லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனும் லயன் காமிக்ஸும்

லண்டனும் லயன் காமிக்ஸும்

Memories (2013) - Malayalam Movie Review

Memories (2013) - Malayalam Movie Review

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

Showing posts with label Vaandumama. Show all posts
Showing posts with label Vaandumama. Show all posts

Sunday, August 4, 2013

பூந்தளிர் கதைகள் : 3 - சார்லி மாமா & தபால்கார பரமு


வணக்கம் நண்பர்களே,

மீண்டும் ஒரு பூந்தளிர் கதைகளின் தொகுப்புகளுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.

நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

இப்புத்தகமும் நமது வாண்டுமாமா அவர்கள் ஆசிரியராக இருந்த பொழுது வந்ததே.

இப்புத்தகம் எனக்கு மிகவும் விருப்பமான கதைகளை கொண்டு உள்ளது.

இப்புத்தகம் கிறிஸ்மஸ் இதழாக வந்ததால் இயேசு குறித்து அவரது உரை கீழே.



பூந்தளிர் கதாபாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் சார்லி மாமா.
இவர் indianised vesrion of சார்லி சாப்ளின்.ஐவரும் கோட் போட்டிருப்பார் ஆனால் கீழே பஞ்சகட்சம் வைத்து வேஷ்டி கட்டிருப்பார்.

இக்கதையில் காசுகொடுத்து  பறவைகளை வாங்கி திறந்து விடுகிறார். அவைகளில் ஒரு   கிளிக்கு மட்டும் பறக்க முடியவில்லை ஒரு முரடனிடம்  சிக்கி கொள்கிறது.அதனை அவனிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.





வாண்டுமாமாவின் படைப்புகள் அனைத்துமே சிறப்பானவை தான். அதில் எனக்கு மிகவும் பிடித்தது பாலு கதாபாத்திரமும், குஷிவாலி ஹரிஷும் தான்.

பாலுவை வைத்து பல கதைகள் அமைத்துள்ளார் பலே பாலு,பாலுவும் பாட்டில் பூதமும், மர்மமாளிகையில் பாலு மற்றும் பாலுவும் பறக்கும் டிராயரும் ஆகியவை.

எனக்கு வாண்டுமாமா மற்றும் செல்லம் ஆகியோரின் கூட்டணி  பிடிக்கும்
அதே போல செல்லத்தின் சித்திரங்களிலும் ஈர்ப்பு உண்டு.

இவர்களில் கூட்டணியில் வந்த பாலுவும் பறக்கும் டிராயரும் பூந்தளிரில் தொடர்கதையாக வந்தது.அதில் ஒரு அத்தியாயம் கீழே.

மனித பிரமிட் செய்வதற்கு பள்ளி விளையாட்டு ஆசிரியர் பயிற்சி அளித்துகொண்டிருக்க, பாலுவின் மனமோ அந்தகாலத்தில் பிரமிட் கட்டிய எகிப்தியர்களை பற்றி நினைக்க அவனது மந்திர டிராயர் அவனை அக்காலத்திற்கு தூக்கி செல்கிறது.

அங்கு அடிமைப்பட்டு பிரமிட் கட்ட கஷ்டப்படுபவர்களுடன் அவனும் மாட்டிக்கொள்கிறான். அங்கிருந்து சாகசம் செய்து அவர்களை காப்பாற்றுகிறான்.







பூந்தளிர் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதீசியம் உண்டு.
அவர்கள் அனைவரும் வருமாறு ஒரு கதை புனைவது பல நட்சத்திரங்களை கொண்டு எடுக்கும் MultiStarer மூவி போன்றது.

கதையில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கவேண்டும் அதேபோல அவர்களது இயல்பும் வெளிப்பட வேண்டும்.

அவ்வாறு சில கதைகள் சிறப்பு இதழ்களில் வந்துள்ளன அவ்வாறு வந்த கதைகளில் ஒன்றை தான் கீழே பார்க்கிறீர்கள்.

வேறு கிரகத்தில் இருந்து நமது பூமியை பிடிக்க வருகிறது ஒரு கூட்டம் முதலில் இங்கு வாழ்பவர்களை பிடித்து ஆராய்ந்து விட்டு அதன் படி நடக்க முயற்சி செய்கின்றனர்.

அவர்களிடமிருந்து பூமியை எப்படி நமது கதாபாத்திரங்கள் காப்பாற்றினார்கள் என்பதை படித்து பாருங்கள்.

இக்கதையில் எனக்கு மிகவும் பிடித்த சிரிப்பை வரவழைக்கும் ஒரு காட்சி சுப்பாண்டியையும் முயல் கீச்சுவையும் பிடித்து மூளை தரிசனி மூலம் சோதனை செய்யும் பொழுது முயலுக்கு சுப்பண்டியை விட மூளை அதிகம் என்று கண்டுபிடிப்பார்கள்.














