லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனும் லயன் காமிக்ஸும்

லண்டனும் லயன் காமிக்ஸும்

Memories (2013) - Malayalam Movie Review

Memories (2013) - Malayalam Movie Review

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

Saturday, September 29, 2012

ஓட்டு போட வாருங்கள் - Poll On Future Posts


வணக்கம் நண்பர்களே,

நமது ஆசிரியரின் வெள்ளோட்டத்தை பார்த்த பொழுது நாமும் ஒரு ஓட்டெடுப்பு நடத்தலாமே என தோன்றியது.அதன் வெளிபாடே இந்த பதிவு.

இனி வர இருக்கும் தனி புத்தக பதிவுகளின் ஒரு சிறு வெள்ளோட்டமே இந்த பதிவு.நண்பர்கள் தங்களது விருப்பதை பொறுத்து வரிசைபடுதுங்கள்.
நண்பர்களின் விருப்பதை பொறுத்து எனது தனிப்பதிவுகளை இடலாம் என்று இருக்கிறேன்.

முதல் கதை : லயன் மூன்றாவது ஆண்டு மலராக வந்த டெக்ஸ் வில்லரின் பவளச்சிலை மர்மம்.



இரண்டாவது கதை : ஹாலிடே ஸ்பெசலாக வந்த ஸ்பைடரின் பாட்டில் பூதம்.


மூன்றாவது கதை :- டெக்ஸ் வில்லரின் கழுகு வேட்டை.


நான்காவது கதை :- லயனின் ஐம்பதாவது இதழ் டெக்ஸ் வில்லரின் டிராகன் நகரம்


ஐந்தாவது கதை : - லயன் காமிக்ஸின் இரண்டாவது கதை மாடஸ்டி இன் இஸ்தான்புல்.


ஆறாவது கதை : - மினி லயனில் வந்த ரிப் கிர்பி இன் மாயாஜால மோசடி.



அட்டைப்படங்கள் என்னிடம் இல்லாததால் கிங் விஸ்வா அவர்களின் வலை பூவில் இருந்து எடுத்துள்ளேன்.

வாங்க வந்து உங்க ஓட்ட போடுங்க.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .

கிருஷ்ணா வ வெ .

Wednesday, September 26, 2012

Malarmani Comics - காலகண்டன் கொலைவழக்கு




வணக்கம் நண்பர்களே,

இந்த பதிவில் நாம் பார்க்க போவது 1986 இல் வந்த மலர்மணி  காமிக்ஸின் காலகண்டன் கொலைவழக்கு பற்றியதே.
இதனை வெளியிட்டோர் மதுரையில் இருந்த கலைபொன்னி பதிப்பகத்தார்.ஆசிரியர் கே.பாண்டிமணி.
இதற்கு கதை மற்றும் சித்திரங்கள் ஸ்ரீகாந்த்.

கலை பொன்னி பதிப்பகத்தார் பல பெயர்களில் காமிக்ஸ் வெளியிட்டனர்.அவை மலர் காமிக்ஸ்,கலைபொன்னி காமிக்ஸ்,பொன்னி காமிக்ஸ்,மலர் மணி காமிக்ஸ் இப்படி பல.

அதனை பற்றிய தொகுப்பை பற்றி பார்க்க எனது முந்தய பதிவை பார்காதவர்கள் இங்கு கிளிக் செய்யவும்.
அவர்கள் மாயாஜால கதை கூட வெளியிட்டுள்ளார்கள் அதனை பற்றி பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

மற்றும் இவர்கள் பற்றி நண்பர் சிவ் அவர்கள் ஒரு பதிவிட்டுள்ளதை அறிந்தேன் அதனை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

லயன் குழுமத்தினரின் படைப்புகள் தரத்தில் உயர்ந்ததாக இருந்தாலும் இவர்களது சில படைப்புகளும் நன்றாக இருக்கும்.குறிப்பாக ஸ்ரீகாந்த் அவர்கள் சித்திரங்கள் வரைந்த கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அதிலும் குறிப்பாக இந்த கதை.

நண்பர்களே இந்த கதையை படித்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள் அதனை பொறுத்து மேலும் அவர்களது படைப்புகளில் எனக்கு பிடித்தவைகளை நான் பதிவு செய்யலாமா வேண்டாமா என நான் முடிவு செய்துகொள்வேன்.
ஆகையால் கண்டிப்பாக நண்பர்கள் அனைவரும் தங்களது கருத்தை கூறுங்கள்.

கதை ;
நமது ஹீரோ கோபி என்கிற கோபாலகிருஷ்ணன்.
அவர் முதலில் பத்திரிகை நிருபராக இருந்து பின்னர் துப்பறிவாளராக மாறியவர்.ஒரு நாள் அவர் பொழுது போகாமல் பழைய பத்திரிகை தொகுப்புகளை படித்துக்கொண்டு இருந்தார்.அதில் 5 வருடங்களுக்கு முன்பு நடந்த பிரபல கோடீஸ்வரர் காலகண்டன் கொலைவழக்கை பற்றி படித்தார்.
அதில் காலகண்டன் அவரது டிரைவர் கோவிந்தனால் கத்தியால் குத்தப்பட்டார் என்றும் குத்தப்பட்ட கத்தியில் கோவிந்தனின் கைரேகை இருந்ததையும்  இன்னும் கொலையாளி கிடைக்கவில்லை என்றும் படித்தார்.மற்றும் அவரது தம்பி மேகநாதன் விரைவில் வழக்கை முடிக்க செய்துள்ளார் என்றும் அறிந்தார்.காலகண்டன் தான் இறந்த பிறகு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு அளிக்க கூறியுள்ளார்.ஆகையால் அவரது உடல் இப்பொழுது மருத்துவ கல்லூரியில் உள்ளதை அறிந்து கொண்டார்.


