லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனும் லயன் காமிக்ஸும்

லண்டனும் லயன் காமிக்ஸும்

Memories (2013) - Malayalam Movie Review

Memories (2013) - Malayalam Movie Review

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

Tuesday, July 31, 2012

காமிக்ஸ் புதையல் XI - Modesty Blaise Collections



வணக்கம் நண்பர்களே,

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு.
நான் முந்தய பதிவில் கூறியது போல இப்பதிவில் என்னிடம் இருக்கும் மாடஸ்டி புத்தகங்களின் தொகுப்பையே அளித்துள்ளேன்.
அதனுடன் எனக்கு மிகவும் பிடித்த ஷெர்லோக் ஹோல்மேஸ்  புத்தகங்களையும் அளித்துள்ளேன்.

மாடஸ்டி புத்தகங்களில் மிகவும் முக்கியமான முதல் மூன்று புத்தகங்கள் என்னிடம் உள்ளன.அதற்க்கு மற்றும் ஒரு சிறப்பு அது லயன் காமிக்ஸில் வந்த முதல் புத்தகம் என்பதும் தான்.

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.என்னிடம் லயன் காமிக்ஸின் முதல் இதழான கத்தி முனையில் மாடஸ்டி மற்றும் முத்து காமிக்ஸின் இரும்புக்கை மாயாவி மற்றும் ராணி காமிக்ஸின் அழகியை தேடி ஆகிய மூன்று புத்தகங்களும் உள்ளன.அவைகளை பற்றிய தனி பதிவுகள் மற்றொரு சமயத்தில்.

மாடஸ்டி பற்றிய அறிமுகம் எதுவும் தேவையில்லை.
எனக்கு வில்லிக்கும் மாடஸ்டி க்கும் இடையில் இருக்கும் காதல் மிகவும் பிடிக்கும்.அது மிக சிறப்பாக காமிக்கப்பட்டிருக்கும் பல தருணங்களில்.

எனக்கு மிகவும் பிடித்தது மாடஸ்டி இன் முதல் மூன்று கதைகள் தான்.மற்றவையும் நன்றாகவே இருக்கும் ஆனால் அவைகள் தான் எனது favourite.










எவ்வளவோ ஷெர்லோக் ஹோல்மேஸ் பற்றிய காமிக்ஸ் புத்தகங்கள் வந்துள்ளன.ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது மினி லயனில் வந்த புத்தகங்களே.அதில் அவரை காமித்திருகிற விதம் மிகவும் நன்றாக இருக்கும்.
அதுவும் அவர் போடும் ஒவ்வொரு வேஷங்களும் அப்பப்பபா அட அட அடா.






எனக்கு அவைகளின் ஆதி மூலம் பற்றி தெரியவில்லை.
மற்றும் எத்தனை புத்தகங்கள் வந்தன என்றும் தெரியவில்லை.
நண்பர்களுக்கு தெரிந்தால் பின்னுட்டம் மூலம் கூறுங்கள்.

அவ்வளவு தான் நண்பர்களே.
இன்னும் ஒரு காமிக்ஸ் பதிவுக்கான புகைப்படங்கள் உள்ளன.

அப்பொழுது மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.
கிருஷ்ணா வ வே.

Friday, July 20, 2012

The DARK KNIGHT RISES - An Epic END




வணக்கம் நண்பர்களே,

இதோ காலை 11.20 மணிக்காட்சி படம் பார்த்து விட்டு வந்து விட்டேன்..

உண்மையிலேயே இது ஒரு epic end  தான்.The Film is spectacular in its own way.

பொதுவாகவே தொடர் பாகங்களாக வரும் திரைப்படங்கள் முந்தைய பாகங்கள் அளவுக்கு இருபதில்லை.ஆனால் இப்படம் இதன் முந்தய பாகமான தி டார்க் knight இற்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை.

நாம் avengers படம் பார்த்து ரசித்தோம் ,அது ஒரு வகையான entertainment .
ஆனால் இந்த திரைப்படம் நோலனுக்கே உரித்தான வகையில் நம்மை entertain செய்கிறது.

படம் ஆரம்பிக்கும் முன்பே மற்றும் ஒரு விருந்து Man  of  Steel திரைபடத்தின் trailer.Superheroes  படங்களை ஒரு fantasy movie களாகவே பார்த்த நமக்கு இது ஒரு வரவேற்க தக்க மாற்றம் என்பேன்.இதுவரை நாம் பார்க்காத சூப்பர் man நாம் பார்கபோகிரோம் எனபதற்கான ஒரு அருமையான முன்னோட்டமாக உள்ளது.

