லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனில் காமிக்ஸ் மார்கெட்

லண்டனும் லயன் காமிக்ஸும்

லண்டனும் லயன் காமிக்ஸும்

Memories (2013) - Malayalam Movie Review

Memories (2013) - Malayalam Movie Review

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

காமிக்ஸ் புதையல் XX - Rani Comics Collection

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

பூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு

Tuesday, September 11, 2012

Mugamoodi - A Super Hero??????



வணக்கம் நண்பர்களே,

வேறு வழியே இல்லாமல் முகமூடி திரைப்படம் நானும் பார்த்துவிட்டேன்.
இருந்தாலும் மிகவும் நான் எதிர்பார்த்த படம் அதுவும் ஒரு காமிக்ஸ் ரசிகர் எடுத்த படம் இவ்வளவு மொக்கையாக ஆனது வருத்தமே.

கதை.

ஆரம்பம் ஒரு படு மொக்கை.
ஒரு வீட்டில் கொள்ளை நடக்கிறது.வில்லன் எலும்புக்கூடு முகமூடி அணிந்து வீட்டில் இருக்கும் ஒரு வயதான பாட்டியை ஓடி வந்து சுத்தியில் அடித்து கொள்கிறார்.
ஒரு பாட்டியை எதுக்குப இப்படி கொல்லனும் விட்டுருந்தா அடுத்தநாள் அதுவே செத்து போயிருக்கும்.
அப்படி ஒரு பயங்கர வில்லனாம்.

இவரை பிடிக்க சிறப்பு அதிகாரி நாசர் வருகிறார்.(பாவம்)

ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஹீரோ ஜீவா.அன்பான அம்மா,எப்பொழுதும் திட்டும் அப்பா,
வீட்டின் மாடியில் அவரது தாத்தா வழக்கம் போல அவருக்கு வழிகாட்டி.
மற்றும் ஒரு தாத்தா மாடியில் இருக்கிறார் அவர் துணிகள் மூலம் பொம்மைகள் செய்பவர்.
இப்பொழுதே தெரிந்து கொள்ளலாம் இவர் தான் நம்ம முகமூடிக்கு உடை தெய்த்து தரபோகிறார்.

நமது ஹீரோ ஒரு குங்க்பூ பிரியராம்.
அவரது ஆசிரியர் செல்வா.அவர் எல்லாரிடமும் காசு வாங்காமல் குங்க்பூ சொல்லி தருவாராம்.
அதுனால அவர் பரம ஏழையாம்.ஒரு பாடாவதி வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியலேன்னு வீடு ஓனர் வேற மிரடுராரம்.

அப்பா இப்பவே முடியல பேசாம அப்பொழுதே எழுந்து வந்திருக்க வேண்டும் விதி என்ன செய்வது 500 செலவு செய்தாகிவிட்டது முழுவதும் பார்த்துவிட்டு தான் வந்தேன்.
  
நம்ம ஏழை ஆசிரியருக்கு ஆள்  தெரடுகிறாராம்  எப்படி ஒரு மீன் மார்கெட் பொய் அங்க மீன் விகிரவங்க கூட சண்ட போட்டு அவங்கள 1000 கொடுத்து கத்துக்க சொல்கிறார்.
அப்ப நம்ம ஹீரோயின் intro வேற.

வழக்கம் போல நம்ம ஹீரோ விற்கு  ஹீரோயின்  மேல காதல் வர.
அவரை கவுக்க முகமூடி அணிந்து சென்று இதய பலூன் விடுகிறாராம்.
இதனை பார்த்த உடனே நம்ம ஹீரோயின் காதல் வய படுகிறார்.

இடை பட்ட சமயத்தில் நம்ம ஹீரோ வில்லன் களின் மற்றொரு கொள்ளையின் நடுவில் மாட்டிக்கொண்டு வில்லன்களில்  ஒருவரை போலீசிடம் மாட்டிவிடுகிறார்.

