வணக்கம் நண்பர்களே,
வெகுநாளாக நான் நம்ம சௌந்தர் போல தனி பதிவு இட ஆசைப்பட்டேன்.அது இன்று தான் நிறைவேறி உள்ளது.
இது தான் எனது முதல் தனி புத்தக பதிவு.
இன்றைய பதிவில் நாம் காணபோவது மினி லயனில் வந்த
ஹெர்லக்
ஷோம்ஸ் முதல் கதை "எழுந்து வந்த எலும்புக்கூடு".
மிகவும் புகழ் வாய்ந்த ஷெர்லக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தை கிண்டல் செய்து உருவாக்கப்பட்ட கத பாத்திரம் தான் இது.
அவர்களுக்கு நமது விஜயன் சார் அவர்களின் அறிமுகம் உங்களுக்காக.
கதை :
லண்டன் மாநகர்.
ஸ்காட்லான்ட் யார்ட் இற்கே சவால் விடும் புதிய பிரச்னை.
சமீபகாலமாக சுடுகாடில் இருந்து பிணங்கள் காணாமல் போகின்றன.
அதிகாரிகள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.சீப் அவர்கள் மிகவும் கோவப்படுகிறார்.
முடிவில் இந்த முடிச்சை அவிழ்க்க கூடியவர் ஒருவரே என கூறி நமது
ஹெர்லக்
ஷோம்ஸ் அவர்களை அழைகிறார்.
அவர் தனக்கு அந்த வழக்கை பற்றி அனைத்தும் தெரியும் என்றும் உங்கள் அதிகாரிகளில் ஒருவர் அதற்கு துணை போவதாக தான் சந்தேகபடுவதாகவும் கூறுகிறார்.ஆகையால் தான் இந்த வழக்கை எடுத்துகொள்வது யார்க்கும் தெரியவேண்டாம் என்றும் தான் மறுத்துவிட்டதாக அவர்களிடம் கூறவும் சொல்கிறார்.அதன் படியே சீப்பும் கூறுகிறார்.
பின்பு ஷோம்ஸ் சந்தித்து அந்த வழக்கு சம்பதமான தகல்வல்கள் அடங்கிய தொகுப்பை கொடுக்க பார்க் வருகிறார்.
அங்கிருக்கும் படகை கட்டும் முனை மேல் அமர்ந்து இன்னும்
ஷோம்ஸ் வரவில்லையே என்று கூறும் போது அந்த முனை பேசுகிறது.
அதனை கண்டு அதிர்ச்சி அடையும் அவர் அது நமது ஷோம்ஸ் தான் என தெரிந்து அமைதி ஆகிறார்.பின்பு அவரிடம் தொகுப்பை கொடுத்துவிட்டு செல்கிறார்.
பின் வாஸ்டனிடம் காணாமல் போன பிணங்களின் உறவினர்களிடம் விசாரிக்கசொல்லிவிட்டு நூலகம் சென்று இந்தியா ஒரு புதிரான பூமி(ஆம் அது தான் அவர் படிக்கும் புத்தகத்தின் பெயர்) படிக்கிறார்.
இதற்கிடையில் மேலும் மூன்று பிணங்கள் பிணவறையில் இருந்து தானாக இரவு 12 மணிக்கு முழித்து கொண்டு ஒரு குதிரை வண்டியில் தப்பித்து செல்கிறார்கள்.மறைந்து இருக்கும் போலீசார் அது ஏதோ சாதாரண மனிதர்கள் என நினைத்து சந்தேகபடாமல் விட்டுவிடுகிறார்கள்.
காலையில் மீண்டும் மூன்று பிணங்கள் காணாமல் போனதை பற்றி படிக்கிறார்.அப்பொழுது வாஸ்டனும் காணாமல் போன பிணங்களின் உறவினர்கள் அனைவரும் மறைந்து போனதாக கூறுகிறார். இதனால் ஷோம்ஸ் சந்தேகப்பட்டு காணாமல் போன அனைவருக்கும் ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கவேண்டும் என கூறி அதனை கண்டுபிடிக்கும் பொறுப்பை வாஸ்டனிடம் ஒப்படைகிறார்.பின் பிணவறை ஆராய்வதற்காக செல்கிறார்.
பிணவறையை ஆராய்ந்து ஒன்றும் கிடைக்காமல் வெளியே வரும் போது இருவர் பேசிகொள்வதை கண்டு ஒரு செம்மறி ஆடாக மாறி கவனிக்கிறார்.
ஒரு பெண்ணும் ஒரு கிழவனும் பேசிகொள்கிரார்கள் கையில் ஒரு கடிதம் வைத்திருக்கிறார் அந்த கிழவன்.அது பறந்து வந்து நம்ம ஆடுகிட்ட வருது.அதனை தனது வாயில் கவ்விக்கொள்கிறது அதனை பறிக வரும் இருவரை பார்த்து முறைகிறது.அப்பொழுது அங்கு வரும் பராமரிப்பாளர் அந்த இருவரிடமும் யார் ஆட்டை கொண்டு வந்தது எனக்கூறி விசாரணை செய்கிறார்.அந்த சமயத்தில் தனது வேஷத்தை கலைத்து விட்டு கடிதத்துடன் தப்பித்துவிடுகிறார் ஷோம்ஸ்.