அவருக்கு அந்த வழக்கின் மீது ஆர்வம் வந்து அந்த கொலையாளியை பிடிக்க முடிவு செய்தார்.பின்னர் அதுபற்றி  டி ஐ ஜி  ராஜேந்தரிடம் கூறுகிறார்.அவரும் அந்த வழக்கை பற்றிய விவரங்கள் கொடுத்து அவரை அந்த வழக்கை பற்றி ஆராய சொல்கிறார்.அவரிடம் இந்த வழக்கு பணக்காரர்கள் சம்பத்தப்பட்டது என எச்சரிக்கை செய்கிறார்.

முதலில் கோபி டிரைவர் கோவிந்தன் வீட்டிற்க்கு சென்று அவரது மனைவி பார்வதியை சந்திக்கிறார்.அவர் மிகவும் வறுமையில் இருப்பதை  காண்கிறார்.அவர் தனது கணவர் மது அருந்தினாலும் சிறு எறும்புக்கு கூட தீங்கு செய்ய மாட்டார் என்றும் அவர் இந்த கொலை செய்திருக்க மாட்டார் என்றும் கூறுகிறார்.பின் அங்கு இருந்து கிளம்பும் போது அந்த டிரைவர் வளர்த்த நாய் ஜானை வாசலில் பார்த்தார்.

அடுத்து அவர் கோடீஸ்வரர் மேகநாதனை சந்தித்து தான் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்யபோவதாக கூறுகிறார்.அதனை கேட்ட அவர் மிகவும் கோவமுடன் கோபியை விரட்டிவிடுகிறார்.கோபி அவர் பேசியதை தனது ரெகார்டரில் பதிவு செய்து கொள்கிறார்.பின்னர் டி ஐ ஜி ராஜேந்தரை சந்தித்து விவரம் கூறுகிறார்.பின்னர் அங்கிருந்து தனது வீட்டிற்க்கு வந்தது இதுவரை நடந்ததையும்  இனி தான் செய்ய வேண்டியதையும் பட்டியலிட்டார்,பின்னர் அங்கிருந்து தனது காரில் புறப்பட்டார்.ஆனால் அவருக்கு அதிர்ச்சி அவரது ப்ரேக் வேலை செய்யவில்லை மற்றும் பெட்ரோல் வாசனை வேறு வந்தது.மறுவினாடி துணிச்சலுடன் காரிலிந்து வெளியில் பாய்ந்து தப்பினார்.கார் ஒரு பாறையில் மோதி தீ பற்றி எரிந்தது.

அன்று மாலை மேகநாதன் வளர்ந்த ஊட்டிக்கு அவர் பற்றி விவரம்  சேகரிக்க சென்றார்.அங்கு அவரது நண்பர் கபூரை உதவிக்கு அழைத்தார்.இருவரும் மேகநாதனை பற்றி அனைத்து விவரங்களும் சேகரித்தனர்.அதில் இருந்து மேகநாதன் ஒரு சாதுவானவர் எந்த வம்பிற்கும் போகமாட்டார்.அவரது மனைவி சங்கரி ஒரு அடங்காபிடாரி மற்றும் அவள் தான் இங்கு இருக்கும் எஸ்டேடை நிர்வாகம் செய்துவருகிறாள் என்று அறிந்து கொள்கின்றனர்.

இவர்கள் மேகநாதன் பற்றி விசாரிப்பதையும் அவர்கள் அவளை சந்திக்க வந்துகொண்டு இருப்பதையும் சங்கரியிடம் கூறுகிறான் அவளது அடியாள் கொந்தளிக்கும் சங்கரி அவர்கள் இருவரையும் வழியிலேயே தீர்த்துக்கட்ட சொல்கிறாள்.அடி ஆட்களும் காரில் வந்து கொண்டு இருந்த இருவரையும் ஆயுதங்களுடன் சென்று மடக்குகின்றனர்.ஆனால் கோபியும் கபூரும் அவர்கள் அனைவரையும் அடித்து விரட்டிவிட்டு சங்கரியை சென்று சந்திகின்றனர்.
அவர்களிடம் அவள் அது முடிந்தகதை நீங்கள் போகலாம் என விரட்டிவிடுகிறாள்.கிளம்பும் போது கபூர் ஏன் சங்கரி பொட்டு  வைத்துகொள்ளவில்லை என்ற சந்தேகத்தை கிளப்புகிறார்.அதற்கு கோபி அது ஏதாவது பேஷனாக இருக்கும் என்று கூறுகிறார்.  





