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை கண்டு தனது காதலை விட்டுகொடுக்க முடிவு செய்கிறான்.அவளும் தனது தந்தை தன மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மதிப்பளித்து தனது காதலை தியாகம் செய்கிறாள்.

அப்புறம் ஒரு வழியா படத்தின் ஆரம்ப காட்சியில் வந்த கொம்பன் இறுதிக்காட்சியில் வர பரப்பான யானை சண்டை காட்சியுடன் படம் முடிகிறது.


இனி எனது கருத்து.



படத்தின் உண்மையான ஹீரோ கேமரா மேன் சுகுமார் தான்.அப்பா மனுஷன் புகுந்து விளையாடிருக்கார்.படத்தின் ஒவ்வொரு பிரேமும் நமது கணினி திரையில் வைக்கும் வால்பேப்பர் போல ஒரே பச்சை பசேல் அல்லது மஞ்சள் பூ காடு.இடங்கள் இப்படி அத்தனையும் அருமை.அதற்காகவே நண்பர்களை திரைஅரங்கு சென்று காணுமாறு கேட்டுக்கொள்கிறேன் அப்பொழுதான் அந்த அனுபவத்தை முழுமையாக அடையமுடியும்.படத்தின் இடங்களை தேர்ந்தேடுதர்க்கு கண்டிப்பாக டைரக்டருக்கு பாராட்டுக்கள்.நம்ம நாட்லயும் இப்படி அழகான இடங்கள் உள்ளன என்பதை நிருபித்துள்ளார்.



அடுத்து அந்த யானை மாணிக்கம் பார்க்க கம்பிரமாக உள்ளது.அது காலை தூக்கி காண்பிக்கும் அழகே தனி.அதனால் தான் என்னவோ ஹீரோவிற்கு வைக்கும் காட்சியை யானைக்கு வைத்துவிட்டார் டைரெக்டர்.தண்ணிர் எடுக்க செல்லும் அல்லி நீர் குடிக்கவரும் மாணிக்கத்தை கண்டு தடுமாறி ஒரு பாறை மேல் விழப்போக நம்ம யானை அவளை அழகாக காப்பாற்றுகிறது.இந்த ஒரு காட்சி போதாதாங்க.(இப்போ காரணம் புரிஞ்சுதா)



அடுத்து நம்ம தம்பி ராமையா செமைய கலக்கிருக்காருங்க அவர் வரும் காட்சிஎல்லாமே திரைஅரங்கில் அப்படி ஒரு சிரிப்பு அதுவும் அவர் mind voice ல பேசறது எல்லாமே அருமை.கடைசி வரைக்கும் போர் அடிக்காம கொண்டு சென்றதற்கு இவர் ஒரு பெரும் காரணம்.

அடுத்து நம்ம ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருமே நல்ல நடிச்சுருக்காங்க.கிராமத்து மனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்
ஆனா ரெண்டு பேரோட காதல் காட்சில ஒரு அழுத்தமே இல்லை.அவளுக்கு அவன் மேல் காதல் வர ஒரு நல்ல காரணமே கூறவில்லை.பெரும்பாலும் அவன் அவளை நினைத்து மருகிகொண்டிருக்க அவள் எப்பொழுது யானையுடனேயே இருப்பாள்.அப்புறம் அவன் சொன்னதும் எப்படி சம்மதித்தாள் எனபது தெரியவில்லை.

இந்த லட்சணத்துல இந்த டைரெக்டர் மேலே எப்படி கருத்து சொல்லிருக்கார் பாருங்க.



படத்தின் பாடல்கள் நன்றாக உள்ளன.சற்றே மைனாவை நினைவு படுத்தினாலும் நன்றாகவே உள்ளன.முக்கியமாக பாடல்கள் எடுக்கப்பட்ட இடங்களும் விதமும் நன்றாக இருக்கும்.ஒரு அருவி ஆரம்பிக்கிற இடத்த காமிசிருப்பாரு பாருங்க சூப்பர்.பாடல்கள் பற்றி நமது ராஜ்குமார் நல்ல பதிவு ஒன்று இட்டுள்ளார் அதனை படிக்க.



நடித்துள்ள அனைத்து துணை நட்சத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
நம்ம ஜூனியர் பாலையா அவர்களுக்கு சாட்டை படத்திற்கு பின் மீண்டும் ஒரு வாய்ப்பு.படத்துல காட்டிலாகா அதிகாரியாக வருபவரை தேவை இல்லாமல் ஒரு வில்லன் பில்டப் வேற.

யானைகள் பற்றி பல துணுக்கள் அளித்துள்ளனர்.யானை வைத்திருக்க தனி லைசென்ஸ் தேவை,நமக்கு ஜலோதொசம் போல அதற்கு குடலோசம்,கும்கி யானைக்கு தைரியம் தர பார்கே பார்கே என கத்த வேண்டும்,யானைக்கு மதம் பிடிக்க ஆரம்பிக்கும் பொது இருக்கும் அறிகுறிகள் இப்படி பல.

