லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனும் லயன் காமிக்ஸும்

லண்டனும் லயன் காமிக்ஸும்

Memories (2013) - Malayalam Movie Review

Memories (2013) - Malayalam Movie Review

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

Wednesday, December 25, 2013

Briyani vs Endrendrum Punnagai - திரைவிமர்சனம்

வணக்கம் நண்பர்களே,

சமீபமாக தியேட்டருக்கு சென்று படம் பார்க்கவே முடிவதில்லை. சென்ற மாதம் முழுவதும் அனைத்து வாரங்களும் பிரயாணம் செல்ல வேண்டி இருந்தது.

பின் அப்பாடா என்று Gravity படம் புக் செய்தால் ஆபிசில் ஒரு பிரச்சனை வந்து வார இறுதியை அங்கேயே கழிக்க வேண்டி ஆகிவிட்டது.

இப்படி நான் தவற விட்ட படங்கள் பல. இறுதியில் ஒரு வழியாக தியேட்டருக்கு சென்று பார்த்துவிட்டேன்.அதுவும் ஒன்றல்ல இரண்டு படங்கள்.நேற்று இரவு என்றென்றும் புன்னகை இன்று மதியம் பிரியாணி.அதிஷ்டவசமாக இரண்டு படங்களுமே ஏமாற்றவில்லை.

நான் பொதுவாக படங்களின் விமர்சனங்களை Sify வலைப்பூவில் பார்ப்பது வழக்கம்.படம் வெளியான அன்றே பிரியாணி படம் படு மொக்கை என்ற அளவு விமர்சித்திருந்தனர்.அதுவும் இல்லாமல் நான் கேள்விபட்ட  செய்தி வேறு நினைவுக்கு வந்தது.

தீபாவளி சமயத்தில் வெளிவந்த ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் கடந்த வாரம் வெளிவந்த பிரியாணி இரண்டுமே ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் திரைப்படங்கள். தீபாவளிக்கு முன்பே இரண்டு படங்களுமே தயாறகிவிட்டன என்றும் திரைப்படங்களை போட்டு பார்த்துவிட்டு இரண்டில் அழகுராஜா நன்றாக இருக்கிறது என்று முடிவு செய்து தீபாவளிக்கு தலையின் ஆரம்பம் படத்தின் போட்டியாக வெளியிட்டனர் என்றும் கேள்விப்பட்டேன்.

அழகுராஜாவின் முடிவு அனைவரும் அறிந்ததே, இரண்டில் நன்றாக உள்ளது என்று தேர்வு செய்த படத்தின் நிலையே அப்படி என்றால் நிராகரிக்கப்பட்ட படம் எப்படி இருக்கும் என்ற பயம் இருந்தது.அதற்கு தகுந்தது போலவே Sify வலைப்பூவின் விமர்சனமும் இருந்தது.

இந்த நிலையில் நம்பிக்கையூட்டும் விதமாக வந்தது நண்பர் ராஜின் இந்த பதிவு. அது தான் பிரியாணி நன்றாக இருக்கிறது என்று முதலில் எனக்கு கூறியது.

இனி இரண்டு படங்களை பற்றிய எனது கருத்து.

என்றென்றும் புன்னகை :




கதை :


தனது தாய் சிறுவயதில் வேறு ஒருவருடன் சென்றதை அடுத்து பெண்கள் என்றாலே ஒரு வெறுப்புடன் வளரும் ஜீவா.அதனை மறக்க தந்தை நாசருடன் சென்னை வரும் ஜீவாவிற்கு பள்ளியில் வினய் மற்றும் சந்தானம் அறிமுகமாகிறார்கள்.

அதில் இருந்து மூவரும் ஒன்றாகவே வளருகிறார்கள்.தூங்குவது தண்ணி அடிப்பது சண்டை போடுவது எல்லாமே ஜீவாவின் வீட்டில் தான்.



இதற்கிடையில் ஒரு காரணத்திற்காக ஜீவா தனது தந்தையுடன் 15 வருடங்களாக பேசாமல் இருக்கிறார்.

மூவரின் ஒரே கொள்கை வாழ்வில் மூவருமே கல்யாணம் செய்துகொள்ளாமல் இருப்பது எனபது தான், சந்தானத்தின் வார்த்தையில் மூவரும் மொட்டை பசங்களாக இருக்க முடிவு செய்கிறார்கள்.