அடுத்து கோபி கபூரிடம் விடை பெற்றுக்கொண்டு ஊர் திரும்புகிறார்.கபூரும் தான் மேலும் ஏதாவது விவரம் அறிந்தால் தெரியபடுவதாக கூறுகிறார்.ஊர் திரும்பிய கோபி ராஜேந்தரை சந்தித்து நடந்ததை கூறினார்.அந்த வழக்கை மறுவிசாரணைக்கு கொண்டுவரவேண்டும் என கோபி கூறுகிறார்.அதற்கு ராஜேந்தர் அரசு வழக்கறிஞர்  சிவகுமாரை சந்திக்க சொல்கிறார்.கோபி சென்று அவரை சந்தித்து விவரங்களை கூறுகிறார்.சிவகுமாரும் சம்பதமானவர்களுக்கு சம்மன் அனுப்புவதாக கூறுகிறார்..

அன்று இரவு கோபி யாருக்கும் தெரியாமல் மேகநாதன் வீட்டிற்க்கு சென்று ஒரு கதவின் பின்னால் மைக்ரோ போன் ஒன்றை பொருத்துகிறார்.பின் அவர் வெளியேவரும்போது டிரைவர் கோவிந்தனின் நாய் ஜானி அந்த வீட்டிற்க்குள் ஓடுவதை பார்த்தார்.அதனை பின்தொடர்ந்த கோபி அந்த நாய் அந்த வீட்டின் பின்புறம் சென்று ஒரு இடத்தை தோண்ட முயற்சி செய்ததையும் பின் முடியாமல் அங்கே படுத்துவிட்டதையும் காண்கிறார்.பின் அடுத்தநாள் இரவில் நம்பிகையான இருவருடன் அந்த வீட்டிக்கு வந்து அந்த இடத்தை தோண்டினார்.அங்கு ஒரு எலும்புக்கூடு கிடைத்தது.
அதனை ஆராய்ச்சிகூடத்திர்க்கு அனுப்பினார்.அதனை ஆராய்ந்த நிபுணர் ஜேம்ஸ் அது டிரைவர் கோவிந்தனின் உருவ அமைப்போடு ஒத்துப்போவதாக கூறினார்.




அடுத்தநாள் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அரசு வழக்கறிஞர் சிவகுமார் காலகண்டன் மற்றும் டிரைவர் கோவிந்தனை கொலை செய்ததாக மேகநாதன் மேல் குற்றம் சுமத்தினார்.அதனை அவர் மறுத்தார்.எதிர் தரப்பு வக்கீல் ராஜசேகரன் ஆதாரம் கேட்டார்.அதற்கு சிவகுமார் ஒரு டேப் ரெகார்டரை போடுவதற்கு அனுமதி கேட்டார்.நீதிபதி அனுமதி வழங்கியதும் டேப் ஓடத்துவங்கியது அது கோபி மேகநாதன் வீட்டில் கோபி பொருத்திய மைக்கில் இருந்து பதிவு செய்யப்பட்டது.அதில் மேகநாதன் ஒரு அடி ஆளிடம் பேசுவது பதிவு செய்யபட்டிருந்தது.

மேகநாதன் : ஏண்டா அந்த பயலை தீர்த்துக்கட்ட சொன்னால் அவன் உயிரோடு தான் இருக்கிறான் நேற்று சங்கரியை வேறு சென்று மிரட்டிஉள்ளான் போதாகுறைக்கு கோர்ட் சம்மன் வேறு வந்துள்ளது 

அடியாள்  : கவலை படாதீர்கள் எஜமான் அவனை தீர்த்துவிடுகிறேன்.

என்று பதிவாகிருந்தது.அதனை கேட்ட மேகநாதன் முகத்தில் கோவம் தெரிந்தது.பின்னர் ராஜசேகரன் காதில் ஏதோ கூறினார்.பின்னர் கோர்ட் மதிய உணவுவேளைக்காக கலைந்தது.மீண்டும் கூடியபோது ராஜசேகரன் அந்த டேப்பில் பதிவாகிருந்தது பல வருடங்களுக்கு முன்னால் மேகநாதன் செய்த நாடக ஒத்திகை என்றும் காலகண்டன் மற்றும் மேகநாதன் இருவரும் நாடக நடிகர்கள் என்றும் கூறினார்.இதனால் வழக்கு ஒத்திவைக்கபட்டது.



அன்று இரவு கபூர் மிக முக்கிய தகவலுடன் கோபியை சந்தித்தார்.அது மேகநாதன் ஒரு நடிகர் மட்டும் அல்ல ஒரு கார் பந்தய ஓட்டுனரும் கூட.ஒரு முறை ஒரு கார் விபத்தில் அவரது இடுப்பு எலும்பு சேதம் ஆனதால் தகிடு வைத்துள்ளதாகவும் ஒரு 10 நிமிடத்திற்கு மேல் அவரால் ஒரு இடத்தில நிற்க முடியாது என்று கூறினார்.அதனை கேட்ட கோபி அதிர்ச்சி அடைந்தார் கோர்டில் மேகநாதன் பலமணிநேரம் ஒரே இடத்தில எப்படி நின்றார் என யோசித்தார்.உடனே நண்பர்கள் இருவரும் மருத்துவ கல்லூரியில் இருக்கும் காலகண்டனின் எலும்புக்கூடை பார்க்க சென்றனர்.