படத்தின் இறுதிக்காட்சி மட்டும் எனக்கு பிடிக்கவில்லை.

இதனை பற்றிய நமது நண்பர் கார்த்திக் அவர்களின் கருத்தை நான் இங்கு மீள் பதிவு செய்கிறேன்.

//இந்தப் படத்தின் க்ளைமேக்ஸை பலவிதமாக எடுத்திருக்க முடியும். ஆனால் எளிதில் யூகிக்க முடியாத ஒரு க்ளைமேக்ஸை தேர்ந்தெடுத்ததில் இயக்குனர் வெற்றி பெறுகிறார்.//

ஆனால் இந்த ஒரு இடத்தில் அவருடன் நான் வேறு படுகிறேன்.

அவ்வளவு தான் நண்பர்களே.எனது குரும்பதிவுகளையே படித்து வந்த நண்பர்களுக்கு இது சற்றே திருப்தி அளித்திருக்கும் என நினைக்கிறேன்.

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.

Tuesday, September 11, 2012

Mugamoodi - A Super Hero??????



வணக்கம் நண்பர்களே,

வேறு வழியே இல்லாமல் முகமூடி திரைப்படம் நானும் பார்த்துவிட்டேன்.
இருந்தாலும் மிகவும் நான் எதிர்பார்த்த படம் அதுவும் ஒரு காமிக்ஸ் ரசிகர் எடுத்த படம் இவ்வளவு மொக்கையாக ஆனது வருத்தமே.

கதை.

ஆரம்பம் ஒரு படு மொக்கை.
ஒரு வீட்டில் கொள்ளை நடக்கிறது.வில்லன் எலும்புக்கூடு முகமூடி அணிந்து வீட்டில் இருக்கும் ஒரு வயதான பாட்டியை ஓடி வந்து சுத்தியில் அடித்து கொள்கிறார்.
ஒரு பாட்டியை எதுக்குப இப்படி கொல்லனும் விட்டுருந்தா அடுத்தநாள் அதுவே செத்து போயிருக்கும்.
அப்படி ஒரு பயங்கர வில்லனாம்.

இவரை பிடிக்க சிறப்பு அதிகாரி நாசர் வருகிறார்.(பாவம்)

ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஹீரோ ஜீவா.அன்பான அம்மா,எப்பொழுதும் திட்டும் அப்பா,
வீட்டின் மாடியில் அவரது தாத்தா வழக்கம் போல அவருக்கு வழிகாட்டி.
மற்றும் ஒரு தாத்தா மாடியில் இருக்கிறார் அவர் துணிகள் மூலம் பொம்மைகள் செய்பவர்.
இப்பொழுதே தெரிந்து கொள்ளலாம் இவர் தான் நம்ம முகமூடிக்கு உடை தெய்த்து தரபோகிறார்.

நமது ஹீரோ ஒரு குங்க்பூ பிரியராம்.
அவரது ஆசிரியர் செல்வா.அவர் எல்லாரிடமும் காசு வாங்காமல் குங்க்பூ சொல்லி தருவாராம்.
அதுனால அவர் பரம ஏழையாம்.ஒரு பாடாவதி வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியலேன்னு வீடு ஓனர் வேற மிரடுராரம்.

அப்பா இப்பவே முடியல பேசாம அப்பொழுதே எழுந்து வந்திருக்க வேண்டும் விதி என்ன செய்வது 500 செலவு செய்தாகிவிட்டது முழுவதும் பார்த்துவிட்டு தான் வந்தேன்.
  
நம்ம ஏழை ஆசிரியருக்கு ஆள்  தெரடுகிறாராம்  எப்படி ஒரு மீன் மார்கெட் பொய் அங்க மீன் விகிரவங்க கூட சண்ட போட்டு அவங்கள 1000 கொடுத்து கத்துக்க சொல்கிறார்.
அப்ப நம்ம ஹீரோயின் intro வேற.

வழக்கம் போல நம்ம ஹீரோ விற்கு  ஹீரோயின்  மேல காதல் வர.
அவரை கவுக்க முகமூடி அணிந்து சென்று இதய பலூன் விடுகிறாராம்.
இதனை பார்த்த உடனே நம்ம ஹீரோயின் காதல் வய படுகிறார்.

இடை பட்ட சமயத்தில் நம்ம ஹீரோ வில்லன் களின் மற்றொரு கொள்ளையின் நடுவில் மாட்டிக்கொண்டு வில்லன்களில்  ஒருவரை போலீசிடம் மாட்டிவிடுகிறார்.

ஆகையால் நம்ம வில்லன் நம்ம ஹீரோவை ஒரு கொலை கேசில் மாட்டிவிட்டு ஒரு குற்றவாளி ஆக்குகிறான்.
இதில் இருந்து நம்ம ஹீரோ தப்பித்து வில்லனை கொன்று நம்ம ஹீரோயின் காதலை எப்படி அடைகிறார் என்பதே மீதிகதை.