மூவரும் சேர்ந்து ஒரு விளமபர நிறுவனம் நடத்துகிறார்கள்.அப்பொழுது மற்றொரு நிறவனத்தின் மூலம் இவர்களுக்கு அறிமுகமாகிறார் திரிஷா.சும்மா சொல்ல கூடாது இப்படத்தில் அழகாகவே இருக்கிறார்.

அவர்களது விளம்பரத்தில் நடிக்க வரும் மாடல் ஆண்ட்ரியா ஜீவா மேல் மோகம் கொள்கிறார்.அவரை அடித்து அவமானப் படுத்துகிறார் ஜீவா.

இந்த இடத்தில் ஆன்டிரியா வினயை மயக்கி கல்யாணம் செய்து நண்பர்களை பிரிப்பார் என்று நினைத்த எனது நினைப்பில் டைரெக்டர் மண்ணை அள்ளிப்போட்டு விட்டார்.

அடுத்து திடீரென நண்பர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டு ஜீவாவை தனிமை படுத்திவிடுகின்றனர்.

இடைப்பட்ட நேரத்தில் திரிசாவுடனான நட்பு வளருகிறது.அது காதலாக மலரும் நேரத்தில் தனது ஈகோ வினால் காதலை இழந்துவிடுகிறார்.



இறுதியில் தனது ஈகோ வை விட்டு தனது தந்தை நண்பர்கள் மற்றும் காதலியுடன் சேர்ந்தாரா எனபது இறுதிக்கதை.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது :


தேவையில்லாத திருப்பங்கள் எதுவும் இல்லாமல் ஒரு தெளிந்த நீரோடை போல செல்கின்றது.

தேவையில்லாத சண்டைகள் இல்லாதது.

பாடல்கள் ஓகே ரகம் இடைவெளிக்கு பின்பு வந்த இரண்டு பாடல்கள் மிகவும் நன்றாக இருந்தது.

கேமரா மிகவும் அருமை, எடுக்கப்பட்ட லொகேசன்களும் கண்ணுக்கு குளிர்ச்சியாக நன்றாக இருக்க படத்திற்கே ஒரு ரிச் பீலிங் வந்துவிடுகிறது.

படத்தில் நடித்தவர்கள் அனைவரின் நடிப்பு. முக்கிய மற்றும் துணை நடிகர்கள் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர்.ஜீவா,வினய் மற்றும் சந்தானம் ஆகிய மூவரின் நட்புமே ரியலாக தெரிந்தது படத்தின் பெரிய பிளஸ்.

காமெடி நன்றாகவே இருந்தது.முதல் பாதி முழுவதுமே படத்தை தூக்கி நிறுத்துவது சந்தானத்தின் கவுன்டர்கள் தான்.

இனி பிடிக்காதது :


அதிகம் இல்லை இருந்தாலும் ஒரு சில மட்டும்.

ஒரு பீல் குட் பிலிம் ஆக  இருந்தாலும் சந்தானத்தின் காமெடியில் அதிக இரட்டை அர்த்த வசனங்கள் இருந்ததை தவிர்த்து இருக்கலாம்.

படத்தின் இறுதிக்காட்சிகள் அழத்தம் இல்லாதது போல தோன்றியது.
அதுவும் ஜீவா நண்பரின் முன்னால் திரிஷாவை தெரியாது என்பதற்கு போதிய காரணம் இல்லை தாராளமாக எனது நிறுவனத்தில் வேலை பார்கிறார்கள் என்று கூறி இருக்கலாம்.அதுவும் முத்தம் கொடுக்கும் அளவிற்கு போன பின்பு.





அடுத்து தனது அப்பா புற்றுநோயால் இறக்க போகிறார் என்று தெரிந்து வெளியே வந்து நின்றுகொண்டு வினயிடம் பேசும் இடத்தில நடிப்பே வரவில்லை.

மற்றும் இறுதிக்காட்சியில் இப்படி ஒரு மொக்கையாக I Love You சொல்லி  நான் எந்தப்படத்திலும் பார்த்ததில்லை ,அதிலும் கொடுமை அந்த மொக்கை லவ் யூ வை கேட்டு திரிஷா மயங்குவது.

