லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனும் லயன் காமிக்ஸும்

லண்டனும் லயன் காமிக்ஸும்

Memories (2013) - Malayalam Movie Review

Memories (2013) - Malayalam Movie Review

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

Wednesday, December 26, 2012

சுரங்க வெடி and வைரக் கொள்ளை - A Super Hero Tiger Action


வணக்கம் நண்பர்களே,

மீண்டும் டைகரின் இரண்டு கதைகளோடு இந்த பதிவு.
இத்துடன் டைகர் கதைகள் நிறைவு பெருகின்றன.

டிராகன் நகரம் தயாராக சற்று நேரம் எடுக்கின்றது ஆகையால் இந்த குறும் பதிவு நண்பர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

முதல் கதை சுரங்க வெடி. ஒரு அணையின் அருகே உள்ள கைவிடப்பட்ட சுரங்கத்தில் பயங்கரவாதிகள், பாக்ஸ் என்பவனின் தலைமையில் வெடிகுண்டு வைத்து சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களை அழித்துவிடுவோம் என பயமுறுத்துகின்றனர் 

இதனை முறியடிக்க டைகர் மற்றும் ஹென்றி அனுப்பப்படுகின்றனர்.அவர்கள்  அணைக்கு வெடி வைத்து அந்த சுரங்கத்தை தண்ணீரில் மூழ்கடித்து கிராமங்களை காப்பாற்றுகின்றனர்.






இரண்டாவது கதை வைரக் கொள்ளை. ஹிட்லர் என்ற பயங்கரவாதி மிக பெரிய காந்தம் பொருத்தப்பட்ட இயந்திரம் மூலம் வைரங்கள் வைத்திருக்கும் இரும்பு பெட்டியை கொள்ளையடிகிறான். பின் ஒரு அருவியின் பின்னால் இருக்கும் மறைவிடத்தில் சென்று ஒளிந்து கொள்கிறான்

அவனது இருப்பிடத்தை கண்டு பிடித்து அவனை சட்டத்தின் பிடியில் கொண்டு வருகிறார் டைகர்.









அடுத்து பூந்தளிரில் வந்த சிறு கதைகளின் புகைப்படங்கள் வெளியிடலாம் என்று இருக்கிறேன்.அதனை பற்றிய உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

சாப்ளின் மாமா,கபீஷ்,காளி,அணு கழகம் போன்ற பல கதைகள் அத்தொடர் பதிவுகளில் இடம் பெரும்.இது குழந்தைகளுக்காகவும் உதவும் என நினைக்கிறன்.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.

Friday, December 21, 2012

டிராகன் நகரம் - A Tex Willer Action Adventure Part 1

முன் அட்டை 
பின் அட்டை 



விரைவில் வருகிறது 
விரைவில் வருகிறது
வணக்கம் நண்பர்களே,

இது எனது 50வது பதிவு.மீண்டும் ஒரு காமிக்ஸ் பதிவு.
ஏப்ரல் மாதம் ஆரம்பித்த எனது வலைபூ பயணம் இதோ 50வது பதிவை வந்து அடைந்திருகிறது.

இதுவரை 44 நண்பர்கள் எனது வலைப்பூவை தொடருகிறார்கள் எனது வலைப்பூவின் பார்வை 12000 நெருங்கி நிற்கிறது. ஏதோ ஒரு ஆர்வத்தில் ஆரம்பித்து ஓரளவு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது
இந்த நேரத்தில் என்னை ஆதரிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன்.மற்றும் நான் வலைபூ ஆரம்பிக்க ஒரு தூண்டுகோலாக இருந்த விஜயன் சார், கிங் விஸ்வா, முத்து விசிறி, மற்றும் நம்ம சௌந்தர் ஆகியோருக்கு என் நன்றிகள்.

நான் எனது பதிவிற்கு எடுத்துகொண்டிருக்கும் கதை டெக்ஸ் வில்லரின் டிராகன் நகரம் இதற்கு பல காரணங்கள் இருகின்றன. இக்கதை லயனின் 50வது இதழாக வந்தது. மற்றும் எனது புனைப்பெயரான இரவுக்கழுகின் சாகசம். அது தவிர நமது விஜயன் சாரே எந்த ஒரு ஸ்பெசல் இதழுக்கும் டெக்ஸ் கதைகளையே தேர்வு செய்கிறார். பின்பு நான் மட்டும் ஏன் மாறுபடவேண்டும்.

எனது சமீப பதிவுகளின் நீளம் மிக குறைவாக இருக்கிறது என நண்பர்கள் பலர் கருத்து சொன்னார்கள் அவர்களுக்காகவும் இதோ மீண்டும் ஒரு நீளமான பதிவு.

கதையில் "டெக்ஸ் சை" என வரும் இடங்களில் நான் "வில்லரை" என பயன்படுதியுள்ளேன் ஆனால் கதையின் ஒரு கட்டத்திற்கு பிறகு "கில்லரை"  என கூறி உள்ளேன் மற்ற இடங்களில் டெக்ஸ் என்றே கூறி உள்ளேன்.இதனை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இதோ உங்களுக்காக டிராகன் நகரம்.நேரே கதைக்கு செல்வோம்.


கதை:


இடம் : ஆஸ்டனில் உள்ள ரேஞ்சர் களின் தலைமையகம்.