இனி Batman இற்கு வருவோம்.படத்தின் ஆரம்பமே அதிரடியாக உள்ளது.
கண்டிப்பாக பலரும் youtube இல் உள்ள முதல் preview இல்  பார்த்த விமானக்கடத்தல் தான் ஆரம்பம்.

 அட்டகாசமாக உள்ளது.சிறிய விமானத்தை ஒரு பெரிய விமானம் கொண்டு நிர்மூலமாக்கி sceintist கடத்துகிறார்கள்.

படத்தில் வரும் அனைத்து வசனங்களும் அருமையாக உள்ளன.

கதை அனைவரும் தெரிந்ததே கோதம் இப்பொழுது அமைதிப்பூங்காவாக உள்ளது.ஹார்வே டென்ட் இறந்து 8 வருடங்கள் ஆகின்றன.batman பழி ஏற்துக்கொண்டு மறைந்து போகிறார்.கமிசனர் gordan நகரில் உள்ள அனைத்து தீயவர்களையும் சிறையில் அடைத்து விட்டார்.

அப்பொழுது ஒரு புது எதிராளி முளைகிறான் அவன் தான் Bane.

அவனிடம் ஒரு nuclear bomb.நகரையே நிர்மூலமாகுகிறான்.அவனிடம் இருந்து எப்படி தனது உயிரையும் துச்சமாக மதித்து காப்பாற்றுகிறார் என்பதே கதை.

படத்தில் ஆக்சன்,ஹுமர்,சென்டிமென்ட் அனைத்துமே உள்ளது.

நான் அமைதியாக பார்க்க வேண்டும்  என்று தான் போனேன் ஆனால் batman introduction scenirkku வந்த விசில்களில் நானும் மூழ்கி பின் வந்த பல காட்சிகளுக்கு நானும் கூவு கூவென்று  கூவினேன்.தவிக்க முடியவில்லை.

Batman இன் அறிமுக காட்சி.


படத்தின் வில்லன் bane என தெரிந்த உடனே மிகவும் எதிர்பார்கபட்ட bane batman இன் முதுகை உடைக்கும் காட்சி படத்தில் உள்ளது.

Bane batman இன் இடுப்பை உடைக்கும் காட்சி.








ஆனால் படத்தில் வரும் bane பற்றிய கதை காமிக்ஸில் வருவது போலதான் இருக்கிறதா என தெரியவில்லை.நண்பர்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் படம் பார்த்துவிட்டு.

படத்தின் இறுதியில் வரும் திருப்பம் நாம் எதிர்பார்காததாக உள்ளது.
படத்தில் ராபின் பற்றிய துணுக்குகளும் உண்டு.நோலன் இதனை இறுதிப்படம் என்று கூறினாலும் கிளைமாக்ஸ் அவருக்கு வேண்டும் என்றால் தொடர்வது போலவே அமைந்தஊள்ளது.

நாமும் அவர் தொடர வேண்டும் என்றே ஆசைபடுவோம்.

இறுதி சண்டை காட்சி.


படத்தில் அனைவரும் நன்றாகவே நடித்துள்ளனர்.
படத்தின் சண்டை காட்சிகளும் அருமையாக உள்ளன.
இறுதில் catwon மற்றும் batman சேர்ந்து செய்யும் chasing காட்சி நன்றாக உள்ளது.

மொத்தத்தில் அனைவரும் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம்.
படத்தின் சுவாரஸ்யம் பார்க்கும் உங்களுக்கு குறையக்கூடாது என்பதற்காக நான் பல காட்சிகளை விவரிக்க வில்லை.நீங்களாகவே பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த நேரத்தில் கார்த்திக்கின் பதிவை பார்த்தேன் மிகவும் வருத்தமாக இருந்தது.

அடுத்த பதிவாக என்னிடம் உள்ள மாடஸ்டி காமிக்ஸ் தொகுப்பை வெளியிட உள்ளேன்.

அவ்வளவுதான் நண்பர்களே.
மீண்டும் சந்திப்போம்,

கிருஷ்ணா வே வெ .

Tuesday, July 17, 2012

நான் ஈ - ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம்.