இடையில் ஒரு பிளாஷ் பாக் வேற நம்ம செல்வாவும் வில்லன் நரேனும் ஒரே ஆசிரியரிடம் குங்க்பூ கற்றுக்கொண்டார்கலாம்.

இறுதிகாட்சியில் நம்ம ஹீரோ சாய்க்கும் வில்லன்கள் எண்ணிகையை விட அவரது ஷெர்லோக் தாத்தா அடித்துபோடும் ஆட்கள் அதிகம்.(என்ன கொடுமை சார் இது)   

பாடல்கள் எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை.
நம்ம மிஸ்கினிடம் இருந்து இப்படி ஒரு திரைப்படம் எதிர்பார்கவில்லை.

எனது எண்ணங்கள்:
ஒரு சூப்பர் ஹீரோ படம் என்றால் ஒரு அழுத்தமான வில்லன் வேண்டும்.
ஆனால் இங்கு சாதாரண நகை கொள்ளையடிக்கும் வில்லன்.
அதுவும் அவரால் வயதானவர்கள் மட்டுமே கொல்லபடுகிறார்கள்.
இது ஒரு மிக பெரிய மைனஸ்.

காதல் காட்சிகள் எதுவுமே அழுத்தமாக இல்லை.
அவருக்கு ஏன் முகமூடி மேல் காதல் வருகிறது என்பதற்கு ஒரு அழுத்தமான காரணம் இல்லை.

இறுதியில் நம்ம ஹீரோ முகமூடி அணிவதற்கு நல்ல காரணம் இல்லை.
சும்மா ஹீரோயினிடம் முகம் காட்டக்கூடாது என்றால் அவரை வெளிபடுதிக்கொள்ளாமலே வேறு ஏதாவது செய்திருக்கலாம்.

சண்டை காட்சிகள் சில நன்றாக இருந்தாலும் அவை வீணாக்க பட்டிருகின்றன.

நான் எதிர்பார்க்கும் மாற்றங்கள்:

ஹீரோ தனது குங்க்பூ திறமையை வெளிபடுத்த ஒரு நல்ல அறிமுக காட்சி வைத்திருக்கலாம்.
ஒரு மொக்கையான மீன் மார்கெட் சண்டைக்கு பதில்,அவரது நல்ல மனதை காண்பிக்க எதாவது ஒரு கடத்தல் அல்லது ஒரு விபத்து அதில் இருந்து அவர் காப்பாற்றுகிறார்.
(க்ரிஷ் படத்தில் வரும் சர்கஸ் தீ விபத்து போல)

அடுத்து நம்ம வில்லன் சாதாரண நகை கொள்ளையனாக இல்லாமல் வேறு பெரிதாக ஏதாவது வைத்திருக்கலாம்.
பல தொடர்பே இல்லாத பல குற்றங்களை இறுதில் ஒன்றாக்கி ஒரு suspense வைத்து வேறு ஏதாவது பெரிய காரணம் சொல்லி இருக்கலாம்.

ஹீரோ ஹீரோயின் காதலை இன்னும் சற்று நல்ல காட்சி அமைப்புடன் கூறி இருக்கலாம்.

பார்க்கலாம் இந்த மாற்றங்களை தனது இரண்டாம் பாகத்தில் கொண்டு வருவாரா என்று.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.

Saturday, August 25, 2012

Director Myskin's Mayavi..


வணக்கம் நண்பர்களே,

நான் இன்டர்நெட்டில் உலாவிய போது என் கண்ணில் சிக்கியது.
இதனை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த குறும் பதிவு.
இந்த புகைப்படம் யாரை போல் உள்ளது என்பதை நான் கூற தேவையில்லை.
மிஸ்கின் மீண்டும் ஒருமுறை தான் வேதாளரின் ரசிகர் என்பதை நிருபித்துள்ளார்.
மிஸ்கின் அனைத்து பேட்டிகளிலும் கவனமாக எதிர்பார்ப்பு இல்லாமல் வந்து பாருங்கள் என்று கூறுகிறார்.
படம் வெற்றி பெற்றால் நமது காமிக்ஸும் வெற்றி பெற்றதாகவே கூறலாம்.




புகைப்படம் விகடன் சினிமாவில் இருந்து எடுத்தது.
அவர்களுக்கு நன்றி.

படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.


Friday, August 3, 2012

Sherlock - A Study in Pink (TV Series)





வணக்கம் நண்பர்களே,

சமீபத்தில் நான் Flipkart பார்த்துக்கொண்டு இருந்த போது அதில் வெளியாகி உள்ள Sherlock  தொலைக்காட்சி தொடரின் DVD பற்றி பார்த்தேன்.அத்தொடர் பற்றி நான் ஏற்கனவே எங்கோ கேள்வி பட்டு இருந்தேன். நன்றாக இருக்கும் என படித்ததாக நினைவு.