டெக்ஸாஸ் நகரில் அட்டூழியம் புரிந்துவரும் கொடியவர்களை அழிக்க டெக்ஸிடம் கேட்கிறார் ரேஞ்சர்களின் தலைவர். இங்கிருக்கும் அனைத்து ரேஞ்சர்களையும் அங்கு இருக்கும் கயவர்களுக்கு தெரிந்ததால் அவர்களை கொன்று விடுகிறார்கள். ஆகையால் இந்த பகுதியை சேராத வில்லரை  அழைத்ததாக கூறுகிறார். தனக்கு துப்பாக்கியை பயன்படுத்த முழு அதிகாரம் இருந்தால் மட்டுமே தான் இதில் ஈடுபடுவதாக கூறுகிறார் டெக்ஸ். தான் ரேஞ்சர் என்பதை வெளிபடுத்த போவதில்லை என்று டெக்ஸ் உறுதி  அளித்தபின் அதற்கு சம்மதிக்கிறார் ரேஞ்சர்களின் தலைவர் கர்னல். பின் அங்கிருந்து ஹோட்டலில் இருக்கும் தனது குழுவிற்கு ஒரு கடிதம் அனுப்பிவிட்டு டெக்ஸாஸ் நோக்கி ஹூஸ்ட்ன் சாலையில் புறப்படுகிறார்.




அங்கு நடக்கும் நிகழ்வுகளை எதிர் கட்டிடத்தில் இருந்து ஒரு கயவன் தொலைநோக்கி மூலம் காண்கிறான். வழியில் வில்லரை மடக்க அவரை பின் தொடருகிறான்.

இதற்கிடையில் டெக்ஸின் கடிதம் கிடைக்கப்பெற்ற கார்சன் அதனை மற்ற இருவருடன் பகிர்ந்து கொள்கிறார். அதில் தான் கிளம்பியபின் 15 நிமிட இடைவெளிவிட்டு தன்னை தொடர டெக்ஸ் கூறியிருந்தார். அதன் படி கிளம்பிய கார்சன், கிட் மற்றும் டைகர் வில்லரை பின் தொடரும் கயவனை பார்கின்றனர். டெக்ஸின் மதிநுட்பத்தை மூவரும் பாராடுகின்றனர்.

மாலையானதும் வழியில் டெக்ஸ் ஒரு இடத்தில தங்கினார். அதனை கண்ட அந்த கயவன் இரவானதும் வில்லரை வீழ்த்த காத்திருக்கிறான். அதனை கண்ட நண்பர்கள் குழுவும் அவனது அடுத்த செயலுக்காக காத்திருந்தனர்

இரவானது அந்த கயவன் வில்லரை வீழ்த்த தனது துப்பாக்கியை எடுத்தான் ஆனால் அதற்குள் நமது குழு அவனை மடக்கியது, அனாலும் கையில் இருந்த  துப்பாக்கியை தூக்கி சுடப் பார்தான் வேறு வழி இல்லாமல் அவனை சுட்டு வீழ்த்தினர். சிறிது நேரத்தில் அங்கு வந்து குழுவுடன் சேர்ந்தார் டெக்ஸ்.



இறந்த கயவனின் உடுப்புகளை சோதித்தார். அதில் ஒரு கடிதம் இருந்தது, அது ஜிம் என்பவன் ப்ரெட் என்பவனுக்கு எழுதிருந்தது. அதன் மூலம் இறந்தவன் தான் ப்ரெட் என அறிந்துகொண்டனர். அக்கடிதத்தின் சாரம்சம் இது தான் "ரீகன் தெருவில் இருக்கும் மதுபானக்கடையை மானுவல் வாங்க தீர்மானித்திருகிறார்" என்பதே.

இருதினங்களுக்கு பின் நண்பர்கள் டெக்ஸாஸ் நகரை அடைகின்றனர். டைகர் மட்டும் நகருக்கு வெளியில் தங்கி டெக்ஸின் மறு உத்தரவுக்காக காத்திருந்தான். நண்பர்கள் அந்த லாங்க்ஹார்ன் மதுபானக்கடையை கண்டுபிடித்து நுழைந்தனர். அங்கு கடையை விலை பேசிக்கொண்டு இருந்தவனை அடித்து துரத்துகிறார் டெக்ஸ்.


ஆட்டத்தின் முதற்கட்டம்:

அதனால் பயந்த அந்த கடையின் பார்மேன் அவர்களை அங்கிருந்து உடனே கிளம்ப சொல்லுகிறான் அல்லது அவர்கள் அடித்த ஜிம் அவன் ஆட்களுடன் வந்து அவர்களையும் கடையையும் நாசம் செய்துவிடுவான் என கூறுகிறார். அதற்கு டெக்ஸ் அந்த கடையை 2000 டாலர்களுக்கு தான் வாங்கி கொள்வதாகவும், ஆபத்திலும் பங்கு தருவதாகவும் கூற பார்மேன் டாம் சந்தோசத்துடன் சம்மதிக்கிறான்.


இதற்கிடையில் பாரடைஸ் மதுபானக்கடையில் இருக்கும் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு போக்கர் ஜிம் டெக்ஸ் குழுவினரை வீழ்த்த மீண்டும் வருகிறான். ஆனால் அவர்கள் அனைவரையும் சுட்டு வீழ்த்தி விடுகின்றனர் நமது வீரர்கள். போக்கர் ஜிம் மற்றும் நெட் கார்னெல் மட்டும் தப்பி விடுகின்றனர்.