அடுத்தது மற்றும் ஒரு எதார்த்தமான அப்பாவி பரமு என்ற கிராமத்து கதாபாத்திரம். இக்கதாபாத்திரம் எனக்கு பிடித்ததற்கு மேலும் ஒரு காரணம்
அவர்கள வாழ்வதாக கூறப்படும் தாராபுரம் என்ற கிராமம் பழனிக்கு மிக அருகில் இருக்கும் ஊர் மேலும் அந்த கிராமத்தின் அருகே தான் எனது பெரியம்மா வீடு வேறு இருக்கும். ஆகையால் இக்கதை படிக்கும் பொழுது ஏதோ எங்கள் ஊரை பற்றி படிப்பதை போன்ற ஒரு உணர்வு வரும்.

எப்படி நமது பரமு தபால்காரர் ஆகி காண்டாமிருகத்திற்கு மணி கட்டிய வீரர் ஆகிறார் என்று படித்து பாருங்கள்.








பொறுமையாக படித்தற்கு நன்றி.உங்கள் கருத்துக்களை கீழே உள்ள பெட்டியில் தெரியப்படுத்துங்கள்.

இதற்கு முன் வந்த முதல் மற்றும் இரண்டாவது பூந்தளிர் கதைகளை படிக்க க்ளிக் செய்யவும்.

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .

கிருஷ்ணா வ வெ. 

Tuesday, February 12, 2013

பூந்தளிர் கதைகள் : 1


வணக்கம் நண்பர்களே,

நான் முன் பதிவுகளில் கூறியது போல எனக்கு பிடித்த பூந்தளிர் கதைகளை உங்களுடன் அவ்வபொழுது பகிர்ந்து கொள்ள உள்ளேன்.

இது ஒரு சோதனை முயற்சியே.

என்னுடைய ஆசை நான் பகிர்ந்துகொள்ளும் இக்கதைகளை உங்கள் வீட்டு சிறார்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே.

ஒரு வழியாக ஒரு all in one HP பிரிண்டர் வாங்கிவிட்டேன்.அதில் மூலம் வரும் முதல் பதிவு.

படங்களை சற்றே மேம்படுத்தி உள்ளேன்.புத்தகத்தின் காகிதங்கள் சற்றே பழுப்படைந்து உள்ளதால் படங்களும் இப்படி உள்ளன.

இதனை மேலும் மேம்படுத்த நண்பர்கள் ஆலோசனை வழங்கினால் செயல்படுத்த முயற்சி செய்கிறேன்.

பூந்தளிரின் ஆசிரியராக நமது வாண்டுமாமா இருந்த சமயத்தில் வந்த ஒரு இதழ்.

படக்கதைகள்,சிறுகதைகள்,வேடிக்கை விநோதங்கள் மற்றும் ஒரு சில தொடர்கதைகள் என முற்றிலும் ஒரு கதம்பமாக இந்த இதழை வழங்கி உள்ளார்.

முதல் கதை "உலகின் மகத்தான காட்சி" நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு கதை.

தான் ஆசையாய் வளர்க்கும் எருமை மாடு பூவை வயதானதால் காட்டிற்குள் துரத்தபோகும் தந்தையிடம் இருந்து காப்பாற்ற போராடும் சிறுவன் டுடுவின் கதை.

டுடுவும் அவனது நண்பன் லாசியும் சேர்ந்து அதற்கு நடனம் கற்று தருகின்றனர்.

பின் ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து "உலகின் மகத்தான காட்சி" யை காண்பிக்க போவதாக கூறுகின்றனர்.

மக்கள் வந்ததும் வாத்தியங்கள் முழங்கி பூவை ஆட சொல்கின்றனர்.ஆனால் அது ஆட மறுக்கின்றது.  பின்னர் அனைவரும் பொறுமை இழந்து கிளம்பும் பொழுது அது ஆட அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

அதனை கண்டு குர்பச்சன்சிங் என்பவர் பூவின் வாழ்நாள் முழுவதும் அதன் உணவிற்கான தொகையை தான் ஏற்று கொள்வதாக கூறுகிறார்.













அடுத்த படக்கதை நமது சுட்டிக் குரங்கு கபீஷுனுடயது.வேட்டைக்காரன் தோப்பையாவிடம் மாட்டிக்கொண்ட கிளிகளை எப்படி காப்பாற்றுகிறான் என்பதை படித்து பாருங்கள்.







அடுத்தது வழக்கம் போல தனது உணவிற்காக போராடும் சமந்தகனை ஏமாற்றும் காக்கை காளியின் கதை.

நான் சிறுவனாக இருந்த பொழுது ஒருமுறை எனக்கு மிகவும் காய்ச்சல் அதனால் எனக்கு மிகவும் (கள்ள) பசி எடுத்தது. எனது தாயார் சமைத்துக்கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் நான் பார்வதி சித்திர கதைகளில் வந்த காளியின் கலாட்டா புத்தகத்தை படித்துக்கொண்டு இருந்தேன். அப்பொழுது ஒவ்வொரு கதையிலும் சமந்தகனின் உணவை காளி காபாற்றிகொண்டிருக்க, அவனது பசி எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்தேன். அந்நிகழ்ச்சி நான் எப்பொழுது காளியின் கதை படிக்கும் பொழுதும் எனக்கு நினைவிற்கு வரும்.




பசுவை பற்றிய ஒரு முழு ஆவண படக்கதை.