மீண்டும் அதனை பற்றி wiki இல்  பார்த்தேன்.
அத்தொடர் இதுவரை இரண்டு season BBC Entertainment இல் ஒளிபரப்பாகியது தெரிந்தது.ஒவ்வொரு season இற்கும் மூன்று அத்தியாயங்கள் வந்துள்ளன.
மற்றும் அத்தொடரின் முதல் அத்தியாயம் பல அவர்டுகளும் வாங்கியுள்ளது.

எனக்கு அதன் மேல் ஆர்வம் வந்தது.பின் torrentil அவை அனைத்தையும் டவுன்லோட் செய்தேன்.அதில் முதல் அத்தியாயம் மட்டும் பார்த்தேன்.அதனை பற்றியதுதான் இந்த பதிவு.

முதல் அத்தியாயம் - A Study in Pink 

ஷெர்லோக் ஹோல்மேஸ் ஆக Benedict Cumberbatch மற்றும் வாட்சனாக Martin Freeman உம நடித்துள்ளனர்.நல்ல தேர்வு.இருவரும் பாத்திரத்திற்கு நன்கு பொருந்துகின்றனர்.



இனி கதை,

வாட்சன் முன்னால் இராணுவ டாக்டர்.காயத்தினால் ஓய்வு பெற்று உள்ளார்.பணபற்றாகுறைஇனால் யாருடனாவது சேர்ந்து வசிக்க முயற்சி செய்து கொண்டுள்ளார்.

இதற்கிடையில் 3 சம்பவங்களை நாம் பார்க்கிறோம்.
ஒவ்வொன்றிலும் ஒரு நபர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வதை பார்க்கிறோம்.
போலீஸ் ஆபிசர் lestrange பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கிறார்.சம்பவங்கள் அனைத்திற்கும் தொடர்பு இருக்கும் என்றும் அதனை போலிஸ் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டு இருபதாக கூறுகிறார். 

அடுத்து வாட்சன் ஒரு பூங்காவில் நடந்து செல்கிறார்.அப்பொழுது அவரது பழைய நண்பரே காண்கிறார்.அவர் மூலம் மற்றொருவரும் வீட்டை பகிர்ந்துகொள்ள ஆள் தேடுகிறார் என அறிந்து அவரை காண நண்பருடன் செல்கிறார்.
அவர் தான் நமது கதாநாயகன் ஷெர்லோக்.

ஒரு லாபில் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்.அங்கு வாட்சன் தனது நண்பருடன் நுழைந்ததை பார்த்தவுடன்,
அவர் வீட்டை பகிர்ந்துகொள்ள வந்ததில் இருந்து அவர் இராணுவத்தில் இருந்தது அவரது சகொதடுடன் போக மறுத்தது அவர் சகோதரர் அவரது மனைவியை பிரிந்து வாழ்வது அவர் ஒரு குடிகாரர் என அனைத்தையும் புட்டு புட்டு வைக்கிறார்.பின் அவர் எப்படி கண்டுபிடித்தார் என விலகுகிறார்.இது நாம் ஷெர்லோக் ஹோல்மேஸ் திரைபடத்தில் பார்த்தது போல இருக்கும்.

பின் இருவரும் 221B baaker வீதியில் இருக்கும் வீடிற்கு வருகிறார்கள்.அங்கு MRS .ஹட்சன் அறிமுகம். 
அங்கு அவரை காண இன்ஸ்பெக்டர் lestrange வருகிறார்.அவர் வந்ததை கண்டு நான்காவதாக ஒரு தற்கொலை நடந்து இருப்பதை அறிகிறார். 

அந்த இடத்திற்கு சென்று பிணத்தை ஆராய்கிறார்.அதன் மூலம் அவர் கொண்டு வந்த பெட்டி காணாத்தை கண்டுபிடிக்கிறார்.தரையில் நகம் கொண்டு இறந்த பெண் RACHE என எழுதி உள்ளதை பார்க்கிறார்.சில ஆராய்ச்சிக்கு பிறகு அது அவரது பிறக்காத பெண் RACHEL  என அறிகிறார். சில தடயங்களின் மூலம் இதுவரை நடந்தது அனைத்தும் ஒரு தொடர் கொலை என கூறுகிறார்.

பின் அவரது தொலை பேசி தொலைந்து போயுள்ளதை கண்டுபிடிக்கிறார்.அதன் மூலம் கொலையாளியின் இருப்பிடத்தை அறிய முயல்கிறார்.ஆச்சர்யம் அவன் அவரது வீட்டில் உள்ளதாக காண்பிக்கிறது.ஒரு டாக்சி டிரைவர் 
அவர் வீட்டிற்குள் அந்த கைபெசியுடன் வருவதை காண்கிறோம்.