ஆகையால் நம்ம வில்லன் நம்ம ஹீரோவை ஒரு கொலை கேசில் மாட்டிவிட்டு ஒரு குற்றவாளி ஆக்குகிறான்.
இதில் இருந்து நம்ம ஹீரோ தப்பித்து வில்லனை கொன்று நம்ம ஹீரோயின் காதலை எப்படி அடைகிறார் என்பதே மீதிகதை.

இடையில் ஒரு பிளாஷ் பாக் வேற நம்ம செல்வாவும் வில்லன் நரேனும் ஒரே ஆசிரியரிடம் குங்க்பூ கற்றுக்கொண்டார்கலாம்.

இறுதிகாட்சியில் நம்ம ஹீரோ சாய்க்கும் வில்லன்கள் எண்ணிகையை விட அவரது ஷெர்லோக் தாத்தா அடித்துபோடும் ஆட்கள் அதிகம்.(என்ன கொடுமை சார் இது)   

பாடல்கள் எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை.
நம்ம மிஸ்கினிடம் இருந்து இப்படி ஒரு திரைப்படம் எதிர்பார்கவில்லை.

எனது எண்ணங்கள்:
ஒரு சூப்பர் ஹீரோ படம் என்றால் ஒரு அழுத்தமான வில்லன் வேண்டும்.
ஆனால் இங்கு சாதாரண நகை கொள்ளையடிக்கும் வில்லன்.
அதுவும் அவரால் வயதானவர்கள் மட்டுமே கொல்லபடுகிறார்கள்.
இது ஒரு மிக பெரிய மைனஸ்.

காதல் காட்சிகள் எதுவுமே அழுத்தமாக இல்லை.
அவருக்கு ஏன் முகமூடி மேல் காதல் வருகிறது என்பதற்கு ஒரு அழுத்தமான காரணம் இல்லை.

இறுதியில் நம்ம ஹீரோ முகமூடி அணிவதற்கு நல்ல காரணம் இல்லை.
சும்மா ஹீரோயினிடம் முகம் காட்டக்கூடாது என்றால் அவரை வெளிபடுதிக்கொள்ளாமலே வேறு ஏதாவது செய்திருக்கலாம்.

சண்டை காட்சிகள் சில நன்றாக இருந்தாலும் அவை வீணாக்க பட்டிருகின்றன.

நான் எதிர்பார்க்கும் மாற்றங்கள்:

ஹீரோ தனது குங்க்பூ திறமையை வெளிபடுத்த ஒரு நல்ல அறிமுக காட்சி வைத்திருக்கலாம்.
ஒரு மொக்கையான மீன் மார்கெட் சண்டைக்கு பதில்,அவரது நல்ல மனதை காண்பிக்க எதாவது ஒரு கடத்தல் அல்லது ஒரு விபத்து அதில் இருந்து அவர் காப்பாற்றுகிறார்.
(க்ரிஷ் படத்தில் வரும் சர்கஸ் தீ விபத்து போல)

அடுத்து நம்ம வில்லன் சாதாரண நகை கொள்ளையனாக இல்லாமல் வேறு பெரிதாக ஏதாவது வைத்திருக்கலாம்.
பல தொடர்பே இல்லாத பல குற்றங்களை இறுதில் ஒன்றாக்கி ஒரு suspense வைத்து வேறு ஏதாவது பெரிய காரணம் சொல்லி இருக்கலாம்.

ஹீரோ ஹீரோயின் காதலை இன்னும் சற்று நல்ல காட்சி அமைப்புடன் கூறி இருக்கலாம்.

பார்க்கலாம் இந்த மாற்றங்களை தனது இரண்டாம் பாகத்தில் கொண்டு வருவாரா என்று.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.