அடுத்து நமது முட்டாள் சுப்பாண்டியின் கதை.சுப்பாண்டி வெந்நீர் போடும் அழகை பாருங்கள்.




இனி வரும் பூந்தளிர் கதைகள் பதிவுகளில் சார்லி மாமா,துப்பறியும் ரஞ்சன்,மதியூகி மந்திரி இப்படி இன்னும் பலருடைய கதைகளை காண்போம்.

இப்பதிவை பற்றிய உங்கள் கருத்தை பின்னுட்டத்தின் மூலம் கூறுங்கள் நண்பர்களே.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வே வெ .

Thursday, September 6, 2012

காமிக்ஸ் புதையல் XIV - Parvathi Chithira Kathai - Vandumama


வணக்கம் நண்பர்களே,

இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன்.
அனைத்து கதைகளுமே அருமையாக இருக்கும்.
என்னை மிகவும் கவர்ந்த வாண்டுமாமா அவர்களின் கதைகள்.
எதனை முறை படித்தாலும் திகட்டாது.
எனது கருத்தை நீங்கள் அனைவரும் ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறன்.


நான் இந்த முறை ஊரிற்கு சென்று புகைப்படம் எடுத்த போது எனக்கு ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது.
பலே பாலுவும் பாட்டில் பூதமும்,கனவா நிஜமா கழுகு மனிதன் ஜடாயு மற்றும் டயல் 100 ஆகிய புத்தகங்களை காணவில்லை.
எங்கே சென்றது என்றும் தெரியவில்லை.கனத்த இதயத்தோடு மீதம் புத்தகங்களை புகைப்படம் எடுத்து வந்தேன். 

1.பவளத் தீவு 
2.ஓநாய் கோட்டை
3.மூன்று மந்திரவாதிகள்
4.சிலையை தேடி
5.நந்து சுந்து மந்து
6.அறிவின் விலை ஒரு கோடி
7.பலே பாலு
8.சிறுத்தை சிறுவன்
9.பலே பாலுவும் பாட்டில் பூதமும்
10.வீர விஜயன்
11.பூதத் தீவு
12.குஷிவாலி ஹரிஷ்
13.வீராதி வீரன்
14.திகில் தோட்டம்
15.சர்கஸ் சங்கர் 

மற்றும் இடையில் கனவா நிஜமா மற்றும் டயல் 100 வேறு வரும்.
அனைத்துமே வாண்டுமாமாவின் பொக்கிஷங்கள்.

பவளத் தீவு,ஓநாய் கோட்டை,மூன்று மந்திரவாதிகள்,வீர விஜயன்,பூதத் தீவு ஆகிய 5 புத்தகங்களும் மாயாஜாலங்கள் நிறைந்த  ராஜா  ராணி கதைகள்.

சிலையை தேடி,சிறுத்தை சிறுவன்,வீராதி வீரன் மூன்றும் சிறுவர்கள் செய்யும் சாகசக் கதைகள்.என்னை மிகவும் கவர்ந்த கதைகள்.

அறிவின் விலை ஒரு கோடி - கௌசிகன் பெயரில் அவர் எழுதிய சமூகக் கதை.

பலே பாலு,பலே பாலுவும் பாட்டில் பூதமும்,குஷிவாலி ஹரிஷ்,சர்கஸ் சங்கர் இவை அனைத்தும் சிறுவர் செய்யும் குறும்புக் கதைகள்.

இவை தவிர அவர் பூந்தளிரில் எழுதிய பலே பாலுவும் பறக்கும் டிராயரும்,தருமு வளர்த்த தவளை,மல்லன் மாரப்பன் ஆகிய கதைகள் என்னை மிகவும் ஈர்த்தவை.











நான் மிகவும் ரசித்த நந்து சுந்து மந்து நான் முன்பு ஒருமுறை படித்ததற்கு பிறகு படிக்க முடியாமல் போனது.நான் அந்த கதைக்காக மிகவும் ஏங்குகிறேன்.

டயல் 100 அருமையான துப்பறியும் கதைகள் நிறைந்தவை. 

பின் இறுதியில் பூந்தளிரில் வந்த சிறு கதைகளின்  தொகுப்புகளை வெளியிட ஆரம்பித்தனர்.வாண்டுமாமா வின்  புகழை பயன்படுத்தி பாண்டுமாமாவின் கதை வேறு வந்தது.

இவை தவிர சமதுச் சாரு,அழுக்கு  அண்ணாசாமி  போன்ற கதாபாத்திரங்களையும் அவர் அறிமுகபடுதியுள்ளார்.

நண்பர்களே இனி வரும் நாட்களில் இக்கதைகளின் தனி பதிவுகளையும் மற்றும் பூந்தளிர் புத்தகங்களின் தனிபதிவுகளையும் இட இருக்கிறேன்.
என்னுடன் சேர்ந்து உங்களையும் ஒரு கற்பனை உலகத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளேன்.

அடுத்தபதிவில் உங்களை எல்லாம் ஒரு மாய உலகதிக்கு அழைத்து செல்ல போகிறேன் நண்பர்களே.

அவ்வளவு தான் நண்பர்களே.

மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