பின் இறுதில் ஒரு வார்த்தைஜால கிளைமாக்ஸ்.என்னால் அணைத்து வசனங்களையும் கூற முடியவில்லை அந்நாள் நண்பர்கள் பார்த்தால் நன்றாக இருக்கும்.

இனி கருத்து,

படம் நன்றாகவே உள்ளது.அதுவும் வசனங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.
ஆனால் ஹீரோ மிக வேகமாக பேசுகிறார்.subtitle இருந்தும் தொடர்வது கஷ்டமாகவே உள்ளது.அது ஒரு குறை தான்.
இறுதில் அவரது பரம எதிரியான ஜான் மோரியாரிட்டி பற்றி வருகிறது.
இக்கதை ஒரு ஆரம்பம் தான்.எப்படி ஷெர்லோக் கும் வாட்சனும் எப்படி நல்ல பார்ட்னர் களாக மாறுகிறார்கள் என்பதை அழகாக கூறி உள்ளார்கள். கண்டிப்பாக அனைத்து ஷெர்லோக் ரசிகர்களுக்கும் பிடிக்கும்.
கண்டிப்பாக பார்க்க முயற்சி செய்யுங்கள் நண்பர்களே.
பார்த்துவிட்டோ அல்லது பார்திருந்தாலோ உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.     
இத்தொடரின் மூன்றாவது பாகம் தயாராகி கொண்டு இருக்கிறது.
இதனை பற்றி மேலும் அறிய கீழ்க்கண்ட லிங்க் பாருங்கள்.


அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.





Friday, July 20, 2012

The DARK KNIGHT RISES - An Epic END




வணக்கம் நண்பர்களே,

இதோ காலை 11.20 மணிக்காட்சி படம் பார்த்து விட்டு வந்து விட்டேன்..

உண்மையிலேயே இது ஒரு epic end  தான்.The Film is spectacular in its own way.

பொதுவாகவே தொடர் பாகங்களாக வரும் திரைப்படங்கள் முந்தைய பாகங்கள் அளவுக்கு இருபதில்லை.ஆனால் இப்படம் இதன் முந்தய பாகமான தி டார்க் knight இற்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை.

நாம் avengers படம் பார்த்து ரசித்தோம் ,அது ஒரு வகையான entertainment .
ஆனால் இந்த திரைப்படம் நோலனுக்கே உரித்தான வகையில் நம்மை entertain செய்கிறது.

படம் ஆரம்பிக்கும் முன்பே மற்றும் ஒரு விருந்து Man  of  Steel திரைபடத்தின் trailer.Superheroes  படங்களை ஒரு fantasy movie களாகவே பார்த்த நமக்கு இது ஒரு வரவேற்க தக்க மாற்றம் என்பேன்.இதுவரை நாம் பார்க்காத சூப்பர் man நாம் பார்கபோகிரோம் எனபதற்கான ஒரு அருமையான முன்னோட்டமாக உள்ளது.

இனி Batman இற்கு வருவோம்.படத்தின் ஆரம்பமே அதிரடியாக உள்ளது.
கண்டிப்பாக பலரும் youtube இல் உள்ள முதல் preview இல்  பார்த்த விமானக்கடத்தல் தான் ஆரம்பம்.

 அட்டகாசமாக உள்ளது.சிறிய விமானத்தை ஒரு பெரிய விமானம் கொண்டு நிர்மூலமாக்கி sceintist கடத்துகிறார்கள்.

படத்தில் வரும் அனைத்து வசனங்களும் அருமையாக உள்ளன.

கதை அனைவரும் தெரிந்ததே கோதம் இப்பொழுது அமைதிப்பூங்காவாக உள்ளது.ஹார்வே டென்ட் இறந்து 8 வருடங்கள் ஆகின்றன.batman பழி ஏற்துக்கொண்டு மறைந்து போகிறார்.கமிசனர் gordan நகரில் உள்ள அனைத்து தீயவர்களையும் சிறையில் அடைத்து விட்டார்.

அப்பொழுது ஒரு புது எதிராளி முளைகிறான் அவன் தான் Bane.

அவனிடம் ஒரு nuclear bomb.நகரையே நிர்மூலமாகுகிறான்.அவனிடம் இருந்து எப்படி தனது உயிரையும் துச்சமாக மதித்து காப்பாற்றுகிறார் என்பதே கதை.

படத்தில் ஆக்சன்,ஹுமர்,சென்டிமென்ட் அனைத்துமே உள்ளது.

நான் அமைதியாக பார்க்க வேண்டும்  என்று தான் போனேன் ஆனால் batman introduction scenirkku வந்த விசில்களில் நானும் மூழ்கி பின் வந்த பல காட்சிகளுக்கு நானும் கூவு கூவென்று  கூவினேன்.தவிக்க முடியவில்லை.

Batman இன் அறிமுக காட்சி.


படத்தின் வில்லன் bane என தெரிந்த உடனே மிகவும் எதிர்பார்கபட்ட bane batman இன் முதுகை உடைக்கும் காட்சி படத்தில் உள்ளது.