இந்த ஆக்சன் காட்சியை நான் விவரிப்பதை விட நீங்கள் படங்களில் காண்பதே முழு திருப்தி அளிக்கும்.




சண்டை முடிந்ததும் வெற்றியை கொண்டாட அங்கிருக்கும் அனைவருக்கும் இலவசமாக மது வழங்குகிறார் டெக்ஸ். இதற்கிடையில் அங்கு இருந்து ஓடிய இருவரையும் கண்ட ஷெரிப் கடைக்குள் வருகிறார். அங்கிருக்கும் வில்லரை  துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார்.

டெக்ஸ் கில்லர்: 

சூடான விவாதத்தின் பின் மற்றும் பார்மேன் டாம் விளக்கி சொன்னபின் சமாதானம் ஆகிறார். தனது பெயர் பர்குசன் மற்றும் தனது டெபுடி பெயர் பிப் டர்பின் என அறிமுகம் செய்துகொள்கிறார். டெக்ஸ் தன்னை டெக்ஸ் கில்லர் என்றும் கார்சனை பார்சன் என்றும் மற்றும் கிட்டையும் அறிமுகம் செய்கிறார்.

(இந்த இடத்தில் எனக்கு ஒரு சந்தேகம் டெக்ஸ் வேண்டும் என்றே தனது பெயரை மாற்றி சொல்கிறாரா அல்லது இக்கதையில் அவர் பெயரே அதுதானா? நண்பர்கள் தெரிந்தால் சொல்லலாம்.)

டெக்ஸ் ஜிம்மை ஏன் கைது செய்யவில்லை என்பதற்கு அவன் ராட்சத பர்சக்கரத்தின் ஒரு பல் எனவும், அந்த சக்கரம் கில்லரை நோக்கி சுழலாம் எனவும் எச்சரிக்கை செய்கிறார், மேலும் ஒரு சுடுகாட்டிற்கு அழைத்து சென்று இறந்த ஷெரிப்கள்  மற்றும் ரேஞ்சர்கள் சமாதியை காட்டுகிறார். பின் அங்கிருந்து கிளம்புகிறார்.

இதற்கிடையில் ஜிம் பாரடைஸில் மானுவலை சந்தித்து விவரம் கூறுகிறான்.
அவனை திட்டும் மானுவல் அவன் தான் கில்லரை கொல்லவேண்டும் இல்லையேல் மீண்டும் அங்கு வரவேண்டாம் என கூறிவிடுகிறான். இதற்கிடையில் டைகரை சந்திக்கும் நண்பர்கள் அவரை நகருக்கு வெளியில் தங்கிக்கொள்ளவும் விழிப்போடு இருக்கவும் கூறுகிறார். ஏதாவது தகவல் இருந்தால் லாங்க்ஹார்னில் டாமிடம் கேட்டுகொள்ளசொல்லுகிறார். அன்றிரவு பட்டாசு வேடிக்கை நடக்கலாம் என எச்சரிக்கை செய்கிறார்.

பட்டாசு இரவு:

அன்றிரவு ப்ளாட்டர் உணவு விடுதியில் நண்பர்கள் இருந்தார்கள். அந்த செய்தியை நெட்டிடம் இருந்து அறிந்த ஜிம் கில்லரை கொல்ல தனித்து வருகிறான். கடையை அடைந்த ஜிம் ஒரு ஜன்னலோரத்தில் இருந்து கில்லரை  குறி வைத்தான். ஆனால் அதனை மறைந்து இருந்து பார்த்த டைகர் அவனை நோக்கி சுட அது தவறி ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிடுகிறது. அதனால் சூதாரித்துக்கொண்ட நண்பர்கள் ஜன்னலை நோக்கி சரமாரியாக சுடுகின்றனர்.
அந்த குண்டுகள் பட்டு ஜிம் இறந்துவிடுகிறான். டைகர் அங்கிருந்து மறைந்து விடுகிறார்.


அப்பொழுது அங்கு டெபுடி பிப் வருகிறார். அவரிடம் தங்கள் தற்காப்புக்காகதான் சுட்டோம் என விளக்கம் கொடுகிறார்கள். அங்கு நடந்ததை  கண்ட ஒரு கயவன் பாரடைஸ் சென்று நெட்டிடம் ஜிம் இறந்ததை கூறுகிறான். உடனே நெட் அந்த செய்தியை மானுவலிடம் சென்று கூறிகிறான் அதனை கேட்ட மானுவல் ஒரு கடிதம் எழுதி நெட்டிடம் கொடுத்து டெக்ஸிடம் சென்று கொடுக்க சொல்லுகிறான். அதனை எடுத்து சென்ற நெட் ப்ளாட்டர் உணவு விடுதியில் இருந்த கில்லரை கண்டு கொடுக்கிறான்.

கடிதத்தில் மானுவல் தன்னை பாரடைஸ் வரச்சொல்லி அழைப்பு விடுத்துள்ளதை நண்பர்களிடம் கூறுகிறார் டெக்ஸ். அந்த கடிதத்திற்கு அவருடைய பதிலை கேட்ட நெட்டிடம் தான் ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார். இடம் கேட்ட டெக்ஸிடம் பாரடைஸ் வரச்சொல்கிறான். தான் 15 நிமிடத்தில் வருவதாக சொல்லி அவனை அனுப்புகிறார்.

