லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனும் லயன் காமிக்ஸும்

லண்டனும் லயன் காமிக்ஸும்

Memories (2013) - Malayalam Movie Review

Memories (2013) - Malayalam Movie Review

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

Tuesday, February 12, 2013

பூந்தளிர் கதைகள் : 1


வணக்கம் நண்பர்களே,

நான் முன் பதிவுகளில் கூறியது போல எனக்கு பிடித்த பூந்தளிர் கதைகளை உங்களுடன் அவ்வபொழுது பகிர்ந்து கொள்ள உள்ளேன்.

இது ஒரு சோதனை முயற்சியே.

என்னுடைய ஆசை நான் பகிர்ந்துகொள்ளும் இக்கதைகளை உங்கள் வீட்டு சிறார்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே.

ஒரு வழியாக ஒரு all in one HP பிரிண்டர் வாங்கிவிட்டேன்.அதில் மூலம் வரும் முதல் பதிவு.

படங்களை சற்றே மேம்படுத்தி உள்ளேன்.புத்தகத்தின் காகிதங்கள் சற்றே பழுப்படைந்து உள்ளதால் படங்களும் இப்படி உள்ளன.

இதனை மேலும் மேம்படுத்த நண்பர்கள் ஆலோசனை வழங்கினால் செயல்படுத்த முயற்சி செய்கிறேன்.

பூந்தளிரின் ஆசிரியராக நமது வாண்டுமாமா இருந்த சமயத்தில் வந்த ஒரு இதழ்.

படக்கதைகள்,சிறுகதைகள்,வேடிக்கை விநோதங்கள் மற்றும் ஒரு சில தொடர்கதைகள் என முற்றிலும் ஒரு கதம்பமாக இந்த இதழை வழங்கி உள்ளார்.

முதல் கதை "உலகின் மகத்தான காட்சி" நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு கதை.

தான் ஆசையாய் வளர்க்கும் எருமை மாடு பூவை வயதானதால் காட்டிற்குள் துரத்தபோகும் தந்தையிடம் இருந்து காப்பாற்ற போராடும் சிறுவன் டுடுவின் கதை.

டுடுவும் அவனது நண்பன் லாசியும் சேர்ந்து அதற்கு நடனம் கற்று தருகின்றனர்.

பின் ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து "உலகின் மகத்தான காட்சி" யை காண்பிக்க போவதாக கூறுகின்றனர்.

மக்கள் வந்ததும் வாத்தியங்கள் முழங்கி பூவை ஆட சொல்கின்றனர்.ஆனால் அது ஆட மறுக்கின்றது.  பின்னர் அனைவரும் பொறுமை இழந்து கிளம்பும் பொழுது அது ஆட அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

அதனை கண்டு குர்பச்சன்சிங் என்பவர் பூவின் வாழ்நாள் முழுவதும் அதன் உணவிற்கான தொகையை தான் ஏற்று கொள்வதாக கூறுகிறார்.













அடுத்த படக்கதை நமது சுட்டிக் குரங்கு கபீஷுனுடயது.வேட்டைக்காரன் தோப்பையாவிடம் மாட்டிக்கொண்ட கிளிகளை எப்படி காப்பாற்றுகிறான் என்பதை படித்து பாருங்கள்.







அடுத்தது வழக்கம் போல தனது உணவிற்காக போராடும் சமந்தகனை ஏமாற்றும் காக்கை காளியின் கதை.

நான் சிறுவனாக இருந்த பொழுது ஒருமுறை எனக்கு மிகவும் காய்ச்சல் அதனால் எனக்கு மிகவும் (கள்ள) பசி எடுத்தது. எனது தாயார் சமைத்துக்கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் நான் பார்வதி சித்திர கதைகளில் வந்த காளியின் கலாட்டா புத்தகத்தை படித்துக்கொண்டு இருந்தேன். அப்பொழுது ஒவ்வொரு கதையிலும் சமந்தகனின் உணவை காளி காபாற்றிகொண்டிருக்க, அவனது பசி எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்தேன். அந்நிகழ்ச்சி நான் எப்பொழுது காளியின் கதை படிக்கும் பொழுதும் எனக்கு நினைவிற்கு வரும்.




பசுவை பற்றிய ஒரு முழு ஆவண படக்கதை.





அடுத்து நமது முட்டாள் சுப்பாண்டியின் கதை.சுப்பாண்டி வெந்நீர் போடும் அழகை பாருங்கள்.




இனி வரும் பூந்தளிர் கதைகள் பதிவுகளில் சார்லி மாமா,துப்பறியும் ரஞ்சன்,மதியூகி மந்திரி இப்படி இன்னும் பலருடைய கதைகளை காண்போம்.

இப்பதிவை பற்றிய உங்கள் கருத்தை பின்னுட்டத்தின் மூலம் கூறுங்கள் நண்பர்களே.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வே வெ .

Friday, February 8, 2013

விஸ்வரூபம் - கமல் என்னும் புத்திசாலியின் திரைப்படம்.



வணக்கம் நண்பர்களே,

நேற்றய தினம் பல இடையூறுகளை கடந்து வந்துள்ள கமலின் விஸ்வரூபத்தை கண்டேன். அதனை பற்றியே எனது கருத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் விஸ்வரூபம் கமல் என்னும் புத்திசாலி தமிழனின் திரைப்படம்.

தமிழ் திரைப்படங்களுக்கு புதுமைகளை முதன் முதலில் கொண்டுவருவதில்  கமல் தான் முதன்மையானவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த விதத்தில் இந்த திரைப்படத்திலும் பல புதுமைகளை கொண்டு வந்துள்ளார். அதற்காக நான் அவருக்கு தலை வணங்குகிறேன்.