Bane batman இன் இடுப்பை உடைக்கும் காட்சி.








ஆனால் படத்தில் வரும் bane பற்றிய கதை காமிக்ஸில் வருவது போலதான் இருக்கிறதா என தெரியவில்லை.நண்பர்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் படம் பார்த்துவிட்டு.

படத்தின் இறுதியில் வரும் திருப்பம் நாம் எதிர்பார்காததாக உள்ளது.
படத்தில் ராபின் பற்றிய துணுக்குகளும் உண்டு.நோலன் இதனை இறுதிப்படம் என்று கூறினாலும் கிளைமாக்ஸ் அவருக்கு வேண்டும் என்றால் தொடர்வது போலவே அமைந்தஊள்ளது.

நாமும் அவர் தொடர வேண்டும் என்றே ஆசைபடுவோம்.

இறுதி சண்டை காட்சி.


படத்தில் அனைவரும் நன்றாகவே நடித்துள்ளனர்.
படத்தின் சண்டை காட்சிகளும் அருமையாக உள்ளன.
இறுதில் catwon மற்றும் batman சேர்ந்து செய்யும் chasing காட்சி நன்றாக உள்ளது.

மொத்தத்தில் அனைவரும் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம்.
படத்தின் சுவாரஸ்யம் பார்க்கும் உங்களுக்கு குறையக்கூடாது என்பதற்காக நான் பல காட்சிகளை விவரிக்க வில்லை.நீங்களாகவே பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த நேரத்தில் கார்த்திக்கின் பதிவை பார்த்தேன் மிகவும் வருத்தமாக இருந்தது.

அடுத்த பதிவாக என்னிடம் உள்ள மாடஸ்டி காமிக்ஸ் தொகுப்பை வெளியிட உள்ளேன்.

அவ்வளவுதான் நண்பர்களே.
மீண்டும் சந்திப்போம்,

கிருஷ்ணா வே வெ .

Tuesday, July 17, 2012

நான் ஈ - ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம்.





வணக்கம் நண்பர்களே,

இப்பதிவில் நான் பார்த்த நான் ஈ திரைப்படம் பற்றிய எனது கருத்தை கூற உள்ளேன்.
படம் வந்து ஹிட்டும் ஆயிருச்சு நிறைய விமர்சனங்களும் வந்தாச்சு.
இருந்தாலும் நல்ல விசயத்தை யார் வேண்டும என்றாலும் எத்தனை  முறை வேண்டும என்றாலும் கூறலாம் என்பதன் அடிபடையில் இந்த பதிவு.

நண்பர் யுவகிருஷ்ணா இப்படத்தின் டைரக்டர் ராஜமௌலி பற்றி விரிவாக கூறியுள்ளார்.
படிக்காத நண்பர்கள் கீழே உள்ள சுட்டியில் படித்துக்கொள்ளவும்.


மற்றும் நண்பர் கார்த்திக் வேறு படம் மிகவும் நன்றாக உள்ளது என்று எனது ஆர்வத்தை கூட்டினார்.
ஒரு வழியாக கடந்த வெள்ளி அன்று இரவு இந்த திரைப்படத்தை பார்த்தேன்.

படம் அருமையாக இருந்தது.ஏன் இதனை ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் என்று கூறுகிறேன் என்றால் நான் படம் பார்த்த போது என்னுடன் அனைத்து வயதை சார்ந்தவர்களும் பார்த்தார்கள் அனைவரும் ரசித்து சிரித்தார்கள்.
எத்தனை படங்கள் இன்றைய கால கட்டத்தில் இப்படி வருகின்றது?
அந்த முறையில் ராஜமௌலிக்கு ஒரு salute.

ஒரு படத்தின் trailer மிகவும் நன்றாக இருக்கும் ஆனால் படம் அந்த அளவிற்கு இருக்காது.
ஆனால் இப்படத்தின் trailer எந்த அளவிர்க்கு மக்களை கவர்ந்ததோ அதே அளவிற்கு படமும் இருந்தது.

கதை நாம் அனைவரும் trailer இல் இருந்து அறிந்ததே.

இரு காதலர்கள்.
காதலியை அடையநினைக்கும் வில்லன் 
அதற்காக இறக்கும் ஹீரோ,
மீண்டும் ஒரு ஈ ஆக வந்து பழி வாங்குவதே கதை.

அனால் படத்தின் screenplay  இல் மனுஷன் புகுந்து விளையாடி இருக்கிறார்,
படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அருமையாக உள்ளன.

படத்தின் ஹீரோ நானி எனக்கு பிடித்தமான ஒருவர்.அவரது அனைத்து படங்களையும் நான் பார்த்துள்ளேன்.
இப்படத்தில் சிறுது நேரமே வந்தாலும் நன்றாக உள்ளார்.
காதல் காட்சிகள் நன்றாக இருந்தது.