வணக்கம் நண்பர்களே,

இப்பதிவில் நான் பார்த்த நான் ஈ திரைப்படம் பற்றிய எனது கருத்தை கூற உள்ளேன்.
படம் வந்து ஹிட்டும் ஆயிருச்சு நிறைய விமர்சனங்களும் வந்தாச்சு.
இருந்தாலும் நல்ல விசயத்தை யார் வேண்டும என்றாலும் எத்தனை  முறை வேண்டும என்றாலும் கூறலாம் என்பதன் அடிபடையில் இந்த பதிவு.

நண்பர் யுவகிருஷ்ணா இப்படத்தின் டைரக்டர் ராஜமௌலி பற்றி விரிவாக கூறியுள்ளார்.
படிக்காத நண்பர்கள் கீழே உள்ள சுட்டியில் படித்துக்கொள்ளவும்.


மற்றும் நண்பர் கார்த்திக் வேறு படம் மிகவும் நன்றாக உள்ளது என்று எனது ஆர்வத்தை கூட்டினார்.
ஒரு வழியாக கடந்த வெள்ளி அன்று இரவு இந்த திரைப்படத்தை பார்த்தேன்.

படம் அருமையாக இருந்தது.ஏன் இதனை ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் என்று கூறுகிறேன் என்றால் நான் படம் பார்த்த போது என்னுடன் அனைத்து வயதை சார்ந்தவர்களும் பார்த்தார்கள் அனைவரும் ரசித்து சிரித்தார்கள்.
எத்தனை படங்கள் இன்றைய கால கட்டத்தில் இப்படி வருகின்றது?
அந்த முறையில் ராஜமௌலிக்கு ஒரு salute.

ஒரு படத்தின் trailer மிகவும் நன்றாக இருக்கும் ஆனால் படம் அந்த அளவிற்கு இருக்காது.
ஆனால் இப்படத்தின் trailer எந்த அளவிர்க்கு மக்களை கவர்ந்ததோ அதே அளவிற்கு படமும் இருந்தது.

கதை நாம் அனைவரும் trailer இல் இருந்து அறிந்ததே.

இரு காதலர்கள்.
காதலியை அடையநினைக்கும் வில்லன் 
அதற்காக இறக்கும் ஹீரோ,
மீண்டும் ஒரு ஈ ஆக வந்து பழி வாங்குவதே கதை.

அனால் படத்தின் screenplay  இல் மனுஷன் புகுந்து விளையாடி இருக்கிறார்,
படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அருமையாக உள்ளன.

படத்தின் ஹீரோ நானி எனக்கு பிடித்தமான ஒருவர்.அவரது அனைத்து படங்களையும் நான் பார்த்துள்ளேன்.
இப்படத்தில் சிறுது நேரமே வந்தாலும் நன்றாக உள்ளார்.
காதல் காட்சிகள் நன்றாக இருந்தது.

படத்தின் ஹீரோயின் சமந்தா சற்றே மெலிந்து காணபடுகிறார்.ஆனாலும் சற்றே பூசினாற்போல விண்ணை தாண்டி வருவாயா வில் வந்தவரையே எனக்கு பிடித்திருகிறது.அவரும் நன்றாகவே நடித்துள்ளார்.

Screenirkku பின்னால் score செய்தவர் ராஜமௌலி என்றல் screenil score செய்தவர் நிச்சயம் வில்லனாக வரும் சுதீப்.அருமையான தேர்ந்த நடிப்பு.அவர் இல்லாத ஒரு ஈயிடம் மாட்டிக்கொண்டது போல அவர் நடிக்கும் காட்சிகள் நன்றாக ரசிக்கும் படி உள்ளன,
அந்த காட்சிகளை என்னுடன் பார்த்துக்கொண்டு இருந்த குழந்தைகள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

படத்தின் மிகப்பெரிய பலம் என நான் நினைப்பது கூடிய மட்டும் லாஜிக் இருபதாக காட்டியது தான்.
ஒரு ஈயினால் என்ன செய்யமுடியுமோ அந்த அளவே செய்து இருபது.
காதிற்கு அருகில் வந்து சத்தம செய்வது.ஒரு ஈயின் பார்வையில் நாம் பார்க்கும் பொது எப்படி தெரியும் என காட்டியது.
நாம் சாதாரணமாக ஒரு ஈயை பார்க்கும் போது அது எப்படி அடிகடி தன முன்னங்கால்களை தூக்கி உரசிக்கொண்டே இருக்குமோ அது போலவே காட்டியது என பல கூறலாம்.
கதாபத்திரங்களின் அமைப்பும் கதைக்கு தேவையானபடி புத்திசாலித்தனமாக அமைத்துள்ளார் டைரக்டர்.