இறுதியாக நம்ம அபினவ் வை வழக்கம் போல தியாக செம்மலாக பயன்படுத்தியது.அதுதான்பா ஹீரோயின் ஹீரோவை காதலிப்பது தெரிந்தும் அவரை காதலிப்பது ஹீரோ ஹீரோயினிர்க்கு இடையில் சண்டை வரும்பொழுது வந்து அவளை கல்யாணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்வது இறுதியில் மீண்டும் அவர்கள் சேரும் பொழுது விட்டுக்கொடுத்துவிடுவது.

இதனை தவிர்த்திருக்கலாம்.மொத்தத்தில் படம் கண்டிப்பாக பார்க்கலாம் நன்றாக இருக்கிறது.

பிரியாணி :




கதை :


நாம் பல திரைப்படங்களில் பார்த்த கரு தான்.இரவில் மப்பாகி காலையில் எழும் பொழுது இரவில் நடந்தது எதுவும் தெரியாமல் ஒரு பெரிய பிரச்னையில் மாட்டிக்கொள்வது.பின் அதில் இருந்து தப்பிப்பது. படத்தில் ஒரு காட்சியில் பிரேம்ஜி ஹாங்கோவர் படத்தை கிண்டல் செய்வார். இப்படத்தின் கருவும் அத்திரைப்படங்களில் இருந்து எடுத்ததே.

கார்த்திக்கும் பிரேம்ஜியும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். பிரேம்ஜி ஆசைபடும் பெண்கள் அனைவரையும் தனக்கு கணக்கு செய்து கொள்ளும் அளவிற்கு இருவரும் மிக நண்பர்கள்.

கார்த்தியின் காதலி ஹன்ஷிகா திரைப்படங்களின் வழக்கமான காதலி, ஹீரோ செய்யும் தவறுகளை எல்லாம் மன்னித்து அவரையே காதல் செய்யும் காதலி.

இனி வரும் காலங்களிலாவது ஹீரோயின் ப்ளே கேர்ள் ஆகவும் அவளை மட்டுமே காதலிக்கும் ஹீரோவும் இருக்குமாறு ஒரு படம் வேண்டும்.அப்பொழுதுதான் நம்ம நாடு வல்லரசு ஆகும்.



நண்பர்கள் இருவரும் மகிந்திரா ட்ராக்டர்கள் ஷோரூமில் வேலை செய்கிறார்கள்.அதன் மேனேஜர் சுப்புவிற்கு தனது அக்காவை கல்யாணம் செய்து கொடுக்க கார்த்தி முடிவு செய்கிறார்.அக்கா கதாபாத்திரத்தில் நம்ம மதுமிதா (அதற்குள்ளாகவே அக்கா கதாபத்திரத்தில் நடிக்க வந்துவிட்டார் பாவம்).

அவர்களின் புது ஷோரூம் ஆம்பூரில் திறக்க முடிவுசெய்கிறார்கள். அதனை திறந்து வைக்க பிரபல தொழிலதிபர் நாசரை கூப்பிடுகிறார்கள். அவரது மருமகன் நம்ம ராம்கி. அவர்களது குடும்ப நண்பர் ஜெயப்ரகாஷ் Asst கமிஷ்னர்.

ராம்கிக்கு தனது மாமா நாசரின் இடத்திற்கு வர ஆசை. நமக்கும் பார்த்தவுடன் இவர் தான் வில்லனாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இதன் திறப்புவிழாவிற்கு வரும்பொழுது நண்பர்கள் இருவரும் தப்பி செல்லும் காதல் ஜோடியை தடுத்து பெண்ணை காப்பாற்றுகிறார்கள்.

திறப்புவிழாவில் கார்த்தியின் பேச்சு நாசருக்கு பிடித்துவிடுகிறது. அவருக்கு தனது இரண்டாவது பெண்ணை கொடுக்கும் அளவிற்கு நாசர் முடிவுசெய்கிறார். இது ராம்கிக்கு பிடிக்கவில்லை.

திறப்புவிழா முடிந்து நண்பர்கள் இருவரும் சென்னை திரும்பும்வழியில் பிரியாணி சாப்பிட ஒருகடையில் நிறுத்துகிறார்கள்.அங்கு வரும் Mandy Takharஐ பார்கிறார்கள்.




அவள் இவர்களை தனது ஹோட்டலிற்கு கூப்பிட்டு வந்து தண்ணி கொடுத்து ஒரு ஆட்டம் போட்டு காண்பிக்கிறார். அப்பொழுது அங்கு நாசர் வருகிறார். அத்துடன் நண்பர்கள் மப்பில் மயக்கம் அடைகிறார்கள்.