இதற்கிடையில் மேகநாதனை சந்தித்த சந்தித்த சங்கரி மருத்துவ கல்லூரியில் இருக்கும் காலகண்டனின் எலும்புகூடை கொண்டுவர சொல்லி மேகநாதனிடம் கூறுகிறாள்.மேகநாதனும் ஆட்களை அனுப்புகிறார்.



கோபியும் கபூரும் கல்லூரியை அடைந்து உள்ளே சென்று எலும்புக்கூடை ஆராய்கின்றனர்.அதன் இடுப்பில் ஒரு தகிடு இருப்பதாய் கண்டுபிடிக்கின்றனர்.கபூர் தன்னிடம் இருந்த கேமராவில் பல கோணங்களில் அதனை படம் பிடிக்கிறார்.பின்னர் வெளியில் வரும்போது மேகநாதனின் ஆட்களிடம் மோதி அவர்களை அடித்து போலீசிடம் ஒப்படைத்துவிட்டு  செல்கின்றனர்.

அடுத்தநாள் கோர்டில் சிவகுமார் மேகநாதனையும் டிரைவர் கோவிந்தனையும் கொலை செய்தது இங்கு இருக்கும் காலகண்டன் அவர்கள் தான் என குற்றம் சுமத்துகிறார்.கோர்டில் இருந்த அனைவரும் அதனை கேட்டு அதிர்ச்சி ஆகின்றனர்.பின்னர் சிவகுமார் கபூர் எடுத்த வந்த புகைப்படங்களை காண்பித்து விளக்குகிறார்.மற்றும் காலகண்டன் பெயருக்கு தான் கோடீஸ்வராக இருந்தாலும் அவர்க்கு பல கடன்கள் இருந்ததாகவும் அதனில் இருந்து வெளிவர இந்த நாடகம் என்றும் கூறினார்.மற்றும் இதற்கு மேகநாதனின் மனைவி சங்கரியும் உடந்தை என்றும் கூறுகிறார்.அனைத்தையும் கேட்ட நீதிபதி காலகண்டன் மற்றும் சங்கரிக்கு தண்டனை வழங்கினார்.அதனை கேட்ட நண்பர்கள் இருவரும் யாரும் அறியாமல் அங்கிருந்து வெளியேறினர்.ஆனால் அதனை கண்ட டி ஐ ஜி  ராஜேந்தர் வெளியில் வந்து இருவரையும் பாராட்டினார்.



அத்துடன் கதை முடிந்தது. 

இந்த கதையை  நான் படித்த பொழுது ஒரு சஸ்பென்ஸ் திரைப்படம் பார்த்தது போல இருந்தது.மற்றும் இக்கதையில் வரும் பெயர்கள் மற்றும் இடங்கள் நமக்கு மிகவும் பரிச்சயமாக இருந்தது.

இக்கதையை நண்பர்கள் படித்திருந்தாலும் அதனை பற்றியும் கூறுங்கள் 

அவ்வளவுதான் நண்பர்களே.முன்பே கூறியது போல உங்கள் கருத்தை கூறுங்கள்.மற்றும் பதிவின் நீளம் குறித்தும் கூறுங்கள்.

மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.

Wednesday, September 19, 2012

Herlock Sholmes - Mini Lion - எழுந்து வந்த எலும்புக்கூடு




வணக்கம் நண்பர்களே,

வெகுநாளாக நான் நம்ம சௌந்தர் போல தனி பதிவு இட ஆசைப்பட்டேன்.அது இன்று தான் நிறைவேறி உள்ளது.
இது தான் எனது முதல் தனி புத்தக பதிவு.
இன்றைய பதிவில் நாம் காணபோவது மினி லயனில் வந்த  ஹெர்லக்   ஷோம்ஸ் முதல் கதை "எழுந்து வந்த எலும்புக்கூடு".
மிகவும் புகழ் வாய்ந்த ஷெர்க் ஹோம்ஸ் கதாபாத்திரத்தை கிண்டல் செய்து உருவாக்கப்பட்ட கத பாத்திரம் தான் இது.

அவர்களுக்கு நமது விஜயன் சார் அவர்களின் அறிமுகம் உங்களுக்காக.



கதை :

லண்டன் மாநகர்.
ஸ்காட்லான்ட் யார்ட் இற்கே சவால் விடும் புதிய பிரச்னை.
சமீபகாலமாக சுடுகாடில் இருந்து பிணங்கள் காணாமல் போகின்றன.
அதிகாரிகள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.சீப் அவர்கள் மிகவும் கோவப்படுகிறார்.

முடிவில் இந்த முடிச்சை அவிழ்க்க கூடியவர் ஒருவரே என கூறி நமது   ஹெர்லக்  ஷோம்ஸ் அவர்களை அழைகிறார்.
அவர் தனக்கு அந்த வழக்கை பற்றி அனைத்தும் தெரியும் என்றும் உங்கள் அதிகாரிகளில் ஒருவர் அதற்கு துணை போவதாக தான் சந்தேகபடுவதாகவும் கூறுகிறார்.ஆகையால் தான் இந்த வழக்கை எடுத்துகொள்வது யார்க்கும் தெரியவேண்டாம் என்றும் தான் மறுத்துவிட்டதாக அவர்களிடம் கூறவும் சொல்கிறார்.அதன் படியே சீப்பும் கூறுகிறார்.