அக்கடிதத்தில்
மிஸ்டர் டிரென்ட் நான் சாகவிரும்புகிறேன் உரிய தொகை தந்து விடுகிறேன் இப்படிக்கு மிஸ்டர் தாமஸ் போலந்து என இருக்கிறது.
அதில் இருக்கும் டிரென்ட் என்ற பெயர் எங்கோ கேள்விபட்டிருபதாக நினைத்த ஷோம்ஸ் ஸ்காட்லான்ட் யார்டின் பதிவேடு பராமரிப்பு பிரிவுக்கு சென்று பார்கிறார்.அங்கு அவருக்கு சீப், டாக்டர் சான்டேர்ஸ் என்பவரை அறிமுகம் செய்கிறார்.அவர் தான் பிணங்களை பிரேதப்பரிசோதனை செய்து உறுதிபடிதியதாக கூறுகிறார்.அங்கு பதிவேடுகளில் தேடிய ஷோம்ஸ் க்கு அதிர்ச்சி trend என்ற பெயர் சம்பந்தமான பக்கங்கள் கிழிக்கப்படிருகின்றன.
வெளியே வரும்போது அங்கு வரும் இன்ஸ்பெக்டரிடம் trend பற்றி கேட்கிறார்.அவரிடம் இருந்து trend தண்டனை காலம் முடிவதற்கு முன்பு விஷம் அருந்தி இறந்துவிட்டதை அறிகிறார்.
பின் வாஸ்டனை சந்தித்து விவரங்கள் அறிகிறார்.இறந்த அனைவருக்கு கடன் தொல்லை இருப்பதை கண்டுபிடிக்கிறார்..
பின் மீண்டும் சீப்பை சந்தித்து சாண்டர்ஸ் பற்றி கேட்கிறார் அவர் மிகவும் நம்பத்தகுந்தவர் என அறிகிறார். அவரிடம் விசாரிக்கிறார்.அவர் தான் நன்றாக சோதிததாகவும் அவர்கள் அனைவரும் கண்டிப்பாக இறந்துவிட்டதாகவும் கூறுகிறார்.அங்கிருந்து வெளியில் வரும்போது தான் பார்க்கில் கிழவனுடன் சந்தித்த பெண்ணை கண்டு பக்கத்தில் இருந்த போலீசிடம் விசாரிக்கிறார்.
அவர் தான் டாக்டர் சாண்டேர்சின் சகோதரி என்று அறிகிறார்.
பின் வாஸ்டனிடம் சென்று தான் குற்றவாளியை கண்டுபிடித்து விட்டதாகவும் அதற்கான ஆதாரத்தை கண்டுபிடிக்க அவரை கூடிக்கொண்டு மயானம் சென்று ஒரு சமாதியை தோண்டிபார்கிறார்.
அடுத்து மீண்டும் மூன்று பேர் இறந்து போனதை அறிந்து கண்டுபிடிபதர்காக எலும்புக்கூடு போல வேடம் அணிந்து மயானம் மறைந்து கொள்கிறார்.
சிறுது நேரத்தில் அங்கு சீப்புடன் வரும் டாக்டர் சாண்டர்ஸ் பிணங்களை மீண்டும் சோதிபதாக சொல்லி உள்ளே வந்து பிணங்களின் நெற்றியில் யாரும் பார்க்காத வண்ணம் ஏதோ ஒரு திரவத்தை தடவுகிறார்.ஆனால் இதனை மறைந்து இருந்த ஷோம்ஸ் பார்த்துவிடுகிறார்.
இரவு பன்னிரண்டு மணி ஒவ்வொரு பிணங்களாக எளுந்தரித்து வெளியே வருகிறது வழக்கம் போல மறைந்து இருந்த போலிஸ் அவர்களை சந்தேக படவில்லை.அவர்கள் ஒரு குதிரை வண்டியில் ஏறி செல்கிறார்கள்.அவர்களை நமது ஷோம்ஸ் தடுத்து இக்குற்றங்களுகேல்லாம் காரணம் டாக்டர் சாண்டர்ஸ் என்று நிறுபிகிறார்.மற்றும் அவர் தான் எல்லோரும் இறந்துவிட்டதாக கருதும் குற்றவாளி trend என கூறுகிறார்.
தான் அவனது சமாதியை தோண்டி பார்த்ததாகவும் அதனுள் பிணம் எதுவும் இல்லை என்கிற ஆதாரத்தையும் கூறுகிறார்.
அனைவரும் ஒரு கஷாயத்தை குடித்தால் இறந்த பிணம் போல ஆகிவிடுவார்கள் என்றும் பின் ஒரு வித கொழுப்பை அவர்கள் நெற்றியில் தடவினால் பின் எழுந்துவிடுவார்கள் என்று தான் ஒரு புத்தகத்தில் படித்ததை விளக்குகிறார்.இவ்வாறு அவரது முதல் சாகசம் முடிந்தது.
உச்சகட்ட காமெடி .
விரைவில் எதிர்பாருங்கள்.
லயன் புக் கிளப் ஒரு பார்வை.
நண்பர்களே இது எனது முதல் தனிப்பதிவு.
எனது பதிவிடும் முறையில் ஏதாவது குறை இருந்தால் கூறுங்கள் திருத்திக்கொள்கிறேன்.கதை சொல்லும் விதத்தில் ஏதேனும் மாற்றம் தேவையா என்பதையும் கூறுங்கள்.
அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.