பின் அனைவரும் கிளம்பி பாரடைஸ் வந்தடைகிறார்கள். அங்கு ஒரு மடையன் கில்லரை சீண்ட அவனை அடித்து துவைக்கிறார். அப்பொழுது அங்கு வரும் நெட் அவர்தான் ஜிம்மை பரலோகம் அனுப்பிவைத்தவர் எனகூறி கில்லரை மானுவலிடம் அழைத்து செல்கிறான். மேலே செல்லும் டெக்ஸ் மானுவலிடம் தன்னை டெக்ஸ் கில்லர் என அறிமுகம் செய்துகொள்கிறார்.



டிராகனின் முத்திரை:

இருவருக்கும் இடையில் மிகவும் சூடான விவாதம் நடக்கிறது. லாங்க்ஹார்னை தன்னிடம் விற்று விட சொல்கிறான்.

மற்றும் தான் மற்றும் தனது கூட்டாளிகள் சேர்ந்து இந்த பிரேதேசத்தில் உள்ள அனைத்து மதுபானகடைகளையும் வாங்கியுள்ளதாகவும், இது மட்டுமே மீதம் உள்ளதாகவும், அதனையும் தனக்கு விற்று விட்டு தங்களிடம் வேலைக்கு சேர்ந்து கொள்ள சொல்கிறான். தங்களது கடைகள் அனைத்தின் பாதுகாப்பை பார்த்துக்கொள்ளும் வேலையை செய்ய சொல்கிறான். இதற்கு நல்ல சம்பளமும் லாபத்தில் பங்கும் தருவதாக கூறுகிறான்.

ஆனால் அனைத்தையும் மறுத்த டெக்ஸ் தான் விற்கப்போவதில்லை என்றும் மதுபானக்கடை ஒன்றுதான் பணம் சம்பாதிக்க நல்ல வழி என்றும் மேலும் இங்கு இருக்கும் ஷெரிப் கையாலாகாதவர், ஆகையால் தான் ஒரு ஒரு சூதாட்ட அரங்கை தனது கடையில் நிறுவப்போவதாகவும், அதில் தொழில் முறை சூதாடிகளிடம் லாபத்தில் பங்கு வாங்கப்  போவதாகவும் கூறுகிறார். மானுவல் தனது வழியில் குறுக்கிடவேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்கிறார். பின் இறுதியில் தனது மறுப்பை கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.




அவர் சென்றதும் ஒரு ரகசிய வாசல் வழியாக வாங் என்னும் சீனாக்காரன் வருகிறான். அவனிடம் டெக்ஸ் பற்றி அபிப்ராயம் கேட்கிறான். அதற்கு வாங் டெக்ஸ் உயிருடன் இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்றும் அவரை தான் பார்த்துக்கொள்வதாகவும் கூறுகிறான். பின் ஜன்னலோரம் சென்று கீழே காத்திருக்கும் தனது ஆட்களுக்கு டெக்ஸ் குழுவினரை கொல்ல சொல்லி மரண சைகை காண்பிக்கிறான். அதனை கண்ட அவன் ஆட்களில் ஒருவன் தான் அவர்களை பின் தொடர்ந்து சென்று வழியில் குறிகள் இட்டு செல்வதாகவும் தங்களது ஆட்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு அதனை தொடர்ந்து வரச்சொல்லி மற்றவனை அனுப்புகிறான்.

பின் டெக்ஸ் குழுவினரை தொடர்கிறான். வழியில் அவன் ஆட்களுக்காக டிராகன் படம் வரைந்து கொண்டே செல்கிறான். ஆனால் அவனை டைகர் பார்த்து விடுகிறார். டெக்ஸ் குழுவினர் லாங்க்ஹார்ன் சென்றடைகின்றனர்.
அவர்களை பின் தொடர்ந்து வந்த சீனன் மற்றவர்களுக்காக காத்திருக்கிறான்.
சிறிது நேரத்தில் மேலும் 9 சீனர்கள் வந்து அவனுடன் சேர்ந்து கொண்டனர். அதனை கண்ட டைகர் அவர்களை கடந்து கடைக்குள் நுழைந்து டெக்ஸ் இருக்கும் மேஜையை நோக்கி செல்கிறார்.


வாண வேடிக்கை:

தீப்பெட்டி கேட்பதை போல குனிந்து தெருவின் எதிரில் 10 சீனர்கள் காத்திருப்பதை தெரிவிக்கிறார். பின் அங்கிருந்து வெளியேறி தாக்குதலுக்கு ஏற்ற ஒரு மறைவான இடத்தில் ஏறி அமர்ந்து கொள்கிறார். தாக்குதலுக்கான திட்டத்தை டெக்ஸ் விவரிக்கிறார். தான் வெளியேறி எதிர்புறம் செல்வதாகவும் கார்சன் கதவின் வெளியே இடப்பக்கமுள்ள தடுப்பின் பின் நிற்கவும் கிட் வாசலில் நிற்கவும் கூறுகிறார். பின்னர் டெக்ஸ் தனியே வெளியே செல்கிறார். அவர் வெளியே வந்ததும் அவர் மேல் கத்தி வீச இருந்த சீனனை டைகரின் தோட்டா பலி கொள்கிறது. பின் நால்வரும் சேர்ந்து அவர்களை தாக்குகின்றனர் அவர்களிடம் கத்தி மட்டும் தான் இருக்கிறது.