Thursday, September 6, 2012

காமிக்ஸ் புதையல் XIV - Parvathi Chithira Kathai - Vandumama


வணக்கம் நண்பர்களே,

இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன்.
அனைத்து கதைகளுமே அருமையாக இருக்கும்.
என்னை மிகவும் கவர்ந்த வாண்டுமாமா அவர்களின் கதைகள்.
எதனை முறை படித்தாலும் திகட்டாது.
எனது கருத்தை நீங்கள் அனைவரும் ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறன்.


நான் இந்த முறை ஊரிற்கு சென்று புகைப்படம் எடுத்த போது எனக்கு ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது.
பலே பாலுவும் பாட்டில் பூதமும்,கனவா நிஜமா கழுகு மனிதன் ஜடாயு மற்றும் டயல் 100 ஆகிய புத்தகங்களை காணவில்லை.
எங்கே சென்றது என்றும் தெரியவில்லை.கனத்த இதயத்தோடு மீதம் புத்தகங்களை புகைப்படம் எடுத்து வந்தேன். 

1.பவளத் தீவு 
2.ஓநாய் கோட்டை
3.மூன்று மந்திரவாதிகள்
4.சிலையை தேடி
5.நந்து சுந்து மந்து
6.அறிவின் விலை ஒரு கோடி
7.பலே பாலு
8.சிறுத்தை சிறுவன்
9.பலே பாலுவும் பாட்டில் பூதமும்
10.வீர விஜயன்
11.பூதத் தீவு
12.குஷிவாலி ஹரிஷ்
13.வீராதி வீரன்
14.திகில் தோட்டம்
15.சர்கஸ் சங்கர் 

மற்றும் இடையில் கனவா நிஜமா மற்றும் டயல் 100 வேறு வரும்.
அனைத்துமே வாண்டுமாமாவின் பொக்கிஷங்கள்.

பவளத் தீவு,ஓநாய் கோட்டை,மூன்று மந்திரவாதிகள்,வீர விஜயன்,பூதத் தீவு ஆகிய 5 புத்தகங்களும் மாயாஜாலங்கள் நிறைந்த  ராஜா  ராணி கதைகள்.

சிலையை தேடி,சிறுத்தை சிறுவன்,வீராதி வீரன் மூன்றும் சிறுவர்கள் செய்யும் சாகசக் கதைகள்.என்னை மிகவும் கவர்ந்த கதைகள்.

அறிவின் விலை ஒரு கோடி - கௌசிகன் பெயரில் அவர் எழுதிய சமூகக் கதை.

பலே பாலு,பலே பாலுவும் பாட்டில் பூதமும்,குஷிவாலி ஹரிஷ்,சர்கஸ் சங்கர் இவை அனைத்தும் சிறுவர் செய்யும் குறும்புக் கதைகள்.

இவை தவிர அவர் பூந்தளிரில் எழுதிய பலே பாலுவும் பறக்கும் டிராயரும்,தருமு வளர்த்த தவளை,மல்லன் மாரப்பன் ஆகிய கதைகள் என்னை மிகவும் ஈர்த்தவை.











நான் மிகவும் ரசித்த நந்து சுந்து மந்து நான் முன்பு ஒருமுறை படித்ததற்கு பிறகு படிக்க முடியாமல் போனது.நான் அந்த கதைக்காக மிகவும் ஏங்குகிறேன்.

டயல் 100 அருமையான துப்பறியும் கதைகள் நிறைந்தவை. 

பின் இறுதியில் பூந்தளிரில் வந்த சிறு கதைகளின்  தொகுப்புகளை வெளியிட ஆரம்பித்தனர்.வாண்டுமாமா வின்  புகழை பயன்படுத்தி பாண்டுமாமாவின் கதை வேறு வந்தது.

இவை தவிர சமதுச் சாரு,அழுக்கு  அண்ணாசாமி  போன்ற கதாபாத்திரங்களையும் அவர் அறிமுகபடுதியுள்ளார்.

நண்பர்களே இனி வரும் நாட்களில் இக்கதைகளின் தனி பதிவுகளையும் மற்றும் பூந்தளிர் புத்தகங்களின் தனிபதிவுகளையும் இட இருக்கிறேன்.
என்னுடன் சேர்ந்து உங்களையும் ஒரு கற்பனை உலகத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளேன்.

அடுத்தபதிவில் உங்களை எல்லாம் ஒரு மாய உலகதிக்கு அழைத்து செல்ல போகிறேன் நண்பர்களே.

அவ்வளவு தான் நண்பர்களே.

மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ

Tuesday, September 4, 2012

காமிக்ஸ் புதையல் XIII - Indrajaal Comics Collection

வணக்கம் நண்பர்களே,

ஒரு வழியாக ஊருக்கு சென்று வந்து விட்டேன்.
எனது தங்கையின் கல்யாணம் இருந்ததால் நேர குறைவு காரணமாக ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே கொண்டு வந்துள்ளேன்.

எனது முதல் come back பதிவு இந்த்ரஜால் காமிக்ஸ் தொகுப்பு.
என்னிடம் மொத்தம் 11 புத்தகங்களே உள்ளன.

கதைகள் எனக்கு நினைவு இல்லை.
வேதளரின் பேய் குலம் மட்டும் நினைவு இருக்கிறது.
ஒரு போலி வேதளரின் பிடியில் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.
இதில் அவரது குதிரையின் பெயர் கேசரி.

ஆனால் படங்கள் கலரில் அருமையாக இருக்கும்.








அடக்குவாரற மந்தையும் நன்றாக இருக்கும்.
இந்த புத்தகங்களை பற்றி என்னுடைய பொதுவான கருத்து இதன் மொழிபெயர்ப்பின் தரம் மிக குறைவே.


இக்கதைகளை பற்றி உங்களது கருத்தையும் கூறுங்கள் நண்பரே.

அவ்வளவு தான் நண்பர்களே.
மீண்டும் விரைவில் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.


Saturday, August 25, 2012

Director Myskin's Mayavi..


வணக்கம் நண்பர்களே,

நான் இன்டர்நெட்டில் உலாவிய போது என் கண்ணில் சிக்கியது.
இதனை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த குறும் பதிவு.
இந்த புகைப்படம் யாரை போல் உள்ளது என்பதை நான் கூற தேவையில்லை.
மிஸ்கின் மீண்டும் ஒருமுறை தான் வேதாளரின் ரசிகர் என்பதை நிருபித்துள்ளார்.
மிஸ்கின் அனைத்து பேட்டிகளிலும் கவனமாக எதிர்பார்ப்பு இல்லாமல் வந்து பாருங்கள் என்று கூறுகிறார்.
படம் வெற்றி பெற்றால் நமது காமிக்ஸும் வெற்றி பெற்றதாகவே கூறலாம்.




புகைப்படம் விகடன் சினிமாவில் இருந்து எடுத்தது.
அவர்களுக்கு நன்றி.

படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.


Thursday, August 16, 2012

காமிக்ஸ் புதையல் XII

வணக்கம் நண்பர்களே,

மீண்டும் ஒரு காமிக்ஸ் பதிவு.
என்னிடம் இருக்கும் மீதமுள்ள லயன் மற்றும் முத்து காமிக்ஸ்களின் அட்டை படங்கள்.


இதில் இரத்தப்படலம் பெரிய புத்தகங்கள்,ஜேம்ஸ் பான்ட் 007 காமிக்ஸ்கள் மற்றும் பல புத்தகங்கள் உள்ளன. 


இதில் ஹாலிவூடில் ஜாலி அருமையான நகைச்சுவை கதை.
ஒரு வீரனின் கதை சிறப்பான ராணுவ கதை.
புயல் படலம் மற்றும் ரவுடி ராஜ்ஜியம் இரண்டும் ரெக்ஸ் கதை.
ரோஜரின் நடக்கும் சிலை மர்மம்.
Wild West  மின்னல் ஜெர்ரி.
CID சார்லசின் ஒரு விபரீத விதவை.

அனைத்துமே நல்ல கதைகள்.
முதல் மோதலாக பெரிய சைசில்(நாடோடி ரெமி தவிர்த்து)  இரத்தப்படலம் வந்த பொது மிகவும் சந்தோசமாக இருந்தது.
ஹாலிவூடில் ஜாலி அந்த செவிந்திய தலைவர் படம் எடுக்கும் விதம் படிக்கும் போது சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும்.இறுதில் அவர் எடுத்த சோகபடம்  பெரிய சிரிப்பு படமாக ஹிட் அடித்துவிடும்.

ஜேம்ஸ் பான்ட் பறக்கும் பாவை படலம் தவிர மற்றகதைகள் அனைத்தும் ஏற்கனவே ராணி காமிக்ஸில் வந்ததாக நினைவு.(நன்றி-விஸ்வா.)
 காசினோ ராயல் திரைப்படத்தின் காமிக்ஸ் வடிவம் சூதாடும் சுறாவளி.












அவ்வளவுதான் நண்பர்களே.

மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.

Friday, August 3, 2012

Sherlock - A Study in Pink (TV Series)





வணக்கம் நண்பர்களே,

சமீபத்தில் நான் Flipkart பார்த்துக்கொண்டு இருந்த போது அதில் வெளியாகி உள்ள Sherlock  தொலைக்காட்சி தொடரின் DVD பற்றி பார்த்தேன்.அத்தொடர் பற்றி நான் ஏற்கனவே எங்கோ கேள்வி பட்டு இருந்தேன். நன்றாக இருக்கும் என படித்ததாக நினைவு.

மீண்டும் அதனை பற்றி wiki இல்  பார்த்தேன்.
அத்தொடர் இதுவரை இரண்டு season BBC Entertainment இல் ஒளிபரப்பாகியது தெரிந்தது.ஒவ்வொரு season இற்கும் மூன்று அத்தியாயங்கள் வந்துள்ளன.
மற்றும் அத்தொடரின் முதல் அத்தியாயம் பல அவர்டுகளும் வாங்கியுள்ளது.

எனக்கு அதன் மேல் ஆர்வம் வந்தது.பின் torrentil அவை அனைத்தையும் டவுன்லோட் செய்தேன்.அதில் முதல் அத்தியாயம் மட்டும் பார்த்தேன்.அதனை பற்றியதுதான் இந்த பதிவு.

முதல் அத்தியாயம் - A Study in Pink 

ஷெர்லோக் ஹோல்மேஸ் ஆக Benedict Cumberbatch மற்றும் வாட்சனாக Martin Freeman உம நடித்துள்ளனர்.நல்ல தேர்வு.இருவரும் பாத்திரத்திற்கு நன்கு பொருந்துகின்றனர்.



இனி கதை,

வாட்சன் முன்னால் இராணுவ டாக்டர்.காயத்தினால் ஓய்வு பெற்று உள்ளார்.பணபற்றாகுறைஇனால் யாருடனாவது சேர்ந்து வசிக்க முயற்சி செய்து கொண்டுள்ளார்.

இதற்கிடையில் 3 சம்பவங்களை நாம் பார்க்கிறோம்.
ஒவ்வொன்றிலும் ஒரு நபர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வதை பார்க்கிறோம்.
போலீஸ் ஆபிசர் lestrange பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கிறார்.சம்பவங்கள் அனைத்திற்கும் தொடர்பு இருக்கும் என்றும் அதனை போலிஸ் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டு இருபதாக கூறுகிறார். 

அடுத்து வாட்சன் ஒரு பூங்காவில் நடந்து செல்கிறார்.அப்பொழுது அவரது பழைய நண்பரே காண்கிறார்.அவர் மூலம் மற்றொருவரும் வீட்டை பகிர்ந்துகொள்ள ஆள் தேடுகிறார் என அறிந்து அவரை காண நண்பருடன் செல்கிறார்.
அவர் தான் நமது கதாநாயகன் ஷெர்லோக்.

ஒரு லாபில் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்.அங்கு வாட்சன் தனது நண்பருடன் நுழைந்ததை பார்த்தவுடன்,
அவர் வீட்டை பகிர்ந்துகொள்ள வந்ததில் இருந்து அவர் இராணுவத்தில் இருந்தது அவரது சகொதடுடன் போக மறுத்தது அவர் சகோதரர் அவரது மனைவியை பிரிந்து வாழ்வது அவர் ஒரு குடிகாரர் என அனைத்தையும் புட்டு புட்டு வைக்கிறார்.பின் அவர் எப்படி கண்டுபிடித்தார் என விலகுகிறார்.இது நாம் ஷெர்லோக் ஹோல்மேஸ் திரைபடத்தில் பார்த்தது போல இருக்கும்.

பின் இருவரும் 221B baaker வீதியில் இருக்கும் வீடிற்கு வருகிறார்கள்.அங்கு MRS .ஹட்சன் அறிமுகம். 
அங்கு அவரை காண இன்ஸ்பெக்டர் lestrange வருகிறார்.அவர் வந்ததை கண்டு நான்காவதாக ஒரு தற்கொலை நடந்து இருப்பதை அறிகிறார். 

அந்த இடத்திற்கு சென்று பிணத்தை ஆராய்கிறார்.அதன் மூலம் அவர் கொண்டு வந்த பெட்டி காணாத்தை கண்டுபிடிக்கிறார்.தரையில் நகம் கொண்டு இறந்த பெண் RACHE என எழுதி உள்ளதை பார்க்கிறார்.சில ஆராய்ச்சிக்கு பிறகு அது அவரது பிறக்காத பெண் RACHEL  என அறிகிறார். சில தடயங்களின் மூலம் இதுவரை நடந்தது அனைத்தும் ஒரு தொடர் கொலை என கூறுகிறார்.

பின் அவரது தொலை பேசி தொலைந்து போயுள்ளதை கண்டுபிடிக்கிறார்.அதன் மூலம் கொலையாளியின் இருப்பிடத்தை அறிய முயல்கிறார்.ஆச்சர்யம் அவன் அவரது வீட்டில் உள்ளதாக காண்பிக்கிறது.ஒரு டாக்சி டிரைவர் 
அவர் வீட்டிற்குள் அந்த கைபெசியுடன் வருவதை காண்கிறோம்.

பின் இறுதில் ஒரு வார்த்தைஜால கிளைமாக்ஸ்.என்னால் அணைத்து வசனங்களையும் கூற முடியவில்லை அந்நாள் நண்பர்கள் பார்த்தால் நன்றாக இருக்கும்.

இனி கருத்து,

படம் நன்றாகவே உள்ளது.அதுவும் வசனங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.
ஆனால் ஹீரோ மிக வேகமாக பேசுகிறார்.subtitle இருந்தும் தொடர்வது கஷ்டமாகவே உள்ளது.அது ஒரு குறை தான்.
இறுதில் அவரது பரம எதிரியான ஜான் மோரியாரிட்டி பற்றி வருகிறது.
இக்கதை ஒரு ஆரம்பம் தான்.எப்படி ஷெர்லோக் கும் வாட்சனும் எப்படி நல்ல பார்ட்னர் களாக மாறுகிறார்கள் என்பதை அழகாக கூறி உள்ளார்கள். கண்டிப்பாக அனைத்து ஷெர்லோக் ரசிகர்களுக்கும் பிடிக்கும்.
கண்டிப்பாக பார்க்க முயற்சி செய்யுங்கள் நண்பர்களே.
பார்த்துவிட்டோ அல்லது பார்திருந்தாலோ உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.     
இத்தொடரின் மூன்றாவது பாகம் தயாராகி கொண்டு இருக்கிறது.
இதனை பற்றி மேலும் அறிய கீழ்க்கண்ட லிங்க் பாருங்கள்.


அவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.