காலையில் எழுந்ததும் தான் நாசர் காணாமல் போக இவர்களை போலீஸ் தேடுவது தெரிகிறது. இதற்கிடையில் நாசரை ஒரு குற்றவிசாரணைக்கு கைது செய்ய வரும் சிபிஐ அதிகாரியாக சம்பத்.

இப்படியாக ஜெயப்ரகாஷ் போலீஸ் கூட்டம் ஒருப்பக்கமும் சம்பத் மூலம் அவரது நண்பர் பிரேம் போலீஸ் கூட்டம் ஒரு பக்கமும் அவர்களை துரத்துகிறது.

கடைசியில் எப்படி தப்பித்து உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள் எனபது மீதிக்கதை.

எனக்கு பிடித்தது :


ஒரு சஸ்பென்ஸ் திரைப்படத்தின் வெற்றி அதன் இறுதிக்காட்சி திருப்புமுனையில் தான் இருக்கிறது, அந்த வகையில் இப்படம் வெகுவாக ஸ்கோர் செய்கிறது. அவ்வகையான காட்சி வைப்பதில் வெங்கட் திறமைசாலிதான்.

ஒரு ப்ளே பாய் கதையாக இருந்தாலும்  Mandy Takhar வரும் காட்சி தவிர வேறு காட்சிகளில் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை.

கண்டிப்பாக வெங்கட்டின் திரைக்கதை. எந்த ஒரு இடத்திலும் போர் அடிக்காமல் கொண்டு செல்கிறார்.

நகைச்சுவை காட்சிகள் பரவாயில்லை, ஓரளவு சிரிப்பை வரவழைக்கின்றன.

உமா ரியாஸின் சிறு கதாபாத்திரத்தில் நன்றாக இருக்கிறது. அவருக்கு பல சண்டை காட்சிகள், பாவம் நம்ம சாம் ஆண்டெர்சனுக்கு தான் சண்டை காட்சி இல்லை.

வெங்கட்டின் மற்றொரு பிளஸ் அவரது சென்னை 28 டீமை நன்றாக பயன்படுத்துவது. இதிலும் தலை பெயரை சரியான இடத்தில் அவர்களை வைத்து பயன்படுத்தி இருப்பார்.

இறுதியில் பெயர்போடும் சமயத்திலும் நம்மை உட்கார வைக்கும் வெங்கட்டின் கட் சாட்டுகள் அருமை.

பிடிக்காதது :


யுவனின் இசை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.அதுவும் 100வது படம்.Better Luck Next  Time யுவன்.

இறுதிக்காட்சியில் வரும் நீண்ட சண்டை காட்சிகள், கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

அதிகமான லாஜிக் மீறல்கள்,24 மணிநேரமும் ரெகார்ட் செய்யும் CCTV யில் பிரேம் delete செய்த பதிவுகளை தேடாதது.பல நாள் பிரேதமாக இருந்த நாசரை இறுதியில் தான் இறந்ததாக போலீஸ் நம்புவது.

கார்த்தி கொஞ்சம் டான்ஸ் ஆட கற்றுக்கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்த கார்த்திக்கு கிடைத்த சிறு வெற்றி.

கார்த்தி எல்லா படங்களிலும் ஒரே மாதிரி வருவது சற்றே போர் அடிக்கிறது.கொஞ்சம் எதாவது வித்தியாசமாக முயர்சி செய்யலாம்.

இரண்டு படங்களுமே வெவ்வேறு வகையை சேர்ந்தது, இரண்டுமே நன்றாக இருக்கிறது. நண்பர்கள் தையிரியமாக சென்று பார்க்கலாம்.

அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.

Friday, October 18, 2013

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection - Part 4


வணக்கம் நண்பர்களே,

நெடுநாட்களாக எனது டிராப்டில் இருந்த பதிவிற்கு உயிர் கொடுத்துள்ளேன்.

முன்பு  போல அதிக பதிவுகள் இட முடிவதில்லை.

காரணங்கள் பல...பணி இடத்தில் மாற்றம்,திருமண வாழ்வின் மாற்றம், மற்றும் காமிக்ஸ் பதிவுகள் இட சற்றே சோம்பேறித்தனம்..என பல.