படத்தின் ஹீரோயின் சமந்தா சற்றே மெலிந்து காணபடுகிறார்.ஆனாலும் சற்றே பூசினாற்போல விண்ணை தாண்டி வருவாயா வில் வந்தவரையே எனக்கு பிடித்திருகிறது.அவரும் நன்றாகவே நடித்துள்ளார்.

Screenirkku பின்னால் score செய்தவர் ராஜமௌலி என்றல் screenil score செய்தவர் நிச்சயம் வில்லனாக வரும் சுதீப்.அருமையான தேர்ந்த நடிப்பு.அவர் இல்லாத ஒரு ஈயிடம் மாட்டிக்கொண்டது போல அவர் நடிக்கும் காட்சிகள் நன்றாக ரசிக்கும் படி உள்ளன,
அந்த காட்சிகளை என்னுடன் பார்த்துக்கொண்டு இருந்த குழந்தைகள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

படத்தின் மிகப்பெரிய பலம் என நான் நினைப்பது கூடிய மட்டும் லாஜிக் இருபதாக காட்டியது தான்.
ஒரு ஈயினால் என்ன செய்யமுடியுமோ அந்த அளவே செய்து இருபது.
காதிற்கு அருகில் வந்து சத்தம செய்வது.ஒரு ஈயின் பார்வையில் நாம் பார்க்கும் பொது எப்படி தெரியும் என காட்டியது.
நாம் சாதாரணமாக ஒரு ஈயை பார்க்கும் போது அது எப்படி அடிகடி தன முன்னங்கால்களை தூக்கி உரசிக்கொண்டே இருக்குமோ அது போலவே காட்டியது என பல கூறலாம்.
கதாபத்திரங்களின் அமைப்பும் கதைக்கு தேவையானபடி புத்திசாலித்தனமாக அமைத்துள்ளார் டைரக்டர்.

படத்தின் பாடல்கள் சுமாராக இருந்தாலும் பின்னணி இசை நன்றாக  உள்ளது.

படத்தின் இறுதில் வந்தாலும் சந்தானம் தான் தற்போதைய வின்னிங் காமடியன் என நிரூபிக்கிறார்.
மொத்தத்தில் அனைவராலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
இது வரை பார்க்காத நண்பர்கள் தயவுதெய்து குடும்பம் குட்டியுடன்(குழந்தைகளுடன்) சென்று பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.

Friday, July 13, 2012

Billa II பற்றிய எனது கருத்து.



முன்கதை.(எனது கதை):

நான் ஒரு தீவிர அஜித் ரசிகன்.
சூப்பர் ஸ்டார் படமும் தல படமும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும்.


இம்முறை பில்லா ரிலீஸ்.
சரி எப்படியும் செவ்வாய் இரவுதான் புக்கிங் ஓபன் ஆகும் பார்த்து விடலாம் என்று இருந்த எனக்கு ஒரு பெரிய இடி.
ஞாயிறு இரவே அனைத்து தியேட்டர் டிக்கெட்டும் ஓபன் ஆகி விற்று தீர்ந்து விட்டது.

இருக்கும் ஒரே சாய்ஸ் சத்யம் சினிமாஸ்.
சரி புக் பண்ணிவிடலாம் என்று 12 மணிக்கு அலாரம் வைத்து விட்டு செவ்வாய் இரவு தூங்கினேன்.

அலாரம் அடித்து 12 மணிக்கு எழுந்தரித்து லேப்டாப் on செய்து விட்டு சத்யம் வெப்சைட் ஓபன் செய்து உட்காரர்ந்து இருந்தேன்.
1 மணி நேரம் பேஜ் ரெப்ரெஷ் செய்து செய்து காத்திருந்தேன்.
செரியாக ஒரு மணிக்கு பில்லா 2 புக்கிங் ஓபன் ஆனது.
பார்த்ததும் பெரிய இடியே விழுந்தது போல இருந்தது. .ஓபன் செய்யும் போதே அனைத்து டிக்கெட்ஸ் விற்று தீர்ந்து விட்டதாக வே லோட் செய்தனர்.
பக்கம் முழுக்க ஒரே சிவப்பாக இருந்தது.எனக்கு நம்ம கவுண்டர் டயலாக் தான் ஞாபகம் வந்தது.
" இந்த பொலபுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா திரியறீங்க".

வேறு வழியே இல்லாமல் கடைசி சாய்ஸ் ஆக வைத்து இருந்த மாயாஜால் தியேட்டரில் வெள்ளி காலை 8.20 மணி ஷோவிற்கு முதல் ரோவில் 10 டிக்கெட் புக் செய்தேன் ஒரு நண்பர் மூலமாக.நான் எதற்காக இவ்வளவு விவரமாக எழுதுகிறேன் என்றால்.டிக்கெட் கிடைக்க நான் எவ்வளவு கஷ்டப் பட்டேன் என்று தெரிந்து கொள்ள தான்.