பின்பு ஷோம்ஸ் சந்தித்து அந்த வழக்கு சம்பதமான தகல்வல்கள் அடங்கிய தொகுப்பை கொடுக்க பார்க் வருகிறார்.
அங்கிருக்கும் படகை கட்டும் முனை மேல் அமர்ந்து இன்னும்  ஷோம்ஸ்  வரவில்லையே என்று கூறும் போது அந்த முனை பேசுகிறது.
அதனை கண்டு அதிர்ச்சி அடையும் அவர் அது நமது ஷோம்ஸ் தான் என தெரிந்து அமைதி ஆகிறார்.பின்பு அவரிடம் தொகுப்பை கொடுத்துவிட்டு செல்கிறார்.






பின் வாஸ்டனிடம் காணாமல் போன பிணங்களின் உறவினர்களிடம் விசாரிக்கசொல்லிவிட்டு நூலகம் சென்று இந்தியா ஒரு புதிரான பூமி(ஆம் அது தான் அவர் படிக்கும் புத்தகத்தின் பெயர்) படிக்கிறார்.

இதற்கிடையில் மேலும் மூன்று பிணங்கள் பிணவறையில் இருந்து தானாக இரவு 12 மணிக்கு முழித்து கொண்டு ஒரு குதிரை வண்டியில் தப்பித்து செல்கிறார்கள்.மறைந்து இருக்கும் போலீசார் அது ஏதோ சாதாரண மனிதர்கள் என நினைத்து சந்தேகபடாமல் விட்டுவிடுகிறார்கள்.

காலையில் மீண்டும் மூன்று பிணங்கள் காணாமல் போனதை பற்றி படிக்கிறார்.அப்பொழுது வாஸ்டனும் காணாமல் போன பிணங்களின் உறவினர்கள் அனைவரும் மறைந்து  போனதாக கூறுகிறார். இதனால் ஷோம்ஸ் சந்தேகப்பட்டு காணாமல் போன அனைவருக்கும் ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கவேண்டும் என கூறி அதனை கண்டுபிடிக்கும் பொறுப்பை வாஸ்டனிடம் ஒப்படைகிறார்.பின் பிணவறை ஆராய்வதற்காக செல்கிறார்.

பிணவறையை ஆராய்ந்து ஒன்றும் கிடைக்காமல் வெளியே வரும் போது இருவர் பேசிகொள்வதை கண்டு ஒரு செம்மறி ஆடாக மாறி கவனிக்கிறார்.
ஒரு பெண்ணும் ஒரு கிழவனும் பேசிகொள்கிரார்கள் கையில் ஒரு கடிதம் வைத்திருக்கிறார் அந்த கிழவன்.அது பறந்து வந்து நம்ம ஆடுகிட்ட வருது.அதனை தனது வாயில் கவ்விக்கொள்கிறது அதனை பறிக வரும் இருவரை பார்த்து முறைகிறது.அப்பொழுது அங்கு வரும் பராமரிப்பாளர் அந்த இருவரிடமும் யார் ஆட்டை கொண்டு வந்தது எனக்கூறி விசாரணை செய்கிறார்.அந்த சமயத்தில் தனது வேஷத்தை கலைத்து விட்டு கடிதத்துடன் தப்பித்துவிடுகிறார் ஷோம்ஸ்.

அக்கடிதத்தில் 

மிஸ்டர் டிரென்ட் நான் சாகவிரும்புகிறேன் உரிய தொகை தந்து விடுகிறேன் இப்படிக்கு மிஸ்டர் தாமஸ் போலந்து என இருக்கிறது.






அதில் இருக்கும் டிரென்ட் என்ற பெயர் எங்கோ கேள்விபட்டிருபதாக நினைத்த ஷோம்ஸ் ஸ்காட்லான்ட் யார்டின் பதிவேடு பராமரிப்பு பிரிவுக்கு சென்று பார்கிறார்.அங்கு அவருக்கு சீப், டாக்டர் சான்டேர்ஸ் என்பவரை அறிமுகம் செய்கிறார்.அவர் தான் பிணங்களை பிரேதப்பரிசோதனை செய்து உறுதிபடிதியதாக கூறுகிறார்.அங்கு பதிவேடுகளில் தேடிய ஷோம்ஸ் க்கு அதிர்ச்சி trend என்ற பெயர் சம்பந்தமான பக்கங்கள் கிழிக்கப்படிருகின்றன.
வெளியே வரும்போது அங்கு வரும் இன்ஸ்பெக்டரிடம் trend பற்றி கேட்கிறார்.அவரிடம் இருந்து trend தண்டனை காலம் முடிவதற்கு முன்பு விஷம் அருந்தி இறந்துவிட்டதை அறிகிறார்.
பின் வாஸ்டனை சந்தித்து விவரங்கள் அறிகிறார்.இறந்த அனைவருக்கு கடன் தொல்லை இருப்பதை கண்டுபிடிக்கிறார்..




பின் மீண்டும் சீப்பை சந்தித்து சாண்டர்ஸ் பற்றி கேட்கிறார் அவர் மிகவும் நம்பத்தகுந்தவர் என அறிகிறார். அவரிடம் விசாரிக்கிறார்.அவர் தான் நன்றாக சோதிததாகவும் அவர்கள் அனைவரும் கண்டிப்பாக இறந்துவிட்டதாகவும் கூறுகிறார்.அங்கிருந்து வெளியில் வரும்போது தான் பார்க்கில் கிழவனுடன் சந்தித்த பெண்ணை கண்டு பக்கத்தில் இருந்த போலீசிடம் விசாரிக்கிறார்.
அவர் தான் டாக்டர் சாண்டேர்சின் சகோதரி என்று அறிகிறார்.

பின் வாஸ்டனிடம் சென்று தான் குற்றவாளியை கண்டுபிடித்து விட்டதாகவும் அதற்கான ஆதாரத்தை கண்டுபிடிக்க அவரை கூடிக்கொண்டு மயானம் சென்று ஒரு சமாதியை தோண்டிபார்கிறார்.





அடுத்து மீண்டும் மூன்று பேர் இறந்து போனதை அறிந்து கண்டுபிடிபதர்காக எலும்புக்கூடு போல வேடம் அணிந்து மயானம்  மறைந்து கொள்கிறார்.

சிறுது நேரத்தில் அங்கு சீப்புடன் வரும் டாக்டர் சாண்டர்ஸ்  பிணங்களை மீண்டும் சோதிபதாக சொல்லி உள்ளே வந்து பிணங்களின் நெற்றியில் யாரும் பார்க்காத வண்ணம் ஏதோ ஒரு திரவத்தை தடவுகிறார்.ஆனால் இதனை மறைந்து இருந்த ஷோம்ஸ் பார்த்துவிடுகிறார்.



இரவு பன்னிரண்டு மணி ஒவ்வொரு பிணங்களாக எளுந்தரித்து வெளியே வருகிறது வழக்கம் போல மறைந்து இருந்த போலிஸ் அவர்களை சந்தேக படவில்லை.அவர்கள் ஒரு குதிரை வண்டியில் ஏறி செல்கிறார்கள்.அவர்களை நமது ஷோம்ஸ் தடுத்து இக்குற்றங்களுகேல்லாம் காரணம் டாக்டர் சாண்டர்ஸ் என்று நிறுபிகிறார்.மற்றும் அவர் தான் எல்லோரும் இறந்துவிட்டதாக கருதும் குற்றவாளி trend என கூறுகிறார்.
தான் அவனது சமாதியை தோண்டி பார்த்ததாகவும் அதனுள் பிணம் எதுவும் இல்லை என்கிற ஆதாரத்தையும் கூறுகிறார்.




அனைவரும் ஒரு கஷாயத்தை குடித்தால் இறந்த பிணம் போல ஆகிவிடுவார்கள் என்றும் பின் ஒரு வித கொழுப்பை அவர்கள் நெற்றியில் தடவினால் பின் எழுந்துவிடுவார்கள் என்று தான் ஒரு புத்தகத்தில் படித்ததை விளக்குகிறார்.இவ்வாறு அவரது முதல் சாகசம் முடிந்தது. 


 உச்சகட்ட காமெடி .


விரைவில் எதிர்பாருங்கள்.


லயன் புக் கிளப் ஒரு பார்வை.



நண்பர்களே இது எனது முதல் தனிப்பதிவு.
எனது பதிவிடும் முறையில் ஏதாவது குறை இருந்தால் கூறுங்கள் திருத்திக்கொள்கிறேன்.கதை சொல்லும் விதத்தில் ஏதேனும் மாற்றம் தேவையா என்பதையும் கூறுங்கள்.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.

Friday, September 14, 2012

காமிக்ஸ் புதையல் XVI - Rani Comics Collection - Part 1

வணக்கம் நண்பர்களே,

இந்த பதிவில் என்னிடம் உள்ள ராணி காமிக்ஸ்களின் தொகுப்புகளில் முதல் பாகத்தை அளித்துள்ளேன்.
எண்ணிக்கையில் அதிகம் உள்ளதால் பல பாகங்களாக அளிக்க உள்ளேன்

எனக்கு ராணி காமிக்ஸ் மிகவும் பிடித்ததற்கு இரண்டு காரணங்கள்.

1.அதிகமாக அளவில் கிடைத்தது(மாதம் இருமுறை)
2.அதிகமான கடைகளில் கிடைத்தது.

இதற்க்கு முக்கிய காரணம் அப்பொழுது ராணி syndicate வலிமையாக காலூன்றின்தது.
அக்குழுமத்தில் இருந்தது  பலபுத்தகங்கள் வந்தன அதோடு சேர்ந்து இந்த காமிக்ஸும் வந்து விடும்.
மற்றும் விலையும் குறைவாக இருக்கும்.நான் முதலில் வாங்கியபோது விலை இரண்டாக இருந்த்தது. 
















நான் முதல் முதலாக வாங்கியது வில்லாதி வில்லன் என நினைக்கிறன்.
மற்ற புத்தகங்கள் அனைத்தும் பழைய புதகடையில் வாங்கியதே.

பல புத்தகங்களின் முதல் பக்கத்தில் ஸ்ரீ ரங்கா புத்தக கடை என்ற அச்சை பார்க்கலாம்.
உண்மையில் என்னிடம் இருக்கும் 75 சதவீத புத்தகங்கள் அக்கடையில் வாங்கியதே.