நண்பர்கள் மற்றும் ஆசிரியரின் பதிவுகளுக்கு ஒரு பதில் இடுவதே கடினமாக உள்ளது.

ஆகையால் இந்த சிறிய பதிவு, காமிக்ஸ் புதையல் வரிசையில் 20 ஆவது பதிவு.

நெடுங்காலமாக ருபாய் இரண்டாக இருந்த ராணி காமிக்ஸ் சிறிது காலம் 2.50 ஆகவும் பிறகு 3 ரூபாயாக வும் மாறியது.

வழக்கம் போல மாயாவியை பெரிதும் சார்ந்திருந்தது. சில மறுபதிப்புகள் கூட வந்தன - ரத்தக்காட்டேரி.

இக்கால கட்டத்தின் முடிவில் பல இந்திய தயாரிப்புகளும் வந்தன.

கதைகள் அவ்வளவாக நினைவில் இல்லை.

இரும்புக்கை மனிதன் - முதன் முதலில் 2.50 ஆக வந்த புத்தகம்.

கொலைகாரன் பேட்டை : ஒரு மொட்டை வில்லனின் கூட்டம் இருக்கும் கோட்டைக்கு சென்று துவம்சம் செய்வார் மாயாவி.

தீயில் எறியும் பெண் : சற்றே வித்தியாசமான கதை. ஒரு பழமையான கூட்டம் மாயவிக்கே தெரியாமல் இருக்கும்.அதன் தலைவர் ஒரு அரசி என நினைக்கிறேன் 

மர்ம கடிதம் : பெங்காலியா முதல்வரிர் க்கு வரும் மிரட்டல் சம்பந்தப்பட்ட கதை என நினைவு.

மர்ம கும்பல் : ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலை மாயாவி அழிப்பார்.






ஒரு போலி குரங்கின் கொட்டத்தை அடக்குவார் மாயாவி இன் கொலைகார குரங்கு.

எனக்கு கரும்புலியின் கதைகள் பிடிக்கும்.

நான் சிறு வயதில் ஒரு ஆங்கில நாடகம் பார்த்த நினைவு ஒரு மனிதன் கரும்புலியாக மாறும் சக்தி படைத்தவனாக இருப்பான் .

எதில் பார்த்தேன் என்று தெரியவில்லை.


புலி பெண் மறுபதிப்பு , தில்லானின் நாயை தேடி.

தொர்கலின் வீரச்சிறுவன்.

இந்திய தயாரிப்பு ஜடாயுவின் கழுகு மனிதன் .


இந்திய தயாரிப்பு ரீட்டா வின் வெடி குண்டு கும்பல்.

முதல் முறையாக மாயாவியால் பழக்க முடியாத கருஞ்சிறுத்தை கதை.ரத்தம் குடிக்கும் சிறுத்தை.

இதுவரை கதை என்னவென்றே புரியாத ரகசிய சாவி.



ஒரு குழந்தை வாரிசை அதனை கொல்ல வருபவர்களுடம் இருந்து காப்பாற்றுவார் மாயாவி. - யார் அந்த சிறுவன்.

கோவிலை கொள்ளை அடிபவர்களை துவம்சம் செய்யும் கரும்புலி.




comanche யின் கில்லாடி வீரன்.



ரத்தக் காட்டேரி எனக்கு மிகவும் பிடித்த கதை கடைசி வரை ஒரு சஸ்பென்ஸ் இருக்கும்.

ஆனால் மாயாவியின் போலிக்கடிதம்,ரவுடி ராஜா ஆகிய கதைகள் மாயாவியின் சித்திரத்துக்காகவே பிடிக்காது.

மாயாவி என்றாலே கம்பீரத்துடன் தோன்றுவது தான் பிடிக்கும்.

தங்கள் நினைவில் தோன்றுவதையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.

ராணி காமிக்ஸ் பற்றிய எனது முந்தய பதிவுகளை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.


Sunday, August 4, 2013

பூந்தளிர் கதைகள் : 3 - சார்லி மாமா & தபால்கார பரமு


வணக்கம் நண்பர்களே,

மீண்டும் ஒரு பூந்தளிர் கதைகளின் தொகுப்புகளுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.

நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

இப்புத்தகமும் நமது வாண்டுமாமா அவர்கள் ஆசிரியராக இருந்த பொழுது வந்ததே.

இப்புத்தகம் எனக்கு மிகவும் விருப்பமான கதைகளை கொண்டு உள்ளது.