தங்களது தாக்குதலை எதிரிகள் அறிந்து கொண்டதால் சீனர்கள் பின் வாங்க பார்த்தனர். ஆனால் நண்பர்களின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. இறுதில் 3 சீனர்கள் மட்டும் தப்பி சென்று விடுகின்றனர். இறந்தவர்களை ஆராய்ந்த பொழுது அனைவரும் கழுத்தில் ஒரு கருப்பு டிராகன் படம் போட்ட பதக்கம் அணிந்து இருந்தனர். டெக்ஸ் அந்த பதக்கங்களை எடுத்து மானுவலுக்கு ஒரு செய்தியுடன் அனுப்புகிறார். பின் அங்கிருப்போரிடம் இருந்து அந்த சீனர்கள் கால்வஸ்டன் துறைமுகத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என அறிகின்றார்.

பின்னர் பாரடைஸில் டெக்ஸின் கடிதத்தை வாங்கும் மானுவல் அதனை படிக்கிறான். அதனுடன் வந்த பதக்கங்களை கண்டு அதிர்ச்சி அடைகிறான்.
அக்கடிதத்தில் இருந்த " அடுத்த தடவை இன்னும் கூடுதலாக ஆட்கள் அனுப்பு " என்ற செய்தியை கண்டு கோவம் அடைகிறான்.

லாங்க்ஹார்னில் டெபுடி பிப்பிடம் நடந்ததை விளக்கி கூறினர். அவர்கள் தான் முதலில் தாக்கப்பட்டதாக மற்றவர்கள் கூறினார்கள் எனக்கூறி அவர்களை தூங்க சொல்லி செல்கிறான் பிப். அவர்கள் தூங்கினால்தான் மேலும் விவகாரங்கள் வராது எனவும் கூறுகிறான்.

அதே நேரத்தில் மானுவல் தனது குதிரை வண்டியோட்டியிடம் கால்வஸ்டனுக்கு வண்டியை விரைவாக விட சொல்கிறான். துறைமுகத்தை அடைந்த உடன் மானுவல் வண்டியில் இருந்து இறங்கி அந்த தெருவில் இருந்த ஒரு வீட்டின் கதவின் முன் நின்று தட்டினான்.




சுவர்கதிற்கொரு பாலம்:

அந்த வீட்டினுள் சென்று ஒரு ரகசிய கதவின் வழியாக சென்று வாங்கை சந்திக்கிறான். அங்கு வாங் ஒரு விசித்திர முகமூடி அணிந்து தப்பி வந்த 3 பேரை விசாரணை செய்கிறான். அவர்கள் தான் டெக்ஸிடம் இருந்து தப்பிவந்தவர்கள். அவர்களுக்கு மரண தண்டனை கொடுத்து ஒரு பாதாளத்தில் தள்ளி விடுகிறான்.

பின் மற்றொரு அறைக்கு வந்து முகமூடியை நீக்கி விட்டு மானுவலுடன்  உரையாடுகிறான். அங்கிருந்த ஒரு பெண்ணிடம் கஞ்சா புகைக்க கொண்டு வர சொல்கிறான். பின்னர் மானுவலிடம் இருந்த கடிதத்தையும் பதக்கங்களும் வாங்கி பார்கிறான்.

அப்பொழுது அந்த பெண் கஞ்சாவுடன் வருகிறாள். அவள் பார்வையில் படும்படி ஒரு பதக்கத்தை வைக்கிறான் வாங். அதனை கண்ட அந்த பெண் தனது சகோதரனுக்கு என்ன ஆனது என கேட்கிறாள் அதற்கு வாங் கில்லர் எனபவனால் அவன் கொல்லப்பட்டான் என கூறுகிறான்.

அவனை பழிவாங்க தான் செல்வதாக மின் லி என்ற அந்த பெண்  கூறுகிறாள். அவளுக்கு விஷம் தடவிய கத்தி ஒன்றை கொடுத்து அனுப்புகிறான். பின்னர் மானுவலிடம் இனி கவலை இல்லாமல் போய் வா என கூறுகிறான். அங்கிருந்து கிளம்பிய  மானுவல் தனது குதிரை வண்டியில் டெக்ஸாஸ் வந்து சேருகிறான்.




பாகம் ஒன்று முடிவுற்றது.
                        
பதிவு மிக நீளமாக சென்று கொண்டிருப்பதால் இதனை இரண்டு பாகமாக கொடுக்க முடிவு செய்துள்ளேன். ஆகையால் நண்பர்கள் சற்றே பொறுமை காக்க வேண்டும்.

இக்கதையை நான் ஓரளவு கூறி இருந்தாலும் வசனங்களின் தாக்கம் இப்புத்தகத்தை படித்தால் தான் உணரமுடியும். வசனங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும் மற்றும் கதை முழுவது சண்டை காட்சிகள் நிறைந்துள்ளன. அதனையும் படிக்கும் போதே உணரமுடியும்.என்னை பொருத்தவரை இக்கதை டெக்ஸ் கதைகளிலேயே முதல் இடத்தை பிடிக்கிறது.

அவ்வளவு தான் நண்பர்களே.ஒரு வாரத்தில் மீண்டும் இரண்டாம் பாகத்துடன் சந்திப்போம் .