ஏற்கனவே கமலின் திரைகதை திறமைகளை நாம் விருமாண்டி போன்ற படங்களில் பார்த்துள்ளோம். இதில் இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு முழு திரைப்படம் எடுத்து அதனை எடிட்டிங் மூலம் இரண்டு பாகங்களாக ஆக்கி இருக்கும் அவரது புத்திசாலித்தனம் மெச்சத்தகுந்ததே.

ஆனாலும் பல விசயங்களை இன்னும் முழுமையாக விளக்க வில்லை எனபது
சற்றே ஏமாற்றம் தான். இரண்டு பாகங்களையும் சேர்த்து பார்க்கும் பொழுது இன்னும் முழுமையாக இருக்கும் எனபது எனது கருத்து.மேலும் அந்த இரண்டாம் பாகத்தை வெகு சீக்கிரமே கொண்டு வருவது அவருக்கும்  நமக்கும்  நல்லது.

கதை நாம் பல ஆங்கில மற்றும் தமிழ் திரைப்படங்களில் பார்த்ததே. ஒரு ராணுவ வீரர் எதிரிகளின் இருப்பிடத்தில் மாறுவேடத்தில் சென்று அவர்களை முறியடிப்பதே. அதனை எடுத்த விதத்தில் தான் வித்தியாசம் காட்டிஉள்ளார் கமல்.

விஸ்வநாதன் ஒரு நடனம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர். அவரது மனைவி நிரூபமா ஒரு விஞ்ஞானி. அவரை விட வயதில் மூத்த கமலை ஒரு சுயநலத்திற்காக கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.



இப்பொழுது அவரது நிறுவனத்தின் தலைவரை கல்யாணம் செய்துகொள்வதற்காக கமலை விவாகரத்து செய்ய முயற்சிக்கிறார். அதற்காக  ஒரு தனியார் துப்பறிவாளர் மூலம் அவரிடம் ஏதாவது தப்பிருக்கிறதா என கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்

நிரூபமாவும் அவளது காதலனும்.

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகின்றன.அதில் முக்கியமான ஒன்று அவர் ஒரு முஸ்லிம் எனபது.

அதன் பின் கதை ஆப்கானிஸ்தான் மற்றும் நியூ யார்க் என மாறி மாறி செல்கிறது

எப்படி கமல் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதியாக பயிற்சி எடுக்கிறார். அவருக்கும் தீவிரவாதிகளின் தலைவர் ஓமருக்கும் எப்படி பழக்கம் ஏற்படுகிறது. கமல் எப்படி ஒசாமா பின் லேடனை பிடிக்க உதவுகிறார்.

ஒமர்.


மற்றும் நிகழ காலத்தில் நியூ யார்க்கில் ஒமரின் நியுக்ளியர் குண்டு வைக்கும் முயற்சியை எப்படி முறியடிக்கிறார் என்றும் நாம் பார்க்கிறோம்

படத்தின் முதல் firstlook இல் நாம் பார்க்கும் புறாவை கூட ஒரு காரணமாக த்தான் காட்டி உள்ளார். அந்த அளவிற்கு சின்ன சின்ன விசயங்களில் கூட கவனம் செலுத்தி உள்ளார்.

படத்தின் தரத்தில் ஒரு இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் இருபதற்கு நான் முக்கிய காரணமாக நினைப்பது படத்தின் லொகேசன்கள் தான். படத்தில் ஆப்கானிஸ்தானை நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

படத்தின் சண்டைகாட்சிகளையும் நன்றாக அமைத்துள்ளார்கள். காமரா வொர்க்கும் மிகவும் நன்றாக இருக்கிறது. இசை சற்றே ஏமாற்றம் அளிக்கிறது. அதுவும் முக்கியமாக பின்னணி இசை. ஒரே tune பலமுறை பின்னில் வருகிறது.

அடுத்து முக்கியமாக கூறவேண்டியது படத்தின் வில்லன் ராகுல் போஸ்.
இதுவரை நாம் தமிழ் திரைப்படங்களில் பார்க்காத ஒரு வில்லன். ப்ளாஷ் பேக் காட்சிகளில் இவர் தான் முன்னிலை படுதிக்காட்டப்பட்டுள்ளார்.

அவருடைய நடிப்பு மிகவும் நன்றாக உள்ளது. மிகவும் சத்தமாக கூட பேசமுடியாது. இருந்தாலும் அவரது முக பாவங்கள் மற்றும் கண்களிலேயே ஒரு பயத்தை தோற்றுவிக்கிறார்.

க்ளைமாக்ஸ்.


கமலை பற்றி சொல்லவே தேவை இல்லை. பல வசனங்கள் அவருக்கே உரிய நடையில் இருக்கிறது. மற்றும் முதலில் அரைமணி நேரத்தில் மனிதர் பின்னி எடுத்துருக்கிறார். அதுவும் அவர் யார் எனத்தெரியும் இடத்தில் ஹீரோயிசம் மிக அருமை.

விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்.


பூஜாகுமார் மற்றும் ஆன்ட்ரியா தனது வேலையை திறம் பட செய்துள்ளார்கள்.

கமலும் நாசரும் பிரிக்க முடியாதவர்கள்.இப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

படத்தின் மற்ற நடிகர்களும் நன்றாகவே நடித்துள்ளனர்.

மொத்தத்தில் படத்தின் முழுமையான வெற்றி இரண்டாம் பாகம் வந்த பின்பே.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ .