லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனும் லயன் காமிக்ஸும்

லண்டனும் லயன் காமிக்ஸும்

Memories (2013) - Malayalam Movie Review

Memories (2013) - Malayalam Movie Review

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

Tuesday, July 23, 2013

ஸ்பைடர் vs பாட்டில் பூதம் Lion Comics No : 83

வணக்கம் நண்பர்களே,

அலுவலக பணி காரணமாக முன்பு போல இணையத்தில் அதிக நேரம் செலவு செய்ய முடிவதில்லை.

கிடைத்த நேரத்தில் மீண்டும் ஒரு காமிக்ஸ் பதிவு.

இப்பதிவில் எனக்கு மிகவும் பிடித்த லயனின் 83வது இதழாக வந்த பாட்டில் பூதத்தை பற்றி பார்க்க போகிறோம்.

சிறுவயதில் டெக்ஸ் அடுத்து எனக்கு மிகவும் பிடித்தது ஸ்பைடர் தான்.

ஸ்பைடர் கதைகளில் மிகவும் பிடித்தது.

1. பழிவாங்கும் பொம்மை
2. பாட்டில் பூதம்
3. சைத்தான் விஞ்ஞானி 
4. நீதிக்காவலன் ஸ்பைடர் 
5. சதுரங்க வெறியன்
6. தவளை எதிரி 

பின் மற்றவை.

ஸ்பைடரிடம் இருக்கும் வலைதுப்பாக்கியும்  வாயுதுப்பாக்கியும் இல்லை என்று பல நாள் ஏங்கியது உண்டு.

சமீபத்தில் நண்பர் ரமேஷ் ஆங்கிலத்தில் வந்த லயன் ஆங்கில வார இதழ்கள் தரவிறக்கம் செய்ய சுட்டிகள் கொடுத்திருந்தார்.

அதனை தரவிறக்கம் செய்து பார்த்த பொழுது அதில் பல ஸ்பைடர் கதைகள் இருந்தன அவைகள் 

1. Spider vs The Crook from Outer Space (விண்வெளி பிசாசு)
2. Spider vs The Crime Genie (பாட்டில் பூதம்)
3  Spider vs Spider Boy (யார் அந்த மினி ஸ்பைடர்)
4. Spider vs Andriod Emperor (கொலை படை)
5. Spider vs Exterminator (நீதிக்காவலன் ஸ்பைடர்)
6. Spider vs Sinister seven 
7. Spider vs snake

கடைசி இரண்டும் இன்னும் வரவில்லை.

அதனை பார்க்கும் பொழுது நான் தெரிந்து கொண்டது ஸ்பைடர் கதைகள் அனைத்துமே நாம் லயனில் பார்த்ததை விட காதில் பூ சுற்றுதல் மிக அதிகம் என்பதே.

விஜயன் அவர்கள் மிக கவனமாக கதையை சிதைக்கா வண்ணம் எடிட்டிங் செய்துள்ளார்.



நான் ஆங்கிலத்தில் தொடர்களாக வந்ததை ஒரு கதை புத்தகமாக தொகுத்துக்கொண்டு இருக்கிறேன்.

ஸ்பைடர் தவிர அதில்  ஆர்ச்சியும் அதிகமாக இருக்கிறது.

இனி இப்பதிவின் புத்தகத்தின் கதைக்கு செல்லலாம்.

இக்கதை ஸ்பைடர் திருந்தி நீதிக்காவலனாக இருக்கும் பொழுது நிகழ்கிறது.

கதை :

ஒரு நாள் ஸ்பைடர் ஒரு கெட்ட கனவு காண்கிறான்.அதனை கண்டு ஏதோ கெட்டது சம்பவிக்க போகிறது என அறிந்து கொள்கிறான்.

அதே சமயம் சிறைசாலையில் இருக்கும் கர்கோ யென்னும் திருடன் கையில் ஒரு பாட்டில் கிடைகிறது.