இன்று காலை திரைப்படம் ரிலீஸ் ஆனது காலை ஆறுமணிக்கே எளுந்துரிச்சு 7.45 மணிக்கு எல்லாம் நண்பர்கள்  படை சூழ போயாச்சு.


இனி விமர்சனம்.


கண்டிப்பாக ஒரு ரசிகனை முழுமையாய் திருப்தி படுத்தவில்லை என்பதே எனது கருத்து.
ஒரு action படம் எடுக்க நினைத்து அதனை முழுமை படுத்தவில்லை.


கதை நாம் அனைவரும் அறிந்த்தது தான்.
இலங்கையில் இருந்து வரும் அகதி டேவிட் எப்படி உலகம்  முழுவதும்  தேடப்படும் ஒரு கொடூர don Gangster டேவிட் பில்லா ஆகிறான் எனபது தான்.


படத்தின் ஆரம்ப காட்சி அருமையாக உள்ளது.
அஜித்தின்  வயிற்றில்  சிறு கத்தி.அவரை இருவர் முட்டி போட வைத்து பிடித்துள்ளார்கள்.சுற்றிலும் மேலும் பலர்.
ஒரு பஞ்ச் வசனத்தோடு ஆரம்பிகிறது.

"டேய் ஏன் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிசமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுகுனதுடா"
அஜித் சிறு கத்தியை வைத்துக்கொண்டு செய்யும் சண்டை ஒரு Action அட்டகாசம்.


அதனை தொடர்ந்து டைட்டில் கார்டு அவரது இலங்கை சிறு வயது வாழ்கையை புகைப்படங்களாக காட்டுகிறது.
அதுவும் நன்றாகவே உள்ளது.
ராமேஸ்வரம் வரும் அவர் அப்படியே சென்னை கோவா பரோயா என அவரது வளர்ச்சி தொடர்கிறது.
ஒவ்வொரு இடத்திலும் ஒரு வில்லனை போட்டு தள்ளி விட்டு முன்னேறுகிறார்.
இது பில்லா 1 படத்தில் வரும் வசனத்தை நமக்கு நினைவு படுத்தும்.
" நாம வாழனும்னா யார வேணாலும் எப்ப வேணாலும் எப்புடி வேணாலும் கொல்லலாம்" எனபது தான் அது.


இரண்டு  ஹீரோயின்கள்  வந்து போகிறார்கள் பேருக்கு.
இதில் ஆச்சர்யம் என்ன வென்றால் பார்வதிக்கு பாடலே கிடையாது.


3 பாடல்கல் நன்றாக உள்ளன.
மதுரை பொண்ணு - வாலிபர்கள் கண்களுக்கு விருந்து ஹி ஹி ஹி
உனக்குள்ளே மிருகம் - ஒரு பாட்டிலேயே தல எப்படி don ஆகிறார் என்பத்தை நன்றாக காட்டியுள்ளனர். VFX Effect நன்றாக உள்ளது.
Gangster சாங் - நான் பயந்தது போலவே end creditil போட்டு வேஸ்ட் செய்து விட்டனர்.


Action காட்சிகள் அனைத்தும் நன்றாக உள்ளன.ஆனால் ஒரு சில காட்சிகள் இன்னும் சிறப்பாக கொஞ்சம் convincing ஆக எடுத்து இருக்கலாம்.
ஆயுத கடத்தலின் போது முதலில் shot gunnodu ஸ்டைலாக ஆரம்பிக்கும் ஆனால் மொக்கையாக முடிந்துவிடும்
கிளைமாக்ஸ் காட்சியில் கூட இன்னும் கொஞ்சம் convincing ஆக எடுத்து இருக்கலாம்.Helicopter fightum திருப்தியாக இல்லை.


வில்லன்கள் இருவருமே POWERFULAAKA உள்ளனர்.
இந்த வில்லன்தான் விஜயின் துப்பாகியிலும் வில்லன் எனபது கொசுறு செய்தி.
ஆரம்ப காட்சியில் வரும் இளவரசு சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.


கேமரா அருமையாக உள்ளது.
காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் அருமையாக உள்ளது.
வசனங்கள் அனைத்தும் அருமை.சிலசமயம் சற்று போதனைள் போல் இருக்கு feelingayum தவிர்க்க முடியவில்லை.

இறுதில் மீதி உள்ள அனைவரையும் கொல்வது நம்ம ராம் கோபால் வர்மா திரைபடம் போல இருந்தது. 

மொத்ததில் எடுக்க நினைத்ததை முழுமையாக எடுக்காத ஒரு feeling வருகிறது.
கொசுறு செய்தி : என்ன தான் இருந்தாலும் தலக்காக வரும் ஞாயிறு காலை சத்யம் சென்று இரண்டாம் முறையும் பார்க்க போகிறேன்.


அவ்வளவுதான் நண்பர்களே.
கிருஷ்ணா வ வெ.