இப்புத்தகம் கிறிஸ்மஸ் இதழாக வந்ததால் இயேசு குறித்து அவரது உரை கீழே.



பூந்தளிர் கதாபாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் சார்லி மாமா.
இவர் indianised vesrion of சார்லி சாப்ளின்.ஐவரும் கோட் போட்டிருப்பார் ஆனால் கீழே பஞ்சகட்சம் வைத்து வேஷ்டி கட்டிருப்பார்.

இக்கதையில் காசுகொடுத்து  பறவைகளை வாங்கி திறந்து விடுகிறார். அவைகளில் ஒரு   கிளிக்கு மட்டும் பறக்க முடியவில்லை ஒரு முரடனிடம்  சிக்கி கொள்கிறது.அதனை அவனிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.





வாண்டுமாமாவின் படைப்புகள் அனைத்துமே சிறப்பானவை தான். அதில் எனக்கு மிகவும் பிடித்தது பாலு கதாபாத்திரமும், குஷிவாலி ஹரிஷும் தான்.

பாலுவை வைத்து பல கதைகள் அமைத்துள்ளார் பலே பாலு,பாலுவும் பாட்டில் பூதமும், மர்மமாளிகையில் பாலு மற்றும் பாலுவும் பறக்கும் டிராயரும் ஆகியவை.

எனக்கு வாண்டுமாமா மற்றும் செல்லம் ஆகியோரின் கூட்டணி  பிடிக்கும்
அதே போல செல்லத்தின் சித்திரங்களிலும் ஈர்ப்பு உண்டு.

இவர்களில் கூட்டணியில் வந்த பாலுவும் பறக்கும் டிராயரும் பூந்தளிரில் தொடர்கதையாக வந்தது.அதில் ஒரு அத்தியாயம் கீழே.

மனித பிரமிட் செய்வதற்கு பள்ளி விளையாட்டு ஆசிரியர் பயிற்சி அளித்துகொண்டிருக்க, பாலுவின் மனமோ அந்தகாலத்தில் பிரமிட் கட்டிய எகிப்தியர்களை பற்றி நினைக்க அவனது மந்திர டிராயர் அவனை அக்காலத்திற்கு தூக்கி செல்கிறது.

அங்கு அடிமைப்பட்டு பிரமிட் கட்ட கஷ்டப்படுபவர்களுடன் அவனும் மாட்டிக்கொள்கிறான். அங்கிருந்து சாகசம் செய்து அவர்களை காப்பாற்றுகிறான்.







பூந்தளிர் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதீசியம் உண்டு.
அவர்கள் அனைவரும் வருமாறு ஒரு கதை புனைவது பல நட்சத்திரங்களை கொண்டு எடுக்கும் MultiStarer மூவி போன்றது.

கதையில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கவேண்டும் அதேபோல அவர்களது இயல்பும் வெளிப்பட வேண்டும்.

அவ்வாறு சில கதைகள் சிறப்பு இதழ்களில் வந்துள்ளன அவ்வாறு வந்த கதைகளில் ஒன்றை தான் கீழே பார்க்கிறீர்கள்.

வேறு கிரகத்தில் இருந்து நமது பூமியை பிடிக்க வருகிறது ஒரு கூட்டம் முதலில் இங்கு வாழ்பவர்களை பிடித்து ஆராய்ந்து விட்டு அதன் படி நடக்க முயற்சி செய்கின்றனர்.

அவர்களிடமிருந்து பூமியை எப்படி நமது கதாபாத்திரங்கள் காப்பாற்றினார்கள் என்பதை படித்து பாருங்கள்.

இக்கதையில் எனக்கு மிகவும் பிடித்த சிரிப்பை வரவழைக்கும் ஒரு காட்சி சுப்பாண்டியையும் முயல் கீச்சுவையும் பிடித்து மூளை தரிசனி மூலம் சோதனை செய்யும் பொழுது முயலுக்கு சுப்பண்டியை விட மூளை அதிகம் என்று கண்டுபிடிப்பார்கள்.