அதினுள் ஒரு பூதம் இருக்கிறது.அதனை அவன் விடிவிக்க அந்த பூதம் அவன் எது சொன்னாலும் செய்யும் அவன் அடிமை என்று சொல்கிறது.

அதன் உதவியுடன் அவன் தப்பி செல்கிறான்.

செல்லும் வழியில் ஸ்பைடர் வழிமறித்து பூதத்துடன் சண்டை போடுகிறான்.
ஆனால் அவனை சமாளித்து பூதம் கர்கோவுடன் தப்பி செல்கிறது.







தமிழிற்கும் ஆங்கிலத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பாருங்கள் 




இதுபோல பல பக்கங்கள் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளன.

தப்பி செல்லும் கர்கோ தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பூதத்தின் உதவியுடன் ஒரு ராஜாவின் செல்வத்தை கொள்ளையடிக்க பார்கிறான் ஆனால் அவனை ஸ்பைடர் முறியடிக்கிறான்.

அடுத்து பூதத்தின் உதவியுடன் கர்கோ பெரிய உருவத்தையும் நெருப்பு கக்கும்
சக்தியையும் பெற்றுக்கொண்டு பூதத்தை தன உதவிக்கு வரகூடாது என்று கூறிவிட்டு தனித்து கொள்ளை அடிக்க செல்கிறான்.






ஆனால் அங்கு ஸ்பைடர் மற்றும் அவன் சகாக்களால் முறியடிக்கபடுகிறான்.
தனது பாதத்தை முத்தமிட்டால் தவிர தன்னால் அவனை ஸ்பைடரிடம் இருந்து காப்பாற்ற முடியாது என்று பூதம் சொல்ல கர்கோ கஷ்டப்பட்டு பூதத்தின் பாதத்தை முத்தமிடுகிறான் பின்னர் பூதம் அவனை காப்பாற்றுகிறது.





தனது இருப்பிடம் வந்ததும் மற்ற கூட்டாளிகளால் கேலிக்கு உள்ளாகிறான் கர்கோ. அதனால் அனைவரும் தூங்கியபின் பூதத்தை கொல்ல பார்க்கிறான்.
இதனை ஞான திருஷ்டியின்மூலம் அறியும் ஸ்பைடர் டெலிபதி மூலம் பூதத்தை எச்சரிக்கை செய்து அதனை காப்பாற்றுகிறான்.




தன்னை கொல்ல பார்த்த கர்கோவை போலீசிடம் மாட்டிவிட்டு யாரிடமும் தோற்காத ஸ்பைடரை ஒரு வாழைபழ தோல் வழுக்கி விழ வைத்து மருத்துவமனையில் சேர்த்துவிடுகிறான். (தலைக்கு வந்த சோதனை)



பின்னர் தனது கூட்டத்துடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபடுகிறான். அதனை கேளிவிப்பட்டு மருத்துவமனையில் இருந்து வரும் ஸ்பைடரை தன்னுடன் சேர்ந்துகொள்ள சொல்கிறான் அதற்கு மறுக்கும் ஸ்பைடரை பாவ தேசத்தில் விட்டு விடுகிறான்.






அங்கு இருக்கும் லானா என்ற ராணியால் தான் யார் என்பதை மறந்து அங்கு இருக்கிறான். ஒரு நாள் தொலைகாட்சியில் தனது சகாக்கள் பூதத்திடம் மாட்டிகொண்டு இருப்பதை பார்க்கும் ஸ்பைடர் தன் நினைவுகளை மீட்டு எடுத்து அங்கிருந்து தப்பி சென்று பூதத்தை முறியடித்து மீண்டும் அதனை பாட்டிலில் அடைக்கிறான்.















விரைவில் தமிழ் ஸ்கேன் பக்கங்களை அப்லோட் செய்கிறேன்.

உங்கள் கருத்துக்ககளையும் நினைவலைகளையும் கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இக்கதையின் ஆங்கில தொகுப்பை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வா வெ.