படத்தின் பாடல்கள் சுமாராக இருந்தாலும் பின்னணி இசை நன்றாக  உள்ளது.

படத்தின் இறுதில் வந்தாலும் சந்தானம் தான் தற்போதைய வின்னிங் காமடியன் என நிரூபிக்கிறார்.
மொத்தத்தில் அனைவராலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
இது வரை பார்க்காத நண்பர்கள் தயவுதெய்து குடும்பம் குட்டியுடன்(குழந்தைகளுடன்) சென்று பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.

Friday, July 13, 2012

Billa II பற்றிய எனது கருத்து.



முன்கதை.(எனது கதை):

நான் ஒரு தீவிர அஜித் ரசிகன்.
சூப்பர் ஸ்டார் படமும் தல படமும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும்.


இம்முறை பில்லா ரிலீஸ்.
சரி எப்படியும் செவ்வாய் இரவுதான் புக்கிங் ஓபன் ஆகும் பார்த்து விடலாம் என்று இருந்த எனக்கு ஒரு பெரிய இடி.
ஞாயிறு இரவே அனைத்து தியேட்டர் டிக்கெட்டும் ஓபன் ஆகி விற்று தீர்ந்து விட்டது.

இருக்கும் ஒரே சாய்ஸ் சத்யம் சினிமாஸ்.
சரி புக் பண்ணிவிடலாம் என்று 12 மணிக்கு அலாரம் வைத்து விட்டு செவ்வாய் இரவு தூங்கினேன்.

அலாரம் அடித்து 12 மணிக்கு எழுந்தரித்து லேப்டாப் on செய்து விட்டு சத்யம் வெப்சைட் ஓபன் செய்து உட்காரர்ந்து இருந்தேன்.
1 மணி நேரம் பேஜ் ரெப்ரெஷ் செய்து செய்து காத்திருந்தேன்.
செரியாக ஒரு மணிக்கு பில்லா 2 புக்கிங் ஓபன் ஆனது.
பார்த்ததும் பெரிய இடியே விழுந்தது போல இருந்தது. .ஓபன் செய்யும் போதே அனைத்து டிக்கெட்ஸ் விற்று தீர்ந்து விட்டதாக வே லோட் செய்தனர்.
பக்கம் முழுக்க ஒரே சிவப்பாக இருந்தது.எனக்கு நம்ம கவுண்டர் டயலாக் தான் ஞாபகம் வந்தது.
" இந்த பொலபுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா திரியறீங்க".

வேறு வழியே இல்லாமல் கடைசி சாய்ஸ் ஆக வைத்து இருந்த மாயாஜால் தியேட்டரில் வெள்ளி காலை 8.20 மணி ஷோவிற்கு முதல் ரோவில் 10 டிக்கெட் புக் செய்தேன் ஒரு நண்பர் மூலமாக.நான் எதற்காக இவ்வளவு விவரமாக எழுதுகிறேன் என்றால்.டிக்கெட் கிடைக்க நான் எவ்வளவு கஷ்டப் பட்டேன் என்று தெரிந்து கொள்ள தான்.

இன்று காலை திரைப்படம் ரிலீஸ் ஆனது காலை ஆறுமணிக்கே எளுந்துரிச்சு 7.45 மணிக்கு எல்லாம் நண்பர்கள்  படை சூழ போயாச்சு.


இனி விமர்சனம்.


கண்டிப்பாக ஒரு ரசிகனை முழுமையாய் திருப்தி படுத்தவில்லை என்பதே எனது கருத்து.
ஒரு action படம் எடுக்க நினைத்து அதனை முழுமை படுத்தவில்லை.


கதை நாம் அனைவரும் அறிந்த்தது தான்.
இலங்கையில் இருந்து வரும் அகதி டேவிட் எப்படி உலகம்  முழுவதும்  தேடப்படும் ஒரு கொடூர don Gangster டேவிட் பில்லா ஆகிறான் எனபது தான்.