பின்பு எனக்கு கல்கி,சாண்டில்யன்,ராஜேஷ்குமார்,சுபா என பலரை அறிமுகம் செய்தது அக்கடையின் உரிமையாளர் ரங்கநாதன் அண்ணாவையே சாரும்.

நமது லயன் குளுமதைவிட எனக்கு பல ஹீரோக்களை அறிமுகம் செய்தது ராணி காமிக்ஸ் தான்.
james bond,முகமூடி வீரர் பில்லி,சாட்டயடி வீரர், டைகர்,ஆசாத்,வெள்ளை விழி,bruce லீ,கிட் கார்சன், மாயாவி,காரத்,ராயன்,பக் ஜோன்ஸ்,தில்லான்,பீமா,விங் கமாண்டர் ஜான்,மாண்ட்ரேக் இப்படி பலர்.

அதற்கு பின் தான் பலர் நமது லயன் குழுமத்தில் வருவதே தெரியும்.
எனக்கு ராணி காமிக்ஸ் ஹீரோகளிலேயே மிகவும் பிடித்தவர்கள் பில்லி,டைகர்,சாட்டை அடி வீரர்.
அதற்க்கு பின் தான் மற்றவர்கள். 
நிறைய கௌபாய் கதைகளும் அதில் வந்துள்ளன.
பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர் அருமையான கதை அம்சம் நிறைந்தது.
மின்னல் வீரன் எனக்கு மிகவும் பிடித்த கதை.
கிட் கார்சன் முதலில் அறிமுகமானது கூட இங்கே தான். 

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் அடுத்த பாகத்தில் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.


பதிவில் இருக்கும் ராணி காமிக்ஸ் பற்றிய ஒரு சிறு முன்னோட்டமே நமது நண்பர் steelclaw அவர்கள் காட்டியது
என்னை மிகவும் கவர்ந்தது.இது எனது பதவிலேயே இணைக்க வேண்டும் என்று தோன்றியது.ஆகையால் கீழே அவரது கருத்து


//

நண்பரே அன்று ராணி காமிக்ஸ் ஜேம்ஸ் பாண்ட்,கௌ பாய் என மாறி மாறி வரும்,கௌ பாய் கதைகள் கலக்கும்,அதுவும் அப்போது ஏனோ ஜேம்ஸ் பாண்ட் பிடிக்கவில்லை .அடுத்து வரும் வெளியீடுகள் அதாவது ஜேம்ஸ் பாண்ட்,கதையின் அடுத்த வெளியீடுகள் தூள் கிளப்பும் ,மாறு பட்ட கதைகள்.அதிலும் நீங்கள் வைத்துள்ள கதைகளில் என்னை பொறுத்தவரை தப்பி ஓடிய இளவரசி அடிக்க வேறு கதைகள் இப்போது வரை கிடையாது,என்பதே எனது எண்ணம்,முதன் முறையாக சிறு வயதில் அறிமுகமான வேற்று நாகரிகம் என வாய் பிளக்க வைத்த எகிப்து அரசர்,மதகுரு உடைகள் ,அந்த ஆற்றின் ஓரம் திருடன்,வேட்டை ஆடும் கெர்ப் ,அழகான இளவரசி என ஒவொரு ஓவியங்களும் ,ஏன் அனைத்து கட்டங்களும் தூள் கிளப்பும்,மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள்.மொழி பெயர்ப்பு சற்று தூக்கலாகவே இருக்கும்.நீங்கள் தனி பதிவே இடலாம் ,அவளவு அற்புதமான ,தரமான கதை அது.முக மூடி மாயாவியின் வருகைக்கு பின்பே சொதப்பலான மொழி பெயர்ப்பு என கீழ் நோக்கி சென்றது.அதற்க்கு முன்னர் மொழி பெயர்ப்பு நமது லயனுக்கு இணையே .மரணப்பரிசு,மாறு பட்ட அற்புதமான ராணுவ ரகசியம் சகோதரர்களின் சோக காவியம் ,நான் படித்த முதல் ராணி சுறாவேட்டை,புரூஸ் லீ வரவின் வைரச்சுரங்கம் (அப்போது புரூஸ் லீ யாரென்றே தெரியாது ,எனது தந்தையார் படம் பார்க்க பிறருடன் செல்ல அனுமதிக்க மாட்டார்,யாரிந்த புரூஸ் லீ என எகிற வைக்கும் எதிர் பார்ப்புகள்,நண்பர்களின் ஆஹா ஓகோவென்ற புகழாரம் ) எதிர் பார்ப்பு,பீரங்கி கோட்டை ,விசித்திர விமானம் வியக்க வைக்கும் கண்டு பிடிப்புகளும்,கால பயணம் செய்யும் எகிப்த்திய மம்மியோ சிறுவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்ட உதவின என்றால் மிகை ஆகாது .1 .50 க்கு வந்த கதைகள் அனைத்தும் தரமானவைகளே.லயனில் வந்தால் என ஏங்கியதும் உண்டு.ஆனால் தப்பி ஓடிய இளவரசியோ,பூனைத்தீவோ லயனுக்கு குறைந்ததல்ல.ஆனால் அனைவரை போல லயனில் வந்தால் என ஏங்கியதுண்டு .நமது டெக்ஸ் இன் அற்புதமான பவள சிலை மர்மம் வரும் பொது பூனைத்தீவு வெளியானது,டேவிட் என்பவர் பின்னியிருப்பார்.கொலை வாரன்ட் அந்த கனவு அற்புதம் என .................நமது லயனின் இரும்பு மனிதன் எதிர் பார்ப்பில் வாங்கி சொதப்பிய ராணியின் இரும்பு மனிதன்,அற்புதமான பலி வாங்கும் வெறியுடன் செவிந்தியர்களுடன் சேர்ந்து போராடும் அந்த மரக்கோட்டை ,புதிய அறிமுகம் மர்ம முகமூடி பில்லி ,ஜெயில் கைதி வுருக்கமான குற்றவாளிகளை கொல்லாதே என சகோதர பாசத்தை கண் முன் நிறுத்தும் அட்டகாசமான கதை ,என அற்புதமான கதை பூங்காவில் அதுவும் ஒன்றே,...................அற்புதமான் பொக்கிசங்கள் நண்பரே ,பாது காப்பாக வையுங்கள்.....பூட்டு போடவும்.......,அன்று லயன்(எ)முத்து ,ராணி,அசோக் (எ) மேத்தா இம்மூன்றும் மூவேந்தகள் என்றால் மிகை அல்ல .சேர ,சோழ ,பாண்டியரில் ..............ஆனால் லயன் பாக்கெட் சைசே இவற்றை பின்னுக்கு தள்ளியதுடன் இணை இல்லா ஆர்ச்சி ,வலை மன்னன் ,இரும்பு கை மாயாவி,லாரன்ஸ் ,டேவிட் ,ஜானி நீரோ ,டெக்ஸ் ,முன்னே அனைத்தும் தலை வணங்கி நின்றன ,லயனுக்கு உள்ள யாருக்கும் இல்லா சிறப்பு கோடை மலர்,தீபாவளி மலர் என்பதும் ஒன்று................//