Tuesday, June 18, 2013

கோடை மலர்-87 - ஸ்பெஷல் ஒரு சிறு பார்வை




வணக்கம் நண்பர்களே,

நீண்ட நெடுநாட்களுக்கு பிறகு ஒரு காமிக்ஸ் சார்ந்த பதிவுடன் உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர் ஒருவரின் மூலம் லயன் காமிக்ஸின் கோடை மலர்-87 படிக்க கிடைத்தது.அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே அதனை பற்றிய இந்த பதிவு.

லயன் காமிக்ஸின் 36வது வெளியீடாக ஏப்ரல் மாதம் 87ஆம் வருடம் கோடைமலர் புத்தகம் வந்தது.

வழக்கமான பாக்கெட் சைஸில் குட்டி குண்டு புத்தகமாக வந்தது.

இப்புத்தகத்திற்கு வந்த விளம்பரம்.



இப்புத்தகத்தில் மொத்தம் ஆறு கதைகள்.

1. ஸ்பைடரின் சிவப்பு தளபதி 
2. மாடஸ்டி கார்வினின் கார்வினின் யாத்திரைகள் 
3. லாரன்ஸ் டேவிட்டின் எலிகள் ஜாக்கிரதை 
4. டெக்ஸ் வில்லரின் பழிக்குப் பழி 
5. இரட்டை வேட்டையரின் திருடனுக்கு திருடன் 
6. ஆர்சியின் வெனிஸ் நகரில் ஆர்ச்சி 

புத்தகம் பைண்டிங் செய்யப்பட்டுள்ளதால் புகைபடங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

1. ஸ்பைடரின் சிவப்பு தளபதி :


கதை கொஞ்சம் மொக்கையாகத்தான் இருக்கிறது. இப்பொழுது படிப்பதனால் அப்படி தெரிகிறதோ என்று தெரியவில்லை.

எனக்கு மிகவும் பிடித்த ஸ்பைடர் கதைகள் 
1. சைத்தான் விஞ்ஞானி
2. பாட்டில் பூதம் 
3. நீதிக் காவலன் ஸ்பைடர் 

மற்ற கதைகள் அனைத்தும் ஓகே ராகம் தான்.

சிவப்பு தளபதி என்ற ஒரு அயோக்கியன் ஒரு பெரிய விமானத்தில் வந்து நியூ யார்க் நகர மக்களிடம் இருந்து மிரட்டி பணம் கேட்கிறான்.

தனக்கு போட்டியாக உருவாகியுள்ள எதிரியை கண்டு கொதித்து எழும் ஸ்பைடர் அவனை தனது ஹெலிகாரில் சென்று முறியடிக்கிறார்.




2. மாடஸ்டி கார்வினின் கார்வினின் யாத்திரைகள் 

ஒரு சிறிய சாகசம் இருந்தும் பரவாயில்லை.



தனது தோழி ரீனாவுடன் விடுமுறையை கழிக்க ஒரு தீவிற்கு வருகிறார் கார்வின். அங்கு அவர்கள் இருவரையும் ஒரு விஞ்ஞான தம்பதியினர் பிடித்து சென்று மயக்க ஊசி செலுத்தி பிரமாண்ட பொருட்கள் இருக்கும் ஒரு அறையில் அடைத்து அவர்களுக்கு தங்களது ஒருவம் தான் சிறிதாகிவிட்டது என்ற பிரேமையை உருவாகுகின்றனர்.

டாரண்டின் வேண்டுகோளிற்கு இணங்கி அந்த கூட்டத்தினரை பிடிக்க வரும் மாடஸ்டி எதிர்பாராவிதமாக கார்வினையும் ரீனாவையும் கண்டுபிடித்து காப்பாற்றுகிறார்.








3.  லாரன்ஸ் டேவிட்டின் எலிகள் ஜாக்கிரதை 

இதுவும் ஒரு மிகச் சிறிய சாகசம்.



ஒரு வித ஒலியை ஒலிக்க செய்து நகரில் இருக்கும் எலிகளை வெறிகொள்ள செய்து மக்களை கடிக்க செய்கிறான் ஒரு ஆகொதீகா வை சேர்ந்த ஒரு தீவிரவாதி.