படத்தின் ஆரம்ப காட்சி அருமையாக உள்ளது.
அஜித்தின்  வயிற்றில்  சிறு கத்தி.அவரை இருவர் முட்டி போட வைத்து பிடித்துள்ளார்கள்.சுற்றிலும் மேலும் பலர்.
ஒரு பஞ்ச் வசனத்தோடு ஆரம்பிகிறது.

"டேய் ஏன் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிசமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுகுனதுடா"
அஜித் சிறு கத்தியை வைத்துக்கொண்டு செய்யும் சண்டை ஒரு Action அட்டகாசம்.


அதனை தொடர்ந்து டைட்டில் கார்டு அவரது இலங்கை சிறு வயது வாழ்கையை புகைப்படங்களாக காட்டுகிறது.
அதுவும் நன்றாகவே உள்ளது.
ராமேஸ்வரம் வரும் அவர் அப்படியே சென்னை கோவா பரோயா என அவரது வளர்ச்சி தொடர்கிறது.
ஒவ்வொரு இடத்திலும் ஒரு வில்லனை போட்டு தள்ளி விட்டு முன்னேறுகிறார்.
இது பில்லா 1 படத்தில் வரும் வசனத்தை நமக்கு நினைவு படுத்தும்.
" நாம வாழனும்னா யார வேணாலும் எப்ப வேணாலும் எப்புடி வேணாலும் கொல்லலாம்" எனபது தான் அது.


இரண்டு  ஹீரோயின்கள்  வந்து போகிறார்கள் பேருக்கு.
இதில் ஆச்சர்யம் என்ன வென்றால் பார்வதிக்கு பாடலே கிடையாது.


3 பாடல்கல் நன்றாக உள்ளன.
மதுரை பொண்ணு - வாலிபர்கள் கண்களுக்கு விருந்து ஹி ஹி ஹி
உனக்குள்ளே மிருகம் - ஒரு பாட்டிலேயே தல எப்படி don ஆகிறார் என்பத்தை நன்றாக காட்டியுள்ளனர். VFX Effect நன்றாக உள்ளது.
Gangster சாங் - நான் பயந்தது போலவே end creditil போட்டு வேஸ்ட் செய்து விட்டனர்.


Action காட்சிகள் அனைத்தும் நன்றாக உள்ளன.ஆனால் ஒரு சில காட்சிகள் இன்னும் சிறப்பாக கொஞ்சம் convincing ஆக எடுத்து இருக்கலாம்.
ஆயுத கடத்தலின் போது முதலில் shot gunnodu ஸ்டைலாக ஆரம்பிக்கும் ஆனால் மொக்கையாக முடிந்துவிடும்
கிளைமாக்ஸ் காட்சியில் கூட இன்னும் கொஞ்சம் convincing ஆக எடுத்து இருக்கலாம்.Helicopter fightum திருப்தியாக இல்லை.


வில்லன்கள் இருவருமே POWERFULAAKA உள்ளனர்.
இந்த வில்லன்தான் விஜயின் துப்பாகியிலும் வில்லன் எனபது கொசுறு செய்தி.
ஆரம்ப காட்சியில் வரும் இளவரசு சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.


கேமரா அருமையாக உள்ளது.
காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் அருமையாக உள்ளது.
வசனங்கள் அனைத்தும் அருமை.சிலசமயம் சற்று போதனைள் போல் இருக்கு feelingayum தவிர்க்க முடியவில்லை.

இறுதில் மீதி உள்ள அனைவரையும் கொல்வது நம்ம ராம் கோபால் வர்மா திரைபடம் போல இருந்தது. 

மொத்ததில் எடுக்க நினைத்ததை முழுமையாக எடுக்காத ஒரு feeling வருகிறது.
கொசுறு செய்தி : என்ன தான் இருந்தாலும் தலக்காக வரும் ஞாயிறு காலை சத்யம் சென்று இரண்டாம் முறையும் பார்க்க போகிறேன்.


அவ்வளவுதான் நண்பர்களே.
கிருஷ்ணா வ வெ.

Thursday, July 12, 2012

காமிக்ஸ் புதையல் X - ஒரு காமிக்ஸ் கதம்பம்



வணக்கம் நண்பர்களே,

இதுவே எனது கடைசி பதிவு.
இப்பதிவில் என்னிடம் இருக்கும் இதர காமிக்ஸ்கள் தொகுப்பை அளித்துள்ளேன்.
அதாவது லயன் குழுமத்தின் மற்றும் ராணி காமிக்ஸ் அல்லாத பிற காமிக்ஸ்.