Thursday, September 13, 2012

காமிக்ஸ் புதையல் XV - Mayajaal Stories Collection

வணக்கம் நண்பர்களே,

இந்த பதிவில் நாம் காண போவது பல பதிப்பகத்தில் இருந்து வந்த மாயாஜால கதைகளின் தொகுப்புகளை பற்றி தான்.
சிறு வயதில் என்னை ஒரு கற்பனை உலகத்திற்கு அழைத்து சென்றதில் பெரும் பங்கு இந்த புத்தகங்களுக்கு உண்டு.

ராஜா,ராணி,மந்திரவாதிகள்,ஏழு கடல்,அரக்கர்கள்,குள்ளர்கள்,மின்னல் அம்பு,மந்திரவாதியின் உயிர் அடங்கிய கிளி
அப்பப்பா கேட்கவே சுகமாக உள்ளது.

இப்பொழுது சக்கை போடு போடும் ஹாரி பாட்டருக்கேல்லாம் அரிசுவடி இக்கதைகள் தான்.
அக்கதையில் வரும் வில்லன் வால்டமொடின் உயிர் எல்லோ பொருட்களில் இருக்கும் அதனை கண்டுபிடித்து எப்படி அளிக்கிறான் என்பதை ஏழு புத்தகங்களாக எழுதி அம்மணி பல  கோடிகளை  சம்பாதித்து விட்டார்.

ஆனால் இக்கதைகளை எழுதிய எழுத்தாளர்களின் நிலை என்ன என்று யாருக்கும் தெரியாது.















எத்தனை எழுத்தாளர்கள் யுவராஜா,அணில் அண்ணா,தங்க ராஜா,இன்ப ராணி,வி ஆர் ஜெய லட்சுமி,மாயராஜா,ஜெயகுமார்,பீ கே மூர்த்தி,இன்பராஜா,மனோகரன்,அனுராதா.


அக்காலத்தில் சென்னையில் இருந்தும் மதுரையில் இருந்தும் என பல பதிபகதார்கள்.
அந்த பொற்காலம் மீண்டும் வர எனது மனது ஏங்குகிறது.

எனக்கு தெரிந்து 90 கள் வரை மதுரை கலைபோன்னியில் இருந்து யுவராஜா எழுத பல கதைகள் வந்துள்ளன,

அனைத்து கதைகளும் எனக்கு பிடிக்கும் என்றாலும் மிகவும் பிடித்தது அணில் அண்ணா கதைகள் தான்.
அவர் அறிமுகபடுத்திய வீர பிரதாபன் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அவனுடம் இருக்கும் குள்ளன் தம்பி செய்யும் காமெடிகள்,பிறர் கண்களுக்கு தெரியாத மின்னல் அம்புகள். 2000 வருடங்கள் வாழும் சக்தி,பூலோகத்தில் ஆறு மாதங்கள்,மேலோகத்தில் ஆறுமாதங்கள்.
அருமையாக இருக்கும்.   

கதையின் போக்கும் நாம் அதனுடன் பயணம் செய்வது போல இருக்கும்.
சித்திரங்கள் இல்லாவிட்டாலும் கற்பனையை தூண்டும் விதமாக இருக்கும்.








நண்பர்களே இக்கதைகள் மூலம் உங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.