லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனும் லயன் காமிக்ஸும்

லண்டனும் லயன் காமிக்ஸும்

Memories (2013) - Malayalam Movie Review

Memories (2013) - Malayalam Movie Review

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

Tuesday, April 16, 2013

புஷ்பா தங்கதுரை & ராஜேந்திரகுமார் நாவல்கள்

வணக்கம் நண்பர்களே,

எனது நாவல்கள் தொகுப்பின் வரிசையில் இந்த பதிவில் என்னிடம் இருக்கும் புஷ்பா தங்கதுரை மற்றும் ராஜேந்திரகுமார் அவர்களின் நாவல்களின் ஒரு சில அட்டை படங்கள் உங்கள் பார்வைக்கு.

புஷ்பா தங்கதுரை யின் கதைகள் பெரும்பாலும் ஊதாப்பு என்ற புத்தகத்திலேயே வந்துள்ளன. அவரது கதைகளில் பெரும்பாலும் சிங் என்ற இன்ஸ்பெக்டர் வருவார், மற்றும் கட்டாயம் ஒரு கிளுகிளுப்பு காட்சி இருக்கும்.

கதைகளில் வரும் பெயர்களும் பழங்கால பெயர்களாக இருக்கும்.

அவர் க்ரைம் தவிர பிற வகைகளிலும் கதைகள் எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக சிறுவர்கள் துப்பறியும் கதைகள் லிட்டில் புஷ்பா என்ற புத்தகத்தில் வந்துள்ளன. மொத்தமாக எவ்வளவு வந்துள்ளன என்று தெரியவில்லை ஆனால் வந்த முதல் புத்தகத்தின் அட்டைபடம் கீழே.

அது தவிர ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரில் இறை சார்ந்த கதைகளும் எழுதிஉள்ளார். அதில் மிகவும் புகழ் வாய்ந்த கதை திருவரங்கன் உலா. நான் படித்ததில்லை ஆனால் கதையில் ஒரு திருமால் சிலை பல ஊர்கள் பயணம் செய்யும்.

சிறுவர்களுக்கான கதை 

ராணி முத்துவில் வந்த கதைகள்

அவரது புகைப்படம்

ஊதாப்பூ 


ஊதாப்பூ 


மொத்த புத்தகங்கள் 

பிற புத்தகங்களில் வந்த கதைகள் 
ராணி முத்துவில் எனக்கு தெரிந்து எழுதாத எழுத்தாளர்களே இல்லை எனலாம். ஆனால் அவர்கள் பெரிய சாண்டில்யன் கதைகளை எடிட் செய்து வெளியிட்டது பெரிய கொடுமையாக இருக்கும். கதையே புரியாது.

ராணி முத்துவில் வந்த சில அறிய கதைகள் 


அதே போல ஆவி அமானுஷ்யம் சார்ந்த கதைகள் எழுதுவதில் வல்லவர் ராஜேந்திரகுமார். அவரது துப்பறியும் கதைகளில் பெரும்பாலும் ராஜா ஜென்னி என்ற ஜோடி இருக்கும். அவர்களே துப்பு துலக்குவார்கள்.

எனது முன்னைய பதிவில் கூறி இருந்தது போல அவரது கதைகள் கோஸ்ட் என்ற புத்தகத்தில் தொடர்ந்து வந்தன.






ராணி முத்துவில் வந்த கதைகள் 
பாக்கெட் நாவலில் வந்த சில அறிய கதைகள்.



அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ .

Tuesday, April 2, 2013

பூந்தளிர் கதைகள் : 2


வணக்கம் நண்பர்களே,

பூந்தளிர் கதைகளின் தொகுப்பில் எனது இரண்டாவது பதிவு.

முதல் பதிவை படிக்க க்ளிக் செய்யவும்.

இன்றைய தினம் புத்தக தினம். நாம் அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும் குழந்தைகளுக்கும் பழக்கப் படுத்தவேண்டும். அதற்கு ஒரு சிறந்த வழியாக பூந்தளிர் இருக்கும்.

பூந்தளிர் பெரும்பாலும் ஆனந்த் பை அவர்களின் கதைகளையே கொண்டிருக்கும். மேலும் சில வாண்டுமாமா அவர்களின் தொடர்கதைகளும் இருக்கும்.


தேவியின் அருள் :

முதல் கதை தேவியின் அருள். சந்திராபூர் என்ற நாட்டில் சயான்பூர் என்ற சோம்பேறிகள் நிறைந்த கிராமம் இருக்கிறது. மன்னர் அந்த சோம்பேறிகளை சுறுசுறுப்பு ஆக்குவபவர்களுக்கு பரிசு என்று அறிவிக்கிறார்.

உடனே லக்ஷ்மன் என்ற நிதி அதிகாரி அந்த சவாலை ஏற்று எவ்வாறு  அவர்களை சுறுசுறுப்பு ஆக்குகிறார் என்பதே கதை.




கபீஷ் :

இரண்டாவது கதை கபீஷினுடயது. தோப்பையா ஒரு தம்பதியினருடன் மான் பிந்துவை பிடிக்க வருகிறான். ஆனால் கபீஷ் அதனை எச்சரிக்க, அது தப்பி விடுகிறது.

அதே போல அங்கு வரும் யானை கூட்டத்தையும் கபீஷ் தனது தந்திரத்தால் காப்பாற்றுகிறது.



வேட்டை கார வேம்பு :

வழக்கம் போல தனது அதிர்ஷ்டத்தால் ஒரு மிருக காட்சி சாலைக்கு மலை பாம்பு ஒன்றை பிடித்து தருகிறார்.

மந்திரியின் தந்திரம் :

மந்திரி ஒரு கொசு அடிக்கும் குரங்கு மூலம் ராஜாவை மயக்க வைத்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். வழக்கம் போல அது அவர் தலையிலேயே வந்து விடிகிறது.



இப்பதிவின் புகைப்படங்களை நமக்காக மேம்படுத்திக் கொடுத்ததற்கு நண்பர் சௌந்தர் அவர்களுக்கு நன்றி.

 இந்த பதிவு உங்களையும் உங்கள் வீட்டு சுட்டிகளையும் சந்தோஷப் படித்தினால் மகிழ்வேன்.

அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வே.