லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனும் லயன் காமிக்ஸும்

லண்டனும் லயன் காமிக்ஸும்

Memories (2013) - Malayalam Movie Review

Memories (2013) - Malayalam Movie Review

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

Showing posts with label வாண்டுமாமா. Show all posts
Showing posts with label வாண்டுமாமா. Show all posts

Sunday, August 4, 2013

பூந்தளிர் கதைகள் : 3 - சார்லி மாமா & தபால்கார பரமு


வணக்கம் நண்பர்களே,

மீண்டும் ஒரு பூந்தளிர் கதைகளின் தொகுப்புகளுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.

நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

இப்புத்தகமும் நமது வாண்டுமாமா அவர்கள் ஆசிரியராக இருந்த பொழுது வந்ததே.

இப்புத்தகம் எனக்கு மிகவும் விருப்பமான கதைகளை கொண்டு உள்ளது.

இப்புத்தகம் கிறிஸ்மஸ் இதழாக வந்ததால் இயேசு குறித்து அவரது உரை கீழே.



பூந்தளிர் கதாபாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் சார்லி மாமா.
இவர் indianised vesrion of சார்லி சாப்ளின்.ஐவரும் கோட் போட்டிருப்பார் ஆனால் கீழே பஞ்சகட்சம் வைத்து வேஷ்டி கட்டிருப்பார்.

இக்கதையில் காசுகொடுத்து  பறவைகளை வாங்கி திறந்து விடுகிறார். அவைகளில் ஒரு   கிளிக்கு மட்டும் பறக்க முடியவில்லை ஒரு முரடனிடம்  சிக்கி கொள்கிறது.அதனை அவனிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.





வாண்டுமாமாவின் படைப்புகள் அனைத்துமே சிறப்பானவை தான். அதில் எனக்கு மிகவும் பிடித்தது பாலு கதாபாத்திரமும், குஷிவாலி ஹரிஷும் தான்.

பாலுவை வைத்து பல கதைகள் அமைத்துள்ளார் பலே பாலு,பாலுவும் பாட்டில் பூதமும், மர்மமாளிகையில் பாலு மற்றும் பாலுவும் பறக்கும் டிராயரும் ஆகியவை.

எனக்கு வாண்டுமாமா மற்றும் செல்லம் ஆகியோரின் கூட்டணி  பிடிக்கும்
அதே போல செல்லத்தின் சித்திரங்களிலும் ஈர்ப்பு உண்டு.

இவர்களில் கூட்டணியில் வந்த பாலுவும் பறக்கும் டிராயரும் பூந்தளிரில் தொடர்கதையாக வந்தது.அதில் ஒரு அத்தியாயம் கீழே.

மனித பிரமிட் செய்வதற்கு பள்ளி விளையாட்டு ஆசிரியர் பயிற்சி அளித்துகொண்டிருக்க, பாலுவின் மனமோ அந்தகாலத்தில் பிரமிட் கட்டிய எகிப்தியர்களை பற்றி நினைக்க அவனது மந்திர டிராயர் அவனை அக்காலத்திற்கு தூக்கி செல்கிறது.

அங்கு அடிமைப்பட்டு பிரமிட் கட்ட கஷ்டப்படுபவர்களுடன் அவனும் மாட்டிக்கொள்கிறான். அங்கிருந்து சாகசம் செய்து அவர்களை காப்பாற்றுகிறான்.







பூந்தளிர் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதீசியம் உண்டு.
அவர்கள் அனைவரும் வருமாறு ஒரு கதை புனைவது பல நட்சத்திரங்களை கொண்டு எடுக்கும் MultiStarer மூவி போன்றது.

கதையில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கவேண்டும் அதேபோல அவர்களது இயல்பும் வெளிப்பட வேண்டும்.

அவ்வாறு சில கதைகள் சிறப்பு இதழ்களில் வந்துள்ளன அவ்வாறு வந்த கதைகளில் ஒன்றை தான் கீழே பார்க்கிறீர்கள்.

வேறு கிரகத்தில் இருந்து நமது பூமியை பிடிக்க வருகிறது ஒரு கூட்டம் முதலில் இங்கு வாழ்பவர்களை பிடித்து ஆராய்ந்து விட்டு அதன் படி நடக்க முயற்சி செய்கின்றனர்.

அவர்களிடமிருந்து பூமியை எப்படி நமது கதாபாத்திரங்கள் காப்பாற்றினார்கள் என்பதை படித்து பாருங்கள்.