அடுத்தது மற்றும் ஒரு எதார்த்தமான அப்பாவி பரமு என்ற கிராமத்து கதாபாத்திரம். இக்கதாபாத்திரம் எனக்கு பிடித்ததற்கு மேலும் ஒரு காரணம்
அவர்கள வாழ்வதாக கூறப்படும் தாராபுரம் என்ற கிராமம் பழனிக்கு மிக அருகில் இருக்கும் ஊர் மேலும் அந்த கிராமத்தின் அருகே தான் எனது பெரியம்மா வீடு வேறு இருக்கும். ஆகையால் இக்கதை படிக்கும் பொழுது ஏதோ எங்கள் ஊரை பற்றி படிப்பதை போன்ற ஒரு உணர்வு வரும்.

எப்படி நமது பரமு தபால்காரர் ஆகி காண்டாமிருகத்திற்கு மணி கட்டிய வீரர் ஆகிறார் என்று படித்து பாருங்கள்.








பொறுமையாக படித்தற்கு நன்றி.உங்கள் கருத்துக்களை கீழே உள்ள பெட்டியில் தெரியப்படுத்துங்கள்.

இதற்கு முன் வந்த முதல் மற்றும் இரண்டாவது பூந்தளிர் கதைகளை படிக்க க்ளிக் செய்யவும்.

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .

கிருஷ்ணா வ வெ. 

Tuesday, July 23, 2013

ஸ்பைடர் vs பாட்டில் பூதம் Lion Comics No : 83

வணக்கம் நண்பர்களே,

அலுவலக பணி காரணமாக முன்பு போல இணையத்தில் அதிக நேரம் செலவு செய்ய முடிவதில்லை.

கிடைத்த நேரத்தில் மீண்டும் ஒரு காமிக்ஸ் பதிவு.

இப்பதிவில் எனக்கு மிகவும் பிடித்த லயனின் 83வது இதழாக வந்த பாட்டில் பூதத்தை பற்றி பார்க்க போகிறோம்.

சிறுவயதில் டெக்ஸ் அடுத்து எனக்கு மிகவும் பிடித்தது ஸ்பைடர் தான்.

ஸ்பைடர் கதைகளில் மிகவும் பிடித்தது.

1. பழிவாங்கும் பொம்மை
2. பாட்டில் பூதம்
3. சைத்தான் விஞ்ஞானி 
4. நீதிக்காவலன் ஸ்பைடர் 
5. சதுரங்க வெறியன்
6. தவளை எதிரி 

பின் மற்றவை.

ஸ்பைடரிடம் இருக்கும் வலைதுப்பாக்கியும்  வாயுதுப்பாக்கியும் இல்லை என்று பல நாள் ஏங்கியது உண்டு.

சமீபத்தில் நண்பர் ரமேஷ் ஆங்கிலத்தில் வந்த லயன் ஆங்கில வார இதழ்கள் தரவிறக்கம் செய்ய சுட்டிகள் கொடுத்திருந்தார்.

அதனை தரவிறக்கம் செய்து பார்த்த பொழுது அதில் பல ஸ்பைடர் கதைகள் இருந்தன அவைகள் 

1. Spider vs The Crook from Outer Space (விண்வெளி பிசாசு)
2. Spider vs The Crime Genie (பாட்டில் பூதம்)
3  Spider vs Spider Boy (யார் அந்த மினி ஸ்பைடர்)
4. Spider vs Andriod Emperor (கொலை படை)
5. Spider vs Exterminator (நீதிக்காவலன் ஸ்பைடர்)
6. Spider vs Sinister seven 
7. Spider vs snake

கடைசி இரண்டும் இன்னும் வரவில்லை.

அதனை பார்க்கும் பொழுது நான் தெரிந்து கொண்டது ஸ்பைடர் கதைகள் அனைத்துமே நாம் லயனில் பார்த்ததை விட காதில் பூ சுற்றுதல் மிக அதிகம் என்பதே.

விஜயன் அவர்கள் மிக கவனமாக கதையை சிதைக்கா வண்ணம் எடிட்டிங் செய்துள்ளார்.



நான் ஆங்கிலத்தில் தொடர்களாக வந்ததை ஒரு கதை புத்தகமாக தொகுத்துக்கொண்டு இருக்கிறேன்.

ஸ்பைடர் தவிர அதில்  ஆர்ச்சியும் அதிகமாக இருக்கிறது.

இனி இப்பதிவின் புத்தகத்தின் கதைக்கு செல்லலாம்.

இக்கதை ஸ்பைடர் திருந்தி நீதிக்காவலனாக இருக்கும் பொழுது நிகழ்கிறது.