கிருஷ்ணா வ வெ.

Saturday, December 15, 2012

கும்கி - ஒரு பச்சை பசேல் யானை.




வணக்கம் நண்பர்களே,

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திரைப்பட விமர்சனத்தோடு உங்களை சந்திக்கிறேன்.

இன்று மதியம் கும்கி திரைப்படம் பார்த்தேன்.பில்லா 2 அப்புறம் ஒரு திரைப்படம் முதல் நாள் பார்ப்பது இதுதான்.

படம் நன்றாகவே இருந்தது கடைசி 5 நிமிடம் தவிர.

ஒரு பிரபு சாலமன் கதை (கும்கி கதை அல்ல):

3 நிமிட குறும்படம்:

ஒரு விடலை பையன் காலையில் விழித்தெழுந்து தினசரியை பார்கிறான்.அன்று Feb 14 சந்தோசத்துடன் எழுந்து குளித்து ஒரு மோதிர பரிசுடன் கிளம்புகிறான்.

கட்:

அதே நேரம் அதே போல ஒரு விடலை பெண் எழுந்து அதே சந்தோசத்துடன் ஒரு பூ பரிசுடன் கிளம்புகிறாள்.

இருவரும் குறுஞ்செய்தி அனுப்பி உறுதி செய்து கொண்டு கிளம்புகிறார்கள்.

ஒரு காபி விடுதியில் சந்தோசத்துடன் கையில் பூவுடன் உள்ளே நுழைகிறாள் அந்த பெண் உள்ளே எதையோ பார்த்து அதிர்ச்சி அடைந்து பூவை கீழே தவறவிடுகிறாள்.

அவள் பார்த்த இடத்தில் அந்த பையன் வேறு ஒரு பையனின் கையில் மோதிரம் மாட்டிகொண்டு இருக்கிறான்.

அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கீழே விழுந்த பூவை எடுக்க குனியும் பொழுது வேறு ஒரு ஆண் உதவ குனிய இருவர் தலையும் முட்டிக்கொள்ள காதல் வருகிறது.அத்துடன் அந்த திரைப்படம் முடிகிறது.

இது நாளைய இயக்குநருக்காக எடுத்த ஒரு படம் இதற்கு நடுவர்கள் பிரபு சாலமன் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா.இந்த படத்திற்கு பிரபு சாலமன் கொடுத்த கமெண்ட்.

"என்ன சொல்லவரீங்க எனக்கு ஒன்னும் புரியல.ரெண்டு பேர் sms அனுப்பிவிட்டு வராங்க இங்க அந்த பையன பார்கிறார்கள் அப்புறம் இன்னொருத்தன பார்த்ததும் காதல்.இப்படி பார்த்ததும் காதல் வருமா/இன்னும் கொஞ்சம் எலபோரடே பண்ணனும்."

இந்த கமெண்ட் நோட் பண்ணிக்குங்க நண்பர்களே.

இனி கும்கி கதை.

ஆதிகாடு 200 வருட பாரம்பரியம் மிக்கது.விவசாயம் பார்கிறார்கள்.
அவர்களுக்கு கொம்பன் எனப்படும் ஒரு ஒத்தை யானையால் தொல்லை.சாதாரண தொல்லை இல்லை அதனால் 3 பெண்கள் இறந்துள்ளனர்.
மேலும் அதன் பிடியில் இருந்து அந்த கிராமத்தின் தலைவர் மாத்தையன்  பெண் அல்லி மயிரிழையில் உயிர் தப்பி உள்ளால்.

இதற்கு அரசாங்க அதிகாரிகள் அவர்களை அந்த காட்டை காலிசெய்து வேறு இடம் செல்ல சொல்கிறார்கள்.இதற்கு மறுக்கும் அவர்கள் உங்கள் உதவி தேவை இல்லை எங்களை நாங்களே காப்பாற்றிக்கொள்கிறோம்  என சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.

இந்த நிலையில் அவர்கள் ஒரு கும்கி யானையை துணைக்கு வைத்துகொண்டு இந்த வருடம் அறுவடை செய்ய முடிவு செய்கிறார்கள்.அதற்காக ஊர்மக்கள் அனைவரும் தங்களது நகைகள் மற்றும் சேகரிப்பை கொடுத்து ஒரு யானை தரகர் மூலம் கும்கி யானை கேட்கிறார்கள்.

இப்படி இருக்க நம்ம ஹீரோ பொம்மன்,அவனது தாய்மாமன் கொத்தள்ளி,அவனது கைத்தடி உண்டியல் மூவரும் அவனது யானை மாணிக்கத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.அந்த யானையை தனது உடன் பிறவா சகோதரனாக நினைக்கிறான் ஹீரோ.சிறுவயது முதலே இருவரும் ஒன்றாக வளர்ந்தவர்கள்.flashback ல வருங்கின்ற குட்டியானை செம அழகாக இருக்கிறது.அந்த யானை ஒரு தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டாலே நடுங்குகிறது.பொம்மனின் நண்பர் அந்த யானை தரகர்.
அவர் மூலம் யானையை கோவில் திருவிழாக்கள்,திரைப்படங்கள் இப்படி விட்டு பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

உண்மையான கும்கியானையின் பாகனின் பெண் விஷம் குடித்துவிட அவர்க்கு பதில் தனது நண்பருக்காக பொம்மன் மாணிக்கத்துடன் கும்கி யானை என பொய் சொல்லி ஆதிக்காட்டிர்க்கு போகிறான்.அங்கு அல்லியை கண்ட உடன் காதல் வயப்படுகிறான்.(நோட் பண்ணுங்க).முதலில் யானையை கண்டு பயப்படும் அல்லி பின் மாணிக்கத்தின் மேல் பாசம் கொள்கிறாள்(ஏன்? காரணம் பின்னர் கூறப்படும்) .இப்படியே முதல் பாதி சென்று விடுகிறது.