இக்கதையில் எனக்கு மிகவும் பிடித்த சிரிப்பை வரவழைக்கும் ஒரு காட்சி சுப்பாண்டியையும் முயல் கீச்சுவையும் பிடித்து மூளை தரிசனி மூலம் சோதனை செய்யும் பொழுது முயலுக்கு சுப்பண்டியை விட மூளை அதிகம் என்று கண்டுபிடிப்பார்கள்.














அடுத்தது மற்றும் ஒரு எதார்த்தமான அப்பாவி பரமு என்ற கிராமத்து கதாபாத்திரம். இக்கதாபாத்திரம் எனக்கு பிடித்ததற்கு மேலும் ஒரு காரணம்
அவர்கள வாழ்வதாக கூறப்படும் தாராபுரம் என்ற கிராமம் பழனிக்கு மிக அருகில் இருக்கும் ஊர் மேலும் அந்த கிராமத்தின் அருகே தான் எனது பெரியம்மா வீடு வேறு இருக்கும். ஆகையால் இக்கதை படிக்கும் பொழுது ஏதோ எங்கள் ஊரை பற்றி படிப்பதை போன்ற ஒரு உணர்வு வரும்.

எப்படி நமது பரமு தபால்காரர் ஆகி காண்டாமிருகத்திற்கு மணி கட்டிய வீரர் ஆகிறார் என்று படித்து பாருங்கள்.








பொறுமையாக படித்தற்கு நன்றி.உங்கள் கருத்துக்களை கீழே உள்ள பெட்டியில் தெரியப்படுத்துங்கள்.

இதற்கு முன் வந்த முதல் மற்றும் இரண்டாவது பூந்தளிர் கதைகளை படிக்க க்ளிக் செய்யவும்.

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .

கிருஷ்ணா வ வெ. 

Tuesday, April 2, 2013

பூந்தளிர் கதைகள் : 2


வணக்கம் நண்பர்களே,

பூந்தளிர் கதைகளின் தொகுப்பில் எனது இரண்டாவது பதிவு.

முதல் பதிவை படிக்க க்ளிக் செய்யவும்.

இன்றைய தினம் புத்தக தினம். நாம் அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும் குழந்தைகளுக்கும் பழக்கப் படுத்தவேண்டும். அதற்கு ஒரு சிறந்த வழியாக பூந்தளிர் இருக்கும்.

பூந்தளிர் பெரும்பாலும் ஆனந்த் பை அவர்களின் கதைகளையே கொண்டிருக்கும். மேலும் சில வாண்டுமாமா அவர்களின் தொடர்கதைகளும் இருக்கும்.


தேவியின் அருள் :

முதல் கதை தேவியின் அருள். சந்திராபூர் என்ற நாட்டில் சயான்பூர் என்ற சோம்பேறிகள் நிறைந்த கிராமம் இருக்கிறது. மன்னர் அந்த சோம்பேறிகளை சுறுசுறுப்பு ஆக்குவபவர்களுக்கு பரிசு என்று அறிவிக்கிறார்.

உடனே லக்ஷ்மன் என்ற நிதி அதிகாரி அந்த சவாலை ஏற்று எவ்வாறு  அவர்களை சுறுசுறுப்பு ஆக்குகிறார் என்பதே கதை.




கபீஷ் :

இரண்டாவது கதை கபீஷினுடயது. தோப்பையா ஒரு தம்பதியினருடன் மான் பிந்துவை பிடிக்க வருகிறான். ஆனால் கபீஷ் அதனை எச்சரிக்க, அது தப்பி விடுகிறது.

அதே போல அங்கு வரும் யானை கூட்டத்தையும் கபீஷ் தனது தந்திரத்தால் காப்பாற்றுகிறது.



வேட்டை கார வேம்பு :

வழக்கம் போல தனது அதிர்ஷ்டத்தால் ஒரு மிருக காட்சி சாலைக்கு மலை பாம்பு ஒன்றை பிடித்து தருகிறார்.

மந்திரியின் தந்திரம் :

மந்திரி ஒரு கொசு அடிக்கும் குரங்கு மூலம் ராஜாவை மயக்க வைத்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். வழக்கம் போல அது அவர் தலையிலேயே வந்து விடிகிறது.



இப்பதிவின் புகைப்படங்களை நமக்காக மேம்படுத்திக் கொடுத்ததற்கு நண்பர் சௌந்தர் அவர்களுக்கு நன்றி.

 இந்த பதிவு உங்களையும் உங்கள் வீட்டு சுட்டிகளையும் சந்தோஷப் படித்தினால் மகிழ்வேன்.

அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வே.