அவனை முறியடித்து அந்த எலிகள் மூலமே அவனை கொல்கின்றனர் நமது நாயகர்கள்.


4. டெக்ஸ் வில்லரின் பழிக்குப் பழி


வேறு ஒரு எதிரியை விரட்டி வரும் வில்லரும் கார்சனும் சில்வர் பெல் நகரை அடைகின்றனர்.

அங்கு எதார்த்தமாக அந்த நகரின் பெரும் பணக்காரர் பேக்கரின் மகன் ஆல்பர்ட் பணத்திமிரில் தனது பிறந்த நாளை கொண்டாட  மதுபான கடையில் கண்டபடி சுட்டுகொண்டிருப்பதை காண்கின்றனர்.

அது மட்டும் இல்லாமல் ஒரு குண்டு நமது கார்சனின் காதில்  உரசி செல்கின்றது .பொங்கி எழும் டெக்ஸ் அவனை நையப்புடைத்து பாடம் புகட்டுகிறார்.





கோவப்பட்டு செல்லும் ஆல்பர்ட் தனது பண்ணையை  சேர்ந்த நான்கு பேரை அழைத்து வருகிறான்.அவர்களையும் சுட்டு வீழ்த்துகின்றனர்




பின் அந்த விஷயத்தை தனது தந்தையிடம் கூறுகிறான்.அதற்கு அவன் தந்தை ரூபி ஸ்காட் என்ற கொலைகாரனை அனுப்புகின்றார்.


முதலில் அவனால் நயவஞ்சகமாக குண்டு காயம் அடையும் டெக்ஸ் மீண்டும் வந்து இடது கையை பயன் படுத்தி அவனை சுட்டு வீழ்த்தி விடுகிறார்.




ரூபி இறந்ததற்கு காரணமான ஆல்பர்ட்டை அவனது செவிந்திய மனைவி சுட்டு வீழ்த்திவிடுகிறாள். 



தனது மகன் இறந்ததை கேட்ட பேக்கர் புத்தி பேதலித்து பண்ணைக்கு தீயிட்டு அதில் தானும் வெந்து இறந்துவிடுகிறார்.


5. இரட்டை வேட்டையரின் திருடனுக்கு திருடன் 

சிறைசாலையில் இருந்து தப்பிக்க பார்க்கும் ப்ரீவ்ஸ்டர் என்ற திருடனின் சதி வேலையே முறியடிக்கின்றனர் SI 6 உளவுபிரிவை சேர்ந்த ஜார்ஜும் டிரெக்கும்.


6. ஆர்சியின் வெனிஸ் நகரில் ஆர்ச்சி

வெனிஸ் நகருக்கு சுற்றுலா வரும் நமது ஆர்ச்சி குழுவினர் அப்படியே அங்கு இருக்கும் ஒரு பாங்கின் தங்கம் பட்டுவாடா செய்யும் வேலையே செய்கின்றனர்.

அப்பொழுது சீதோசன நிலையை எப்படிவேண்டும் என்றாலும் மாற்றும் ஒரு கருவி கொண்டு அந்த நகரின் ஆறு முழுவதையும் ஐஸ் கட்டியாகி ஆர்சியை உறைய செய்து தங்கத்தை கடத்தி சென்று விடுகின்றனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து பல சாகசங்கள் செய்து நமது குழுமினர் தங்கத்தை மீட்கின்றனர்.



ஆர்ச்சி கதைக்கு மேலும் சில புகைப்படங்களை நாளை மாலை இப்பதிவுடன் சேர்கிறேன்.

இப்பதிவு இப்புத்தகத்தை படிக்காத நண்பர்களுக்கு ஒரு சிறு கதை சுருக்கமாகவும் படித்த நண்பர்களுக்கு மீண்டும் நினைவு படுத்தி பார்க்க ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம். 

கிருஷ்ணா வ வெ