கதை :

ஒரு நாள் ஸ்பைடர் ஒரு கெட்ட கனவு காண்கிறான்.அதனை கண்டு ஏதோ கெட்டது சம்பவிக்க போகிறது என அறிந்து கொள்கிறான்.

அதே சமயம் சிறைசாலையில் இருக்கும் கர்கோ யென்னும் திருடன் கையில் ஒரு பாட்டில் கிடைகிறது.

அதினுள் ஒரு பூதம் இருக்கிறது.அதனை அவன் விடிவிக்க அந்த பூதம் அவன் எது சொன்னாலும் செய்யும் அவன் அடிமை என்று சொல்கிறது.

அதன் உதவியுடன் அவன் தப்பி செல்கிறான்.

செல்லும் வழியில் ஸ்பைடர் வழிமறித்து பூதத்துடன் சண்டை போடுகிறான்.
ஆனால் அவனை சமாளித்து பூதம் கர்கோவுடன் தப்பி செல்கிறது.







தமிழிற்கும் ஆங்கிலத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பாருங்கள் 




இதுபோல பல பக்கங்கள் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளன.

தப்பி செல்லும் கர்கோ தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பூதத்தின் உதவியுடன் ஒரு ராஜாவின் செல்வத்தை கொள்ளையடிக்க பார்கிறான் ஆனால் அவனை ஸ்பைடர் முறியடிக்கிறான்.

அடுத்து பூதத்தின் உதவியுடன் கர்கோ பெரிய உருவத்தையும் நெருப்பு கக்கும்
சக்தியையும் பெற்றுக்கொண்டு பூதத்தை தன உதவிக்கு வரகூடாது என்று கூறிவிட்டு தனித்து கொள்ளை அடிக்க செல்கிறான்.






ஆனால் அங்கு ஸ்பைடர் மற்றும் அவன் சகாக்களால் முறியடிக்கபடுகிறான்.
தனது பாதத்தை முத்தமிட்டால் தவிர தன்னால் அவனை ஸ்பைடரிடம் இருந்து காப்பாற்ற முடியாது என்று பூதம் சொல்ல கர்கோ கஷ்டப்பட்டு பூதத்தின் பாதத்தை முத்தமிடுகிறான் பின்னர் பூதம் அவனை காப்பாற்றுகிறது.





தனது இருப்பிடம் வந்ததும் மற்ற கூட்டாளிகளால் கேலிக்கு உள்ளாகிறான் கர்கோ. அதனால் அனைவரும் தூங்கியபின் பூதத்தை கொல்ல பார்க்கிறான்.
இதனை ஞான திருஷ்டியின்மூலம் அறியும் ஸ்பைடர் டெலிபதி மூலம் பூதத்தை எச்சரிக்கை செய்து அதனை காப்பாற்றுகிறான்.




தன்னை கொல்ல பார்த்த கர்கோவை போலீசிடம் மாட்டிவிட்டு யாரிடமும் தோற்காத ஸ்பைடரை ஒரு வாழைபழ தோல் வழுக்கி விழ வைத்து மருத்துவமனையில் சேர்த்துவிடுகிறான். (தலைக்கு வந்த சோதனை)



பின்னர் தனது கூட்டத்துடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபடுகிறான். அதனை கேளிவிப்பட்டு மருத்துவமனையில் இருந்து வரும் ஸ்பைடரை தன்னுடன் சேர்ந்துகொள்ள சொல்கிறான் அதற்கு மறுக்கும் ஸ்பைடரை பாவ தேசத்தில் விட்டு விடுகிறான்.






அங்கு இருக்கும் லானா என்ற ராணியால் தான் யார் என்பதை மறந்து அங்கு இருக்கிறான். ஒரு நாள் தொலைகாட்சியில் தனது சகாக்கள் பூதத்திடம் மாட்டிகொண்டு இருப்பதை பார்க்கும் ஸ்பைடர் தன் நினைவுகளை மீட்டு எடுத்து அங்கிருந்து தப்பி சென்று பூதத்தை முறியடித்து மீண்டும் அதனை பாட்டிலில் அடைக்கிறான்.















விரைவில் தமிழ் ஸ்கேன் பக்கங்களை அப்லோட் செய்கிறேன்.

உங்கள் கருத்துக்ககளையும் நினைவலைகளையும் கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இக்கதையின் ஆங்கில தொகுப்பை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வா வெ.