அடுத்து தனது காதலை அவளிடம் சொல்கிறான்.ஒரு கட்டத்தில் அவளும் சம்மதிக்க காதல் நன்றாக ஒரு பாடல் முடியும் வரை செல்கிறது.பின்னர் அந்த கிராமத்தின் தலைவரும் அந்த ஊர் மக்களும் தன மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை கண்டு தனது காதலை விட்டுகொடுக்க முடிவு செய்கிறான்.அவளும் தனது தந்தை தன மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மதிப்பளித்து தனது காதலை தியாகம் செய்கிறாள்.

அப்புறம் ஒரு வழியா படத்தின் ஆரம்ப காட்சியில் வந்த கொம்பன் இறுதிக்காட்சியில் வர பரப்பான யானை சண்டை காட்சியுடன் படம் முடிகிறது.


இனி எனது கருத்து.



படத்தின் உண்மையான ஹீரோ கேமரா மேன் சுகுமார் தான்.அப்பா மனுஷன் புகுந்து விளையாடிருக்கார்.படத்தின் ஒவ்வொரு பிரேமும் நமது கணினி திரையில் வைக்கும் வால்பேப்பர் போல ஒரே பச்சை பசேல் அல்லது மஞ்சள் பூ காடு.இடங்கள் இப்படி அத்தனையும் அருமை.அதற்காகவே நண்பர்களை திரைஅரங்கு சென்று காணுமாறு கேட்டுக்கொள்கிறேன் அப்பொழுதான் அந்த அனுபவத்தை முழுமையாக அடையமுடியும்.படத்தின் இடங்களை தேர்ந்தேடுதர்க்கு கண்டிப்பாக டைரக்டருக்கு பாராட்டுக்கள்.நம்ம நாட்லயும் இப்படி அழகான இடங்கள் உள்ளன என்பதை நிருபித்துள்ளார்.



அடுத்து அந்த யானை மாணிக்கம் பார்க்க கம்பிரமாக உள்ளது.அது காலை தூக்கி காண்பிக்கும் அழகே தனி.அதனால் தான் என்னவோ ஹீரோவிற்கு வைக்கும் காட்சியை யானைக்கு வைத்துவிட்டார் டைரெக்டர்.தண்ணிர் எடுக்க செல்லும் அல்லி நீர் குடிக்கவரும் மாணிக்கத்தை கண்டு தடுமாறி ஒரு பாறை மேல் விழப்போக நம்ம யானை அவளை அழகாக காப்பாற்றுகிறது.இந்த ஒரு காட்சி போதாதாங்க.(இப்போ காரணம் புரிஞ்சுதா)



அடுத்து நம்ம தம்பி ராமையா செமைய கலக்கிருக்காருங்க அவர் வரும் காட்சிஎல்லாமே திரைஅரங்கில் அப்படி ஒரு சிரிப்பு அதுவும் அவர் mind voice ல பேசறது எல்லாமே அருமை.கடைசி வரைக்கும் போர் அடிக்காம கொண்டு சென்றதற்கு இவர் ஒரு பெரும் காரணம்.

அடுத்து நம்ம ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருமே நல்ல நடிச்சுருக்காங்க.கிராமத்து மனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்
ஆனா ரெண்டு பேரோட காதல் காட்சில ஒரு அழுத்தமே இல்லை.அவளுக்கு அவன் மேல் காதல் வர ஒரு நல்ல காரணமே கூறவில்லை.பெரும்பாலும் அவன் அவளை நினைத்து மருகிகொண்டிருக்க அவள் எப்பொழுது யானையுடனேயே இருப்பாள்.அப்புறம் அவன் சொன்னதும் எப்படி சம்மதித்தாள் எனபது தெரியவில்லை.

இந்த லட்சணத்துல இந்த டைரெக்டர் மேலே எப்படி கருத்து சொல்லிருக்கார் பாருங்க.



படத்தின் பாடல்கள் நன்றாக உள்ளன.சற்றே மைனாவை நினைவு படுத்தினாலும் நன்றாகவே உள்ளன.முக்கியமாக பாடல்கள் எடுக்கப்பட்ட இடங்களும் விதமும் நன்றாக இருக்கும்.ஒரு அருவி ஆரம்பிக்கிற இடத்த காமிசிருப்பாரு பாருங்க சூப்பர்.பாடல்கள் பற்றி நமது ராஜ்குமார் நல்ல பதிவு ஒன்று இட்டுள்ளார் அதனை படிக்க.



நடித்துள்ள அனைத்து துணை நட்சத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
நம்ம ஜூனியர் பாலையா அவர்களுக்கு சாட்டை படத்திற்கு பின் மீண்டும் ஒரு வாய்ப்பு.படத்துல காட்டிலாகா அதிகாரியாக வருபவரை தேவை இல்லாமல் ஒரு வில்லன் பில்டப் வேற.