அவற்றில் கலைபொன்னியில் இருந்து வந்த மலர்மணி,பொன்னி மற்றும் கலைபொன்னி காமிக்ஸ்.ஒரே ஒரு மாலைமதி காமிக்ஸ்.
வாசு காமிக்ஸ்,லீலா காமிக்ஸ் மற்றும் சில உள்ளன.
மற்றும் முல்லை தங்கராசன் அவர்களால் வெளியிடப்பட்ட 3 மாயாவி காமிக்ஸும் உண்டு.

இவை அனைத்துமே காமிக்ஸ் உலகத்திற்கு தன்னால் ஆனா உதவி புரிந்து இருக்கிறது.
இவைகளில் மலர் மணி சற்றே தரமானதாக இருக்கும்.
பொன்னி காமிக்ஸில் ஸ்ரீகாந்த் ஓவியம் வரைந்த காமிக்ஸ்கள் எனக்கு பிடிக்கும்.
எடுத்துக்காட்டாக எனது முதல் பதிவில் கூறியிருக்கும் பிரைட்டன் தீவில் சிலந்தி.  கதையை  கூறலாம்.

இக்காமிச்களில் ஏகப்பட்ட வகையான மாயாவியை பார்க்கலாம்.
மின்னல் மாயாவி,மறையும் மாயாவி,இரும்புக்கை மாயா மாயவன் மற்றும் இரும்புக்கை மாயாவி.

ஆனால் இவை எதுவுமே நமது முத்துவின் மாயாவிக்கு ஈடாகாது.













இப்பதிவின் ஆரம்பத்தில் நான் கூறியது போல இதுவே எனது கடைசி காமிக்ஸ் பதிவு.
காரணம் இதுக்கு மேல பதிவிட என்னிடம் மற்ற காமிக்ஸின் புகைப்படங்கள் இல்லை.
அடுத்த பதிவுகள் இனிமேல் நான் ஊருக்கு சென்று வந்த பிறகு தான்.
அதை தான் நான் அப்படி கூறி இருந்தேன்.

இனிமேல் கொஞ்ச நாளைக்கு நம்ம சௌந்தர்,கார்த்திக்,ஸ்டாலின்,பாலாஜி இவர்களது பதிவுகளை பார்த்து பொழுதை ஊட்ட வேண்டியதுதான்.
அதுவும் நம்ம சௌந்தர் பெரிய trailer வேறு காட்டியுள்ளார்.

இத்துடன் ஒரு சிறு விடுமுறை மீண்டும் சிறுது காலத்திற்கு பிறகு சிந்திப்போம் நண்பர்களே.

கிருஷ்ணா வ வெ .

Saturday, July 7, 2012

காமிக்ஸ் புதையல் IX - காரிகன் & மாண்ட்ரேக்


நண்பர்களே,

இந்த பதிவில் என்னிடம் இருக்கும் காரிகன் மற்றும் மாண்ட்ரேக்  புத்தக தொகுப்புகளை அளித்துள்ளேன்.
இந்த தொகுப்பு லயன் முத்து மற்றும் மேகலா கலந்த ஒரு கதம்பமாக உள்ளது.

காரிகனை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். 
என்னிடம் பல அறிய புத்தகங்கள் உள்ளன.

பயங்கரவதி டாக்டர் செவென்
மிஸ்டர் பயங்கரம்
வைரஸ் x








மற்றும் மேகலாவில் வந்த கதைகள் அனைத்தும் முத்துவில் வந்துள்ளது என நினைக்கிறன்
நண்பர்கள் அதன் பெயர்கள் தெரிந்தால் கூறுங்கள்.

மாண்ட்ரேக் இன் சொற்ப கதைகளே உள்ளன.
அவற்றில் விண்ணில் பறக்கும் சுறா நன்றாக இருக்கும்.



நண்பர்களே ஒரு நாணயப் போராட்டம் கதையின் ஆங்கில மூலத்தின் பெயர்தேரிந்தால் கூறுங்கள் please

அடுத்த பதிவாக மாடஸ்டி மற்றும் ஷெர்லாக் holmes புத்தகங்களின் தொகுப்பை அளிக்க உள்ளேன்.
அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

கிருஷ்ணா வ வெ.