யானைகள் பற்றி பல துணுக்கள் அளித்துள்ளனர்.யானை வைத்திருக்க தனி லைசென்ஸ் தேவை,நமக்கு ஜலோதொசம் போல அதற்கு குடலோசம்,கும்கி யானைக்கு தைரியம் தர பார்கே பார்கே என கத்த வேண்டும்,யானைக்கு மதம் பிடிக்க ஆரம்பிக்கும் பொது இருக்கும் அறிகுறிகள் இப்படி பல.

படத்தின் இறுதிக்காட்சி மட்டும் எனக்கு பிடிக்கவில்லை.

இதனை பற்றிய நமது நண்பர் கார்த்திக் அவர்களின் கருத்தை நான் இங்கு மீள் பதிவு செய்கிறேன்.

//இந்தப் படத்தின் க்ளைமேக்ஸை பலவிதமாக எடுத்திருக்க முடியும். ஆனால் எளிதில் யூகிக்க முடியாத ஒரு க்ளைமேக்ஸை தேர்ந்தெடுத்ததில் இயக்குனர் வெற்றி பெறுகிறார்.//

ஆனால் இந்த ஒரு இடத்தில் அவருடன் நான் வேறு படுகிறேன்.

அவ்வளவு தான் நண்பர்களே.எனது குரும்பதிவுகளையே படித்து வந்த நண்பர்களுக்கு இது சற்றே திருப்தி அளித்திருக்கும் என நினைக்கிறேன்.

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.

Thursday, December 13, 2012

இந்திய விஞ்ஞானி கடத்தல் - Super Hero Tiger Action


வணக்கம் நண்பர்களே,

மீண்டும் ஒரு சூப்பர் ஹீரோ டைகர் கதையுடன் உங்களை சந்திக்கிறேன்.

டைகரை பற்றி நாம் முன்னைய பதிவுகளில் பார்த்துவிட்டோம் ஆகையால் கதைக்கு செல்வோம்.

இந்திய அணு விஞ்ஞானி D G நாயுடு சென்ற விமானம் கடத்தப்படுகிறது.
அவரை காப்பாற்ற பயங்கரவாத ஒழிப்பு நிறுவனத்தால் டைகர் மற்றும் ஹென்றி அனுப்பப்படுகின்றனர் அவர்கள் அவரை எப்படி காப்பாற்றுகின்றனர் என்பதே கதை.











இக்கதையின் loopholes:

1.கடத்தப்பட்ட விமானம் என்ன ஆனது?
2.இவர் துப்பாக்கியில் இருந்து வரும் புகை இவரை மட்டும் ஏன் ஒன்றும் செய்யவில்லை?
3.அறை முழுவதும் சாதனங்கள் இருந்தும் கூரை கீழே இறங்கும் பொழுது என்ன ஆனது.


இப்படி எல்லாம் குறைகளை கண்டுபிடிக்காமல் கதையை மட்டும் ரசிக்கும்படி நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இன்னும் இரண்டு கதைகள் கைவசம் உள்ளன.அவைகளை விரைவில் பதிவிடுகிறேன்.

டி.ஜி.நாயுடு - நமது G.D.Naidu அவர்களை உல்டா செய்திருக்கிறார்கள்!!! :) தோற்றமும் கிட்டத்தட்ட பொருந்துகிறது!!! :)

http://en.wikipedia.org/wiki/Gopalswamy_Doraiswamy_Naidu


தகவலுக்கு நன்றி கார்த்திக்.

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ .

Monday, December 10, 2012

Mugamoodi Veerar Billy - Rani Comics


வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில் எனக்கு பிடித்த மற்றொரு காமிக்ஸ் ஹீரோ பற்றி கூறி உள்ளேன் 

அவர் தான் ராணி காமிக்ஸில் வந்த முகமூடி வீரர் பில்லி.

அவர் கதாபாத்திரம் எனக்கு சற்றே சோரோவை(Zorro) நினைவு படுத்தும்.

இவர் கதைகளுடைய சித்திரம் அருமையாக இருக்கும்.

அதுவும் அவர் பில்லியாக மாறி குதிரையில் பள்ளத்தாக்கில் இருந்து தாண்டும் இடம் மிக அருமையாக இருக்கும்.அப்பொழுது அவர் பேசும் வசனம் நினைவில் இல்லை.பற  பற  என முடியும் என நினைவு.

அவரது குதிரையும் கருமை நிறமாக கம்பீரமாக இருக்கும்.சற்றே ஹீரோவை நினைவு படுத்தும்.




பில்லி பற்றிய அறிமுகம்:



ஓர் இரவு புத்தகத்தில் வந்த பில்லி கதை கழுகுக் கோட்டை.



எனக்கு அவர்கதைகளிலேயே மிகவும் பிடித்தது முரட்டுக்காளை தான்.
கதையில் வரும் காளை பார்க்க அழகாக மிகவும் கம்பீரமாக இருக்கும்.



இது போல குரும்பதிவுகள் இட எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
கதையை முழுவதும் சொல்லும் நீள பதிவுகள் சற்றே போர் அடிக்கும் என நினைக்கிறேன்.

இது தவிர வேறு பில்லி கதைகள் வந்திருந்தால்  நண